உண்மையை சொன்னா விஜய் ரசிகர்கள் எனக்கும் ஹேஷ்டேக் ஆரம்பிப்பீங்களோ?: கஸ்தூரி
சென்னை: மெர்சல் படத்தில் வரும் ஆளப்போறான் தமிழன் பாடலை கேட்ட நடிகை கஸ்தூரி ட்விட்டரில் கருத்து தெரிவித்துள்ளார்.
அட்லீ இயக்கத்தில் விஜய் நடித்துள்ள மெர்சல் படத்தில் வரும் ஆளப் போறான் தமிழன் பாடல் நேற்று வெளியிடப்பட்டது. ஏ.ஆர். ரஹ்மான் இசையில் வெளியான பாடல் அருமை என்று தளபதி ரசிகர்கள் தெரிவித்துள்ளனர்.
இந்நிலையில் ஒருவர் அந்த பாடல் எப்படி உள்ளது என்று நடிகை கஸ்தூரியிடம் ட்விட்டரில் கேட்க அவரும் பதில் அளித்துள்ளார்.
மெர்சல்
மெர்சல் பாடலை கேட்டேன். உண்மையை சொன்னா விஜய் ரசிகர்கள் எனக்கும் ஹேஷ்டேக் ஆரம்பிப்பீங்களோ? ஏஆர்ஆர், தளபதியிடம் இருந்து நிறைய எதிர்பார்த்தேன் என்று ட்வீட்டியுள்ளார் கஸ்தூரி.
சுறா
சுறா இப்போ தான் ஒருத்தனை முழுங்கிருச்சு. அடுத்து மெர்சலா ??? 😕😕😕 என ஒருவர் கஸ்தூரியின் ட்வீட்டை பார்த்து கமெண்ட் போட்டுள்ளார்.
ஒரு பாடல்
இது வெறும் ஒரு பாடல் இன்னும் கேட்க இன்னும் நிறைய இருக்கு மேடம். ஆனால் உங்களின் கருத்துக்கு ஓகே என விஜய் ரசிகர் பதில் அளித்துள்ளார்.

விஜய் ரசிகர்கள்
விஜய்யை பற்றியோ, அவரது படம், பாடல்கள் பற்றியோ நல்லா இல்லை என்று விமர்சனம் செய்தால் அவரின் ரசிகர்கள் ட்விட்டரில் ஹேஷ்டேக் போட்டு திட்டுவதை தான் கஸ்தூரி அப்படி கூறியுள்ளார்.


Click it and Unblock the Notifications











