Don't Miss!
- News ரூ.10 கோடி.. ஒரே நாளில் கோடீஸ்வரர் ஆன ஆட்டோ டிரைவர்.. கடைசி நேரத்தில் வாங்கிய லாட்டரிக்கு பரிசு
- Technology ஆதார் அலெர்ட்.. மீண்டும் வந்த உத்தரவு.. எதையெல்லாம் இலவசமாக மாற்றலாம்.. இறுதி அறிவிப்பு.. உடனே கவனியுங்க..
- Lifestyle உடம்பில் தேங்கியுள்ள கெட்ட கொலஸ்ட்ராலை குறைக்கணுமா? இந்த காய்கறிகளை அடிக்கடி சாப்பிடுங்க..
- Finance ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் பங்கு மதிப்பு 54% உயரும்.. அமெரிக்க நிறுவனத்தின் பலே கணிப்பு..!
- Education ஆஸ்திரேலியாவில் உயர்கல்வி பயில இந்திய மாணவர்கள் விரும்புவது ஏன்?
- Automobiles சென்னை ஃபோர்டு ஆலையில் முக்கிய புள்ளிகளின் நடமாட்டம்! எதிர்பார்த்த செய்தி வரப்போகுது போல!
- Sports அங்க உயிரைக் கொடுத்து விளையாடுறாங்க.. ஒரு கேப்டனா நீ என்ன பண்ணிருக்கனும்.. ஹர்திக்கை பொளந்த பதான்!
- Travel புதுச்சேரியில இப்படி ஒரு விஷயமா – ஒரே படகு சவாரியில 8 விதமான கடற்கரைகளுக்கு க்ரூஸ் சுற்றுலா!
ஃபினாலேவுக்கு வந்த ரகசியத்தை அம்பலப்படுத்திய நிரூப்.. அதில் மட்டும் ரொம்ப கவனமா இருந்தாராம்!
சென்னை: பிக் பாஸ் ஃபினாலேவுக்கு வந்த ரகசியத்தை சிபியின் முன்பாக நிரூப் அம்பலப்படுத்திய காட்சிகள் இன்றைய எபிசோடில் இடம்பெற்றன.
அனைவருக்கும் நிரூப்பின் பக்கா பிளான் ஏற்கனவே தெரிந்த நிலையில், தற்போது அவரே அது குறித்து வெளிப்படையாக கூறியுள்ளார்.
தண்ணீர் ஊற்றிக் கொண்டு அவ்வளவு அவமானங்களையும் தாங்கிக் கொண்டு ஃபினாலேவுக்கு ஏன் வந்தேன் என்றும் அவர் ஓப்பன் செய்தார்.
செகண்ட் ஃபைனலிஸ்ட்
டிக்கெட் டு ஃபினாலேவை விளையாட முடியாமல் போன வருத்தத்தில் இருந்த நிரூப்புக்கு செகண்ட் ஃபைனலிஸ்ட்டாக நுழையும் வாய்ப்பு தெரிந்ததும் பக்காவாக மாஸ்டர் பிளான் போட்டு எப்படியாவது உள்ளே நுழைந்து விட வேண்டும் என உறுதியான முடிவை எடுத்து அந்த கேமை விளையாடினார்.
வருண் அக்ஷரா என்ட்ரி
சுருதி, நாடியா சங், சிபி, அபிநய், தாமரை உள்ளிட்ட போட்டியாளர்கள் மீண்டும் பிக் பாஸ் வீட்டுக்குள் நுழைந்த நிலையில், வருண் உடன் ஜோடி போட்டு வெளியேறிய அக்ஷரா வருண் உடனே ஜோடியாக உள்ளே நுழைந்தார். ஆள் குறைந்து களையிழந்த பிக் பாஸ் வீடு மீண்டும் நிறைந்து களைகட்டியது.
சிபியிடம் சொன்ன நிரூப்
சிபி நிரூப் செகண்ட் ஃபைனலிஸ்ட் ஆனது குறித்து கேள்வி எழுப்பிய நிலையில், நிரூப் தான் எப்படி அந்த போட்டியில் வெற்றிப் பெற்று உள்ளே நுழைந்தேன் என்பதை வெளிப்படையாக ஹவுஸ்மேட்கள் முன்னிலையில் போட்டு உடைத்தார். நிரூப்பின் சகுனித்தனம் தெளிவாகவே தற்போது ரசிகர்களுக்கு புரிந்திருக்கும்.
பாவனி போகட்டும்
அமீர், ராஜு மற்றும் பிரியங்காவுக்கு யார் வேண்டுமானால் ஃபைனல்ஸுக்கு போகட்டும் என நினைத்தனர். தாமரை தனக்கு தன்மானத்தை விட்டுக் கொடுத்து இறுதி சுற்றுக்கு போக விருப்பமில்லை என உறுதியாக சொன்ன நிலையில், பாவனி இறுதி சுற்றுக்கு போகட்டும் என நிரூப்பை தவிர மற்றவர்கள் முடிவு செய்து தண்ணிர் ஊற்றினர்.
Recommended Video
நான் தான் போகணும்
ராஜு மற்றும் பிரியங்கா எப்படியோ சேவ் ஆகி விடுவார்கள் என்பது தனக்குத் தெரியும் என்றும் தாமரை மற்றும் பாவனி ஆகிய இருவரில் யாரும் தலையில் தண்ணீர் ஊற்றிக் கொண்டு கிராண்ட் ஃபினாலே வாரத்திற்குள் நுழைந்து விடக் கூடாது என்பதில் மட்டுமே தான் உறுதியாக இருந்து விளையாடியதாகவும் நிரூப் சிபி மற்றும் வருண் மத்தியில் ரகசியத்தை போட்டு உடைத்தார்.