Don't Miss!
- News போலி பத்திரம்.. ஆன்லைனிலேயே பத்திர மோசடியை கண்டுபிடிக்கலாமா? இதை கவனியுங்க.. தமிழக அரசு சபாஷ்
- Automobiles சீன நிறுவனம் கேட்ட முக்கிய சான்றை வழங்கிய இந்தியா! மத்த நாடுகள வளச்சு போட்டதபோல இந்தியாவையும் வளச்சுபோட போகுது
- Lifestyle Today Rasi Palan 19 April 2024: இன்று இந்த ராசிக்காரர்கள் நிலுவையிலுள்ள பணிகளை முடிக்க முயற்சிப்பது நல்லது...
- Sports IPL Classics - 87 ரன்களில் ஆல் அவுட்டான மும்பை.. பஞ்சாப் அணியில் பிரவீன்குமார் அபார பவுலிங்
- Finance ரோஜா பூவும், பிரியாணியும் மணக்குதே.. செலவும் பிச்சுக்குதே..!!
- Technology வெயிட்டிங் ஓவர்.. Sony கேமரா.. 256ஜிபி மெமரி.. வருகிறது புதிய Vivo 5ஜி போன்.. எந்த மாடல்?
- Travel பாவனி ஆற்றின் நடுவே 700 ஆண்டுகளாக மூழ்கியிருக்கும் கோட்டை – இன்னும் 2 மாதங்களுக்கு பொதுமக்கள் செல்லலாம்!
- Education பிளஸ்-2 படித்திருந்தால் போதும்...மத்தியஅரசு வேலை தயார்..!!
யூடியூப்-ல் இருந்து திரையுலகத்தை காப்பாற்றுங்கள்: இயக்குநர் எஸ்.பி.ஜனநாதன்...
தினந்தோறும் படத்தை இயக்கிய நாகராஜ் தற்போது இயக்கியுள்ள படம் மத்தாப்பூ. இந்த படத்தின் ஆடியோ வெளியீட்டு விழா சென்னையில் அண்மையில் நடைபெற்றது. நடந்தது. இதில் கலந்து கொண்டு பேசிய இயக்குநர் எஸ்.பி.ஜனநாதன், புதிய திரைப்படங்களைக் கூட யூ டியூப்பில் டவுன்லோடு செய்து பார்ப்பது அதிகமாகிவருகிறது. இப்படியிருந்தால் எப்படி தியேட்டர்களுக்கு ரசிகர்கள் வருவார்கள். தியேட்டர்களில் ஓடிக்கொண்டிருக்கும் படங்கள்கூட யூ டியூப்பில் முழுமையாகப் பார்க்க முடிகிறது.
விஜய் நடித்த நண்பன் படத்தை யூ டியூப்பில் 50 லட்சம் பேர் டவுன்லோடு செய்து பார்த்திருக்கிறார்கள். அது பெரிய படம் என்பதால் பாதிக்கப்படவில்லை. தடையறத் தாக்க படத்தைகூட 20 லட்சம் பேர் பார்த்திருக்கின்றனர். அந்த படம் தியேட்டரில் சரியாக ஓடவில்லை. இப்படி டவுன்லோடு செய்த 20 லட்சம் ரசிகர்களும் தியேட்டருக்கு வந்து பார்த்திருந்தால் அப்படம் 40 தியேட்டர்களில் 25 நாட்கள் ஓடிய வசூல் அந்த படத்தை வாங்கியவர்களுக்கு கிடைத்திருக்கும். இந்த யூ டியூப் மட்டுமின்றி, திருட்டு விசிடி போன்ற விசயங்களாலும் தயாரிப்பாளர்களுக்கு பெரும் நஷ்டம்தான். இதைப்பற்றியெல்லாம் திரையுலகினர் யோசித்துப்பார்த்து, படங்களை ரிலீஸ் செய்வதோடு வேலை முடிந்து விட்டது என்று இருக்காமல் இதுபோன்ற தொழில்நுடப ரீதியாக இலவசமாக டவுன்லோடு செய்து பார்ப்பதைத் தடுப்பதற்கான நடவடிக்கைகளையும் எடுக்க வேண்டும் என்றார்.