Don't Miss!
- News திடீரென "ஆரஞ்சு" நிறத்தில் செவ்வாய் கிரகம் போல் மாறிய ஏதென்ஸ் நகரம்.. மக்கள் பீதி.. நாசா விளக்கம்!
- Sports IPL 2024 DC vs GT: நாடி நரம்பு எல்லாம் தோனி.. உண்மையை போட்டு உடைத்த ரிஷப் பண்ட்
- Automobiles இந்தியாவிலேயே இப்படி ஒரு இடம் கிடையாது! 15 மாடி கார் பார்க்கிங் ரெடி!
- Technology Youtube சோலி முடிஞ்சு.. இறங்கி அடிச்ச எலான் மஸ்க்.. AI அம்சம்.. ஸ்மார்ட் டிவிகளில் புதிய ஆப்..
- Lifestyle Today Rasi Palan 25 April 2024: இன்று இந்த ராசிக்காரர்களுக்கு புதிய நபர்களுடன் பழகும் போது கவனம் தேவை...
- Finance சிங்கம் போல் களமிறங்குகிறது BSNL.. டிசிஎஸ் உடன் மாஸ் திட்டம்..!
- Education ஜூன் 16-ல் யுஜிசி நெட் தேர்வு...ஏற்பாடுகள் தயார்...!!
- Travel இந்தியாவில் உள்ள இந்த மினு மினுக்குற காட்டுக்கு போய் இருக்கீங்களா – ஒரு முறை போய் பாருங்க!
நாகசைதன்யாவுடன் இணையும் வெங்கட் பிரபு.. தரமான சம்பவம் காத்திருக்கு
சென்னை : இயக்குநர் வெங்கட் பிரபு அடுத்தப் படம் குறித்த முக்கியமான தகவலை வெளியிட்டுள்ளார்.
இயக்குநர் வெங்கட்பிரபு சென்னை 600028 படத்தில் ஏராளமான இளம் நடிகர்களை வைத்து கலகலப்பான படத்தை எடுத்திருந்தார். இந்த படம் ரசிகர்களுக்கு பிடித்துப்போனது.
சென்னை 28, கோவா, சரோஜா என படங்களை இயக்கி கணிசமான வெற்றியை ருசித்து வந்தார் இயக்குநர் வெங்கட் பிரபு.
Chhello Show: ஆர்ஆர்ஆர் இல்லை.. ஆஸ்கர் 2023க்கு இந்தியா சார்பில் கலந்து கொள்ளும் படம் இதுதான்!
மங்காத்தா
ஜாலியான படங்களை இயக்கி வந்த வெங்கட்பிரபு, கிரிக்கெட் சூதாட்டத்தை மையமாக வைத்து மங்காத்தா என்ற படத்தை இயக்கினார். காதல் மன்னாக வலம் வந்த அஜித் இந்த படத்தில் நெகடிவ் ரோலில் நடித்திருந்தார். இந்த படம் வெளியாகி பல ஆண்டுகள் உருண்டோடிய பின்பும், இன்று வரை மங்காத்தா படத்தின் பிஜிஎம்மிற்கேன்று தனி பேன்ஸ் இருக்கிறார்கள்.
மாநாடு
இயக்குநர் வெங்கட் பிரபு கடைசியாக மாநாடு படத்தை இயக்கியிருந்தார். சிம்பு ஹீரோவாக நடித்திருந்த இந்தப் படத்தில் எஸ்.ஜே.சூர்யா, கல்யாணி பிரியதர்ஷன், பிரேம்ஜி உள்ளிட்டோர் முக்கியக் கதாபாத்திரங்களில் நடித்திருந்தனர். ஹாலிவுட் திரைப்படங்களில் மட்டுமே நாம் பார்த்து வியந்த டைம் லுப் முறை இந்த படத்தில் பயன்படுத்தப்பட்டு இருந்தது. அதுமட்டும் இல்லாமல் சிம்புவுக்கு கம்பேக் கொடுக்கும் திரைப்படமாகவும் இப்படம் அமைந்து சிம்பு ரசிகர்களை மகிழ்வித்தது.
நாக சைதன்யா
இதையடுத்து தெலுங்கு நடிகர் நாக சைதன்யா நடிப்பில் தமிழ் மற்றும் தெலுங்கில் உருவாகும் புதிய படத்தை இயக்குனர் வெங்கட் பிரபு இயக்க உள்ளார். இந்த படத்தை சீனிவாசா சில்வர் ஸ்கிரீன் நிறுவனம் தயாரிக்க உள்ள. சில மாதங்களுக்கு முன்னர் தயாரிப்பாளர் மற்றும் நாக சைதன்யா ஆகியோரோடு வெங்கட் பிரபு இருக்கும் புகைப்படத்துடன் இந்த அறிவிப்பு வெளியான நிலையில், தற்போது அது உறுதியாகி உள்ளது.
நாளை ஷூட்டிங்
நாக சைத்தன்யாவின் 22வது படமான இப்படத்திற்கு தற்காலிகமாக NC22 என தலைப்பு வைக்கப்பட்டுள்ளது. தற்போது இந்தப் படம் குறித்த முக்கிய அப்டேட்டை வெளியிட்டிருக்கிறார் வெங்கட் பிரபு. அதாவது இந்தப் படத்தின் படப்பிடிப்பு நாளை முதல் தொடங்க உள்ளது. இத்திரைப்படம் இயக்குநர் வெங்கபிரபுவின் 11வது திரைப்படமாகும்.
-
Sivakarthikeyan: நடிகர் சங்க கட்டட பணிகளுக்கு நடிகர் சிவகார்த்திகேயன் ரூ.50 லட்சம் நிதியுதவி!
-
கடைசி கட்டம்.. வேட்டையன் சூட்டிங் எப்போ முடியுது தெரியுமா?.. கூலி படத்துக்கும் தேதி குறித்த ரஜினி!
-
மதுரை சித்திரை திருவிழா.. மறக்க முடியாத நாள் இதுதான்! நடிகர் சூரி எமோஷனல்.. கடைசியில் செய்தது ஹைலைட்