Don't Miss!
- News பிறந்ததேதி இடிக்குதே! எடப்பாடியை விட சசிகலா பெரியவரா? உதயநிதிக்கு பதில் கூறிய ஈபிஎஸ்க்கு புது தலைவலி
- Finance புதிய துறையில் அடியெடுத்து வைத்த கௌதம் அதானி.. இதுவும் குஜராத்துக்கு தான்..!!
- Sports அவங்க 2 பேசிட்டு இருந்தாங்க.. நான் குடுகுடுனு நடந்து வந்துட்டேன்.. அஸ்வினால் ஷாக்கான ராஜஸ்தான் அணி!
- Lifestyle 150 ஆண்டுகளுக்கு முன்னாடியே இந்தியாவின் முதல் செல்பியை தனது மனைவியுடன் எடுத்தது இந்த ராஜாதானாம்..போட்டோ உள்ளே!
- Automobiles இந்தியாவே இந்த ஸ்கோடா காருக்காக தான் வெயிட்டிங்! விலையை கேட்டா ஆச்சரியப்படுவீங்க!
- Technology வாவ்.. சும்மா அள்ளுது.. 6000எம்ஏஎச் பேட்டரி.. 50எம்பி கேமரா.. 128ஜிபி மெமரி.. எந்த மாடல்?
- Education சென்னையின் பெருமைமிகு கல்லூரிகளில் ஒன்றாகத் திகழும் டி.ஜி.வைஷ்ணவ் கல்லூரி...!!
- Travel டைட்டானிக் கப்பல் மூழ்கி இருக்கலாம் – ஆனால் அதைப் பற்றிய சுவாரஸ்யமான உண்மைகள் மறையாது!
2016 சட்டமன்றத் தேர்தல்: நடிகர் சங்கமும் களத்தில் குதிக்கிறதா?
சென்னை: வருகின்ற சட்டமன்றத் தேர்தலில் நடிகர்களின் பங்களிப்பையும் தேர்தல் ஆணையம் விரும்புவதாக நடிகர் பொன்வண்ணன் தெரிவித்திருக்கிறார்.
2016 ம் ஆண்டிற்கான சட்டமன்றத் தேர்தல் தேதிகள் விரைவில் அறிவிக்கப்படவிருக்கிறது.தேர்தல் காலங்களில் 3 மாத காலம் நாடக நடிகர்கள் தங்களது தொழிலை செய்ய முடியாமல் அவதிப்படுகின்றனர்.
இதனால் நாடக நடிகர்களின் துயரங்களைக் கணக்கில் கொண்டு நடிகர் சங்கத்தினர் தேர்தல் ஆணையரை சந்தித்துப் பேசியுள்ளனர். அதற்கு தேர்தல் ஆணையர் நாங்கள் அப்படி ஒன்றும் தடை விதிக்கவில்லை.
இதுகுறித்து உள்ளூர் நிர்வாகத்திடம் பேசுகிறோம் என்று கூறினாராம். மேலும் தேர்தல் காலங்களில் மக்களிடம் தேர்தலில் பங்கெடுக்க பரப்புரைகளை நிகழ்த்த வேண்டும்.
நாங்கள் எவ்வளவு சொன்னாலும் நடிகர்கள் சொல்வது போல அது வருவதில்லை. நீங்கள் தேர்தல் தொடர்பான அறிவுரைகளை வழங்கும்போது அது மக்களிடம் வேகமாக சென்று சேருகிறது.
எனவே நீங்கள் எங்களுக்காக இதனை செய்துதர வேண்டும் என்று தேர்தல் ஆணையம் கேட்டுக் கொண்டதாம். தேர்தல் ஆணையத்தின் இந்த கோரிக்கையை நடிகர் சங்கமும் ஏற்றுக் கொண்டு விட்டதாம்.
"நடிகர்களாக எங்களுடைய வேலையை மட்டும் செய்துகொண்டிருப்பதற்கு மத்தியில், மக்கள் பணியாற்றக் கிடைத்த இந்த வாய்ப்பைப் பயன்படுத்திக்கொள்வோம்" என்று நடிகர் பொன்வண்ணன் இதுகுறித்து தெரிவித்திருக்கிறார்.