Just In
- 10 min ago
தோத்துட்டேன் மச்சான்.. பிக் பாஸ் நிகழ்ச்சிக்குப் பிறகு போனில் உரையாடிய சோமசேகர்.. வைரலாகும் வீடியோ!
- 22 min ago
பேண்டை கழட்டி 'அதை' காட்டினார்.. பிரபல இயக்குநர் மீது யுனிவர்சிட்டி பட நடிகை பகீர் புகார்!
- 1 hr ago
பிக் பாஸ் டைட்டில் வின்னர் ஆரிக்கு வாழ்த்து சொன்ன சினிமா பிரபலங்கள்.. பதிலுக்கு நன்றி சொன்ன ஆரி!
- 2 hrs ago
மீண்டும் இணைந்த கவின் லாஸ்லியா.. பிக்பாஸ் சக்சஸ் பார்ட்டியில் சந்திப்பு.. தீயாய் பரவும் போட்டோஸ்!
Don't Miss!
- News
அமெரிக்க வரலாற்றிலேயே... வயதான அதிபர்... விசித்திர சாதனையைப் படைக்கும் ஜோ பைடன்
- Lifestyle
இந்த டீ நீங்க தூங்கும்போதுகூட உங்க கொழுப்பை குறைத்து உடல் எடையை குறைக்க உதவுமாம்...!
- Sports
டெஸ்ட் தரவரிசை.... 4வது இடத்துக்கு இறங்கிய கேப்டன்... முதல் 50 இடங்களில் 8 இந்திய வீரர்கள்!
- Education
தனியார் பள்ளிகளை விட அரசுப் பள்ளிகள் கூடுதல் வருகைப் பதிவு!
- Automobiles
வால்வோ எஸ்60 சொகுசு காருக்கு ஆன்லைனில் புக்கிங் துவங்கியது... முதலில் வருவோருக்கு சகாய விலை!
- Finance
தங்கம், ரியல் எஸ்டேட் முதலீடுகள்.. நீங்கள் எவ்வளவு வரி செலுத்துகிறீர்கள் தெரியுமா?
- Technology
ஒன்பிளஸ் நோர்ட் முன்பதிவு செய்து அமேசான் வழியாக கூடுதல் நன்மையைப் பெறுவது எப்படி?
- Travel
வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது
என்னது மெர்சலோட மோதுறேனா? பதறிப்போன இயக்குநர்!
சென்னை : 'மாநகரம்' சந்தீப்கிஷன், விக்ராந்த் ஆகியோர் நடிக்க சுசீந்திரன் இயக்கும் படம் 'நெஞ்சில் துணிவிருந்தால்'. இந்தப் படத்தில் சூரி காமெடியனாக நடிக்கிறார். டி.இமான் இசையமைத்துள்ளார்.
முதலில் 'அறம் செய்து பழகு' எனப் பெயரிடப்பட்டிருந்த இந்தப் படம் 'நெஞ்சில் துணிவிருந்தால்' என மாற்றப்பட்டது குறிப்பிடத்தக்கது. இந்தப் படத்தின் படப்பிடிப்புப் பணிகள் முடிவடைந்து போஸ்ட் ப்ரொடக்ஷன் வேலைகள் நடந்து வருகின்றன.

தீபாவளிக்கு ரிலீஸ் :
'நெஞ்சில் துணிவிருந்தால்' தீபாவளிக்கு ரிலீஸ் ஆகும் என அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டதை அடுத்து, மெர்சலுடன் மோதுகிறார் இயக்குநர் சுசீந்திரன் என்கிற ரீதியில் செய்திகள் வெளியாகின.

மெர்சலான இயக்குநர் :
இயக்குநர் சுசீந்திரன் அடுத்து விஜய்யைக் கதாநாயகனாக வைத்துப் படம் இயக்கும் முயற்சியில் இருக்கிறார். இந்நிலையில், இப்படியான செய்திகள் அவருக்கு அதிர்ச்சியைக் கொடுக்கவே, அவரே விளக்கம் அளித்துள்ளார்.

மெர்சலை எதிர்க்கலை; மெர்சலுடன் வர்றோம் :
'எங்களுடைய நெஞ்சில் துணிவிருந்தால் படத்தை தீபாவளிக்கு வெளியிட முடிவு செய்துள்ளோம். அதனால் மெர்சலை எதிர்த்து வருகிறீர்களா எனக் கேட்கிறார்கள். மெர்சலை எதிர்த்து வரவில்லை; மெர்சலுடன் வருகிறோம்.

இது ஒண்ணும் புதுசு இல்ல :
இதேபோலத்தான் 2013 தீபாவளிக்கு அஜித் சாரின் ஆரம்பம் படத்தோடு சேர்ந்து 'பாண்டிய நாடு' படத்தை வெளியிட்டோம். இரண்டு படங்களும் வெற்றி பெற்றன.' எனத் தெரிவித்தார் சுசீந்திரன்.

தீபாவளி சரவெடி :
இந்த வருடத் தீபாவளிக்கு, விஜய்யின் 'மெர்சல்', சுசீந்திரன் இயக்கும் 'நெஞ்சில் துணிவிருந்தால்', கௌதம் கார்த்திக் நடிக்கும் 'ஹரஹர மஹாதேவகி', அர்ஜூன் இயக்கும் 'சொல்லிவிடவா' ஆகிய படங்கள் வெளியாக இருக்கின்றன. இவற்றில் எது பட்டையைக் கிளப்பும் என்பதைப் பொறுத்திருந்து பார்க்கலாம்.