விஜய்யின் 'கத்தி' தெலுங்கு ரீமேக்கை வச்சு வச்சு செய்யும் நெட்டிசன்கள்
சென்னை: கத்தி படத்தின் தெலுங்கு ரீமேக்கான கைதி 150 படத்தை நெட்டிசன்கள் மரண கலாய் கலாய்த்துக் கொண்டிருக்கிறார்கள்.
ஏ.ஆர். முருகதாஸ் இயக்கத்தில் விஜய் நடித்த கத்தி படத்தை தெலுங்கில் கைதி எண் 150 என்ற பெயரில் ரீமேக் செய்துள்ளனர். சிரஞ்சீவி, காஜல் அகர்வால் நடித்துள்ள இந்த படத்தை நடிகர் ராம் சரண் தேஜா தயாரித்துள்ளார்.
படம் வரும் 11ம் தேதி ரிலீஸாகிறது. இந்நிலையில் நெட்டிசன்கள் படத்தின் டிரெய்லரை பார்த்துவிட்டு கலாய்த்துக் கொண்டிருக்கிறார்கள்.

என்னடா
ரவுடிகளை அடித்து நொறுக்கி அவர்களின் மீது ஏறி அமர்ந்திருக்கும் சிரஞ்சீவியை நெட்டிசன்கள் வச்சு செஞ்சுள்ளனர்.

ரவுடிகள்
கைதி எண் 150ல் உள்ள 150 என்பது காயின் காட்சியில் சிரஞ்சீவி அடித்து நொறுக்கும் ரவுடிகளின் எண்ணிக்கை.

தேவஸ்தானம்
இந்த புகைப்படத்தை பார்த்துவிட்டு திருப்பதி தேவஸ்தான வரிசை என்று நினைத்தால் தவறு. கத்தி தெலுங்கு ரீமேக்கில் காயின் சண்டை காட்சியில் சிரஞ்சீவியுடன் சண்டை போட வந்துள்ள ரவுடிகள்.
விஜய்
தோழர் @actorvijay தெலுங்கு கத்தி ட்ரைலர் பார்த்து விட்டு ஜாலியாக இருந்த போது

பிரேமம்
மலையாள சூப்பர் ஹிட் படமான பிரேமம் தெலுங்கில் ரீமேக் செய்யப்பட்டபோதும் தமிழக ரசிகர்கள் அதை கலாய் கலாய்னு கலாய்த்தார்கள். அதிலும் குறிப்பாக மலர் டீச்சராக நடித்த ஸ்ருதியை தான் ஓவராக கலாய்த்தார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.


Click it and Unblock the Notifications











