Don't Miss!
- Technology
சூரியனில் அதிகரிக்கும் கருப்பு புள்ளிகளால் விஞ்ஞானிகள் பதட்டம்.! சூரிய புயல் அபாயம் உருவாகிறதா?
- Lifestyle
உங்கள் துணையை தினமும் ஸ்பெஷலானவராக உணர வைக்க இந்த சின்ன சின்ன விஷயங்கள் போதுமாம்...!
- Sports
ஸ்ரேயாஸ்க்கு பதில் யார்? சூர்யகுமாரா? சுப்மன் கில்லா? தினேஷ் கார்த்திக்கின் பளிச் பதில்
- News
திருப்பத்தூர் அருகே இலவச வேஷ்டி சேலைக்கான டோக்கன் வினியோகம்..நெரிசலில் சிக்கி 4 பெண்கள் பலியான சோகம்
- Automobiles
மாருதியின் புதுமுக காரை டெலிவரி பெற்ற ஜப்பான் தூதரக தலைவர்! எந்த காருனு தெரிஞ்சா நீங்களும் வாங்க விரும்புவீங்க
- Finance
மார்ச் மாதம் கெடு.. அதானி குழுமத்திற்கு வந்த புதிய பிரச்சனை..!
- Travel
இந்தியாவிலேயே அதிக விருந்தோம்பல் செய்து அவார்ட் வாங்கிய இடம் புதுச்சேரி தானாம்!
- Education
GRSE Recruitment Notification 2023:கப்பல் கட்டும் தளத்தில் ரூ.1.8 லட்சத்தில் வேலை...!
தயாரிப்பாளராகிறாரா தோனி?... நயன்தாராவை வைத்து படம் எடுக்கிறாரா?...உண்மை என்ன?...புதிய தகவல்
சென்னை : கிரிக்கெட் வீரர் மகேந்திர சிங் தோனி தமிழ் திரைப்படத்தை தயாரிக்க உள்ளதாக வெளியான தகவல் குறித்து அதிகாரப்பூர்வ அறிக்கை வெளியாகி உள்ளது.

தமிழகத்தில் விஜய் மற்றும் அஜீத் ஆகியோருக்கு எந்த அளவுக்கு ரசிகர் பட்டாளம் இருக்கிறதோ அதே அளவுக்கு மகேந்திர சிங் தோனிக்கும் ரசிகர்கள் இருக்கிறார்கள். இதனால் ரசிகர்கள் இவரை 'தல' தோனி என்று செல்லமாக அழைப்பார்கள்
கடந்த இரண்டு தினங்களாக சோஷியல் மீடியாவில், எம்.எஸ்.தோனி திரைப்பட தயாரிப்பில் ஈடுபட உள்ளதாகவும். அதற்காக தனி தயாரிப்பு நிறுவனத்தையும் தொடங்கி உள்ளார் என்றும் செய்திகள் வெளியாகின. மேலும், எம் எஸ்.தோனி தமிழில் புதிய திரைப்படத்தை தயாரிக்க திட்டமிட்டு இருப்பதாகவும், நடிகர் ரஜினிகாந்திடம் முக்கிய உதவியாளராக இருந்த சஞ்சய் என்பவர் எம்.எஸ்.தோனியின் தயாரிப்பு நிறுவனத்தில் இணைந்துள்ளதாகவும்.

பெரிய பட்ஜெட்டில் உருவாக உள்ள முதல் படத்தில், கதாநாயகியாக நடிப்பதற்காக நயன்தாரா ஒப்பந்தம் ஆகியுள்ளதாக கூறப்பட்டது. அந்தப் படத்தின் படப்பிடிப்பு இந்த மாதம் தொடங்கவுள்ளது எனவும் செய்திகள் கடந்த இரண்டு நாட்களாக காட்டுத்தீ போல பரவின. பலரும்,தோனி ஏன் திடீரென சினிமாவில் நுழையும் முடிவை எடுத்துள்ளார் என்றும் கருத்துக்கள் இணையத்தில் வலம் வந்தன.
வதந்திகளை
நம்பாதீங்க...
என்ன
தோனி
இப்படி
சொல்லிட்டாரு!
இந்நிலையில் இந்த தகவல் குறித்து தோனி எண்டர்டெயிண்மண்ட் அறிக்கை வெளியிட்டுள்ளது. அதில் தோனி தற்போது வரை சஞ்சய் என்ற எந்தவொரு நபருடனும் இணைந்து பணிபுரியவில்லை. தமிழில் திரைப்படம் தயாரிப்பதாக வெளியான தகவல்கள் அனைத்தும் பொய்யான வதந்திகள் எனவும், தோனி எண்டர்டெயிண்ட்மண்ட் மற்ற பணிகளில் தான் கவனம் செலுத்தி வருவதாகவும் அந்த அறிக்கையில் தெளிவாக விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது.