Don't Miss!
- News வெள்ளிக்கிழமை இதை மட்டும் யாருக்கும் தராதீங்க.. எந்தெந்த பொருளை வெள்ளி கிழமை தானம் தரலாம் தெரியுமா?
- Technology இனி Signal Weak சிக்கலே இருக்காது.. மொபைல் Settings-ல இதை பண்ணா போதும்.. இன்டர்நெட் ஸ்பீட் சும்மா பிச்சிக்கும்
- Finance வேலைக்கு சேர்ந்த 6 மாசத்திலேயே ரிசைன்.. அனல் பறக்கும் விவாதம்..!
- Automobiles சாதா கிளாஸ் டிக்கெட்டை வாங்கிட்டு முதல் வகுப்பில் பயணிக்கனுமா!! விமான பணி பெண் சொல்லும் மூன்று ரகசிய வழிகள்!
- Lifestyle Today Rasi Palan 26 April 2024: இன்று இந்த ராசிக்காரர்கள் வேலை மாற்றத்தைப் பற்றி யோசிக்காமல் இருப்பது நல்லது..
- Sports வாழ்க்கைன்னா ஒரு சில அடிகள் விழத்தான் செய்யும்.. எல்லா போட்டியிலும் வெல்ல முடியாது.. பாட் கம்மின்ஸ்
- Travel இந்தியாவில் உள்ள புனிதமான காடுகள் – வாழ்வில் ஒரு முறையேனும் இந்த காடுகளுக்கு செல்ல வேண்டும்!
- Education சென்னை ஏர்போர்ட்டில் பணிபுரிய ஆசையா...!
நடிகர் சங்கக் கட்டடத்தில் என் கல்யாணம் தான் முதல் ஃபங்ஷன் - விஷால் 'குஷி 'அறிவிப்பு
நடிகர் சங்கக் கட்டடத்தில் என் திருமணம் தான் முதலில் நடக்கும் என நடிகர் விஷால் அறிவித்தார்.
சென்னை: நடிகர் சங்கக் கட்டடத்தில் என் திருமணம் தான் முதல் நிகழ்வாக இருக்கும் என நடிகர் சங்க பொதுசெயலாளர் விஷால் செய்தியாளர்கள் கூட்டத்தில் தெரிவித்தார்.
நடிகர் சங்கக் கட்டடம் கட்டுவதற்கு இடைக்கால தடை விதிக்கப்பட்டிருந்தது. அந்த தடையை நீக்கி உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது. அதனையைடுத்து நடிகர் சங்க வளாகத்தில் செய்தியாளர்கள் சந்திப்பு நடைபெற்றது.
அதில் பேசிய நடிகர் சங்க பொதுசெயலாளர் விஷால், நடிகர் சங்கக் கட்டடம் கட்டப்படக் கூடாது என தடை வாங்கியவர்கள் மீது எங்களுக்கு எந்தக் கோபமும் இல்லை. தடை நீங்கியுள்ளதால் கட்டடப் பணிகள் விரைந்து நடக்கும்.
கட்டடத்தின் அடித்தள பணிகள் நிறைவடைந்துவிட்டது. மீண்டும் கட்டடத்தை எழுப்பும் வேலைக்கு புதிதாக டெண்டர் விடப்பட்டு பணிகள் ஆரம்பிக்கப்படும். நடிகர் சங்கத்தில் எல்லா விஷயங்களும் அனைவருக்கும் தெரியும்படி வெளிப்படையாகவே நடக்கிறது. அதனால் இதில் ஏதேனும் ஊழல் நடக்குமா என யாரும் விழித்திருந்து பார்க்கும் தேவை இல்லை.
கட்டடப்பணி அடுத்த ஆண்டு ஆகஸ்ட் மாதத்துக்குள் நிறைவடைய வேண்டும் என்பதே எங்கள் நோக்கம். புதிதாக எழும்பும் நடிகர் சங்கக் கட்டடத்தில் முதல் நிகழ்வாக என் திருமணம் மிக பிரம்மாண்டமாக நடத்தப்படும் என விஷால் கூறினார். அப்போது துணை தலைவர் பொன்வண்ணன் உள்பட அனைத்து செயற்குழு உறுப்பினர்களும் உடன் இருந்தனர்.