TRENDING ON ONEINDIA
-
காஷ்மீர் தாக்குதல்... அமெரிக்கா, ஜெர்மனி உள்ளிட்ட நாடுகள் கண்டனம்.. மவுனமாக இருக்கும் பாக், சீனா
-
திடீரென நடத்தப்பட்ட ரெய்டில் நடிகை நயன்தாராவின் சொகுசு வேன் பறிமுதல்... அதிர்ச்சியில் உறைந்த திரையுலகம்...
-
கார்த்தி வெள்ளத்தில் சிக்கி கஷ்டப்பட்டு நடித்த தேவ் படம் எப்படி இருக்கு?: ட்விட்டர் விமர்சனம்
-
தலைவர் முதல் தளபதி வரை - வாழ்க்கையில் நடந்த காதல் முதல் கசமுசாக்கள் வரை
-
வேற லெவல் பிளான் உடன் மீண்டும் நிலவிற்கு செல்லும் நாசா; பின்னணி என்ன?
-
ரிஷப் பண்ட் இந்திய அணிக்கு ஏன் முக்கியம் தெரியுமா? “நச்”சுன்னு நாலு காரணம் சொன்ன ஆஷிஷ் நெஹ்ரா
-
ஜியோவுக்கு மட்டும் ஏன் இவ்வளவு சலுகை... பி.எஸ்.என்.எல். ஊழியர்கள் போராட முடிவு
-
ஓரிரு மாதத்தில் திருமணம் நிச்சயம்! இந்த கோவிலுக்கு சென்று வழிபடுங்கள்!
நாட்டையே உலுக்கிய நிர்பயா வழக்கு வெப் சீரீஸ் ஆகிறது
மும்பை: நாட்டையே உலுக்கிய நிர்பயா பலாத்கார வழக்கு பற்றி நெட்பிளிக்ஸில் தொடர் வெளியாக உள்ளது.
2012ம் ஆண்டு டிசம்பர் மாதம் டெல்லியில் கல்லூரி மாணவி நிர்பயா ஓடும் பேருந்தில் கூட்டு பலாத்காரம் செய்து கொடூரமாக தாக்கப்பட்டதில் உயிர் இழந்தார். அந்த சம்பவம் நடந்து 6 ஆண்டுகள் ஆகியபோதிலும் அதை பலராலும் மறக்கவே முடியவில்லை.

இந்நிலையில் அந்த கொடூர சம்பவத்தின் போலீஸ் விசாரணை அடிப்படையில் வெப் சீரீஸ் உருவாக்கப்பட்டுள்ளது. டெல்லி கிரைம் என்ற தலைப்பில் அந்த சீரீஸ் நெட்பிளிக்ஸில் வரும் மார்ச் மாதம் 22ம் தேதி முதல் வெளியாக உள்ளது.
இந்த தொடர் 7 எபிசோடுகளில் வெளியாகவிருக்கிறது. தொடரை எழுதி, இயக்கியுள்ளார் ரிச்சீ மேத்தா. டெல்லி கிரைம் தொடர் பெண் போலீஸ் அதிகாரியான வர்திகா சதுர்வேதியை சுற்றியே நகருமாம். ஷெஃபாலி ஷா வர்திகாவாக நடித்துள்ளார்.
இந்த தொடரில் ஆதில் ஹுசைன், ரசிகா துகல், ராஜேஷ் தைலங், கோபால் தத், வினோத் ஷெராவத் ஆகியோர் நடித்துள்ளனர். இந்த தொடரை எடுக்க இயக்குனர் உள்ளிட்டோர் 6 ஆண்டுகளாக ஆய்வு செய்துள்ளனர்.
மேலும் சம்பவம், விசாரணை நடந்த இடங்களில் காட்சிகளை படமாக்கியுள்ளனர்.