twitter
    For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    யூடியூப்-ல் இருந்து திரையுலகத்தை காப்பாற்றுங்கள்: இயக்குநர் எஸ்.பி.ஜனநாதன்...

    |

    Movies through Internet: Save the film Industry - Director Jnanathan
    சென்னை: இணைய உலகின் யூடியூப் பில் திரைப் படங்களைப் பார்ப்பது அதிகரித்து வருவதால் திரையுலகத்தினர் அதிகம் பாதிக்கப்படுகின்றனர் என்று இயக்குநர் எஸ்.பி.ஜனநாதன் கவலை தெரிவித்துள்ளார்.

    தினந்தோறும் படத்தை இயக்கிய நாகராஜ் தற்போது இயக்கியுள்ள படம் மத்தாப்பூ. இந்த படத்தின் ஆடியோ வெளியீட்டு விழா சென்னையில் அண்மையில் நடைபெற்றது. நடந்தது. இதில் கலந்து கொண்டு பேசிய இயக்குநர் எஸ்.பி.ஜனநாதன், புதிய திரைப்படங்களைக் கூட யூ டியூப்பில் டவுன்லோடு செய்து பார்ப்பது அதிகமாகிவருகிறது. இப்படியிருந்தால் எப்படி தியேட்டர்களுக்கு ரசிகர்கள் வருவார்கள். தியேட்டர்களில் ஓடிக்கொண்டிருக்கும் படங்கள்கூட யூ டியூப்பில் முழுமையாகப் பார்க்க முடிகிறது.

    விஜய் நடித்த நண்பன் படத்தை யூ டியூப்பில் 50 லட்சம் பேர் டவுன்லோடு செய்து பார்த்திருக்கிறார்கள். அது பெரிய படம் என்பதால் பாதிக்கப்படவில்லை. தடையறத் தாக்க படத்தைகூட 20 லட்சம் பேர் பார்த்திருக்கின்றனர். அந்த படம் தியேட்டரில் சரியாக ஓடவில்லை. இப்படி டவுன்லோடு செய்த 20 லட்சம் ரசிகர்களும் தியேட்டருக்கு வந்து பார்த்திருந்தால் அப்படம் 40 தியேட்டர்களில் 25 நாட்கள் ஓடிய வசூல் அந்த படத்தை வாங்கியவர்களுக்கு கிடைத்திருக்கும். இந்த யூ டியூப் மட்டுமின்றி, திருட்டு விசிடி போன்ற விசயங்களாலும் தயாரிப்பாளர்களுக்கு பெரும் நஷ்டம்தான். இதைப்பற்றியெல்லாம் திரையுலகினர் யோசித்துப்பார்த்து, படங்களை ரிலீஸ் செய்வதோடு வேலை முடிந்து விட்டது என்று இருக்காமல் இதுபோன்ற தொழில்நுடப ரீதியாக இலவசமாக டவுன்லோடு செய்து பார்ப்பதைத் தடுப்பதற்கான நடவடிக்கைகளையும் எடுக்க வேண்டும் என்றார்.

    English summary
    Most people are seeing movies through internet, so they are not coming to theatre. Serious action should be taken on this to save the film industry' says director Jnanathan.
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X
    X