Don't Miss!
- News இறங்கிய வேகத்திலேயே ஏறிய சின்ன வெங்காயம்.. கோயம்பேட்டில் இஞ்சி பாருங்க.. சென்னையில் காய்கறிகள் விலை
- Sports IPL 2024 : ஐயயோ.. அவ்வளவு கண்டிப்புடன் இருக்க மாட்டேன்.. என்னை மாதிரி தான் ருதுராஜும்.. தோனி பகிர்வு
- Finance மாலத்தீவுக்கு 1500 டன் லிட்டர் தண்ணீரை அனுப்பிய சீனா.. அதுவும் திபெத்தில் இருந்து ஸ்பெஷல் டெலிவரி..!!
- Automobiles அரபு நாடுகளின் பொழப்பில் மண்ணை அள்ளி போட்ட டாடா... ஒட்டுமொத்த உலகமும் இந்தியாவை உத்து பாக்குது...
- Lifestyle ஹிட்லரின் ஆட்சியில் செய்யப்பட்ட மகத்தான சாதனைகள்... ஹிட்லருக்கே தெரியாம இவ்வளவு நல்லது பண்ணிருக்காரா?
- Technology மீண்டும் மீண்டுமா.. 50MP கேமரா.. 100W சார்ஜிங்.. புதிய போனை கொண்டுவரும் OnePlus.. எந்த மாடல்?
- Education ஆஸ்திரேலியாவில் உயர்கல்வி பயில இந்திய மாணவர்கள் விரும்புவது ஏன்?
- Travel புதுச்சேரியில இப்படி ஒரு விஷயமா – ஒரே படகு சவாரியில 8 விதமான கடற்கரைகளுக்கு க்ரூஸ் சுற்றுலா!
கடவுள் இருக்கான் குமாருக்கு தடை இல்லை, எல்லாம் சதி: தயாரிப்பாளர் சிவா
சென்னை: கடவுள் இருக்கான் குமாரு படத்திற்கு சென்னை உயர் நீதிமன்றம் தடை விதித்துள்ளதாக பொய்யான தகவலை சிலர் வேண்டும் என்றே பரப்பியுள்ளதாக தயாரிப்பாளர் டி. சிவா தெரிவித்துள்ளார்.
அம்மா கிரியேன்ஸ் தயாரிப்பில், ஜி.வி. பிரகாஷ், நிக்கி கல்ராணி, ஆனந்தி நடித்துள்ள கடவுள் இருக்கான் குமாரு படம் வரும் 10ம் தேதி வெளியாகிறது.
இந்நிலையில் வேறு ஒரு பட வெளியீட்டின்போது ஏற்பட்ட நஷ்ட விவகாரம் தொடர்பாக இரு வினியோகஸ்தர்களுக்கிடையிலான பிரச்சினையை முன் வைத்து, கடவுள் இருக்கான் குமாரு படத்துக்கு தடை கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டுள்ளது.
இந்த வழக்கில் படத்தை வெளியிட நீதிமன்றம் தடை விதித்துள்ளதாக செய்திகள் பரப்பப்பட்டன.
இது குறித்து படத்தின் தயாரிப்பாளர் டி. சிவா ஒன்இந்தியாவிடம் கூறுகையில், "வழக்கு விசாரணையே நாளைதான் நடைபெற உள்ளது. ஆனால் படத்தை முடக்க சிலர் பொய்யான செய்திகளை மீடியாக்கள் மூலம் பரப்புகிறார்கள். அவர்களின் கனவு நனவாகாது... இரு விநியோகஸ்தர்களுக்கான தகராறில் ஒரு தயாரிப்பாளரின் படத்தை முடக்க நினைப்பது எத்தனைப் பெரிய தவறு? திட்டமிட்டபடி நாளை மறுநாள் படம் வெளியாகும்," என்றார்.