Don't Miss!
- Finance கோடக் மஹிந்திரா பங்குகள் 10 சதவீதம் சரிவு.. முதலீட்டாளர்கள் பெரும் சோகம்.. டார்கெட் விலை குறைந்தது!!
- News மெடிக்கல் ஷாப் போறீங்களா? இருமல் மருந்து வாங்கணுமா? இந்த 67 மருந்துகளுக்கு தடை.. மத்திய அரசு அதிரடி
- Lifestyle இந்த 4 ராசி பெண்கள் காதலில் ரொம்ப அதிர்ஷ்டசாலிகளாம்... இவங்க காதல் வாழ்க்கை நினைச்சதை விட சூப்பரா இருக்குமாம்!
- Technology மினிமம் பேலன்ஸ் விதிகள்.. மே.1 முதல் அமல்.. உங்க அக்கவுண்ட்டில் ரூ.5000 வேண்டும்.. எந்த வங்கிக்கு எவ்வளவு?
- Sports தோனி கிடையாது! இந்த 28 வயது வீரர் தான் மிகவும் அபாயகரமான வீரர்.. மேத்தீவ் ஹைடன் கருத்து
- Automobiles அன்-ரிசர்வ் இரயில் பெட்டியை எல்லாம் அகற்ற வேண்டிய நேரம் வரும்!! பிரதமர் உறுதியா கூறியிருக்காரு!
- Education ஜூன் 16-ல் யுஜிசி நெட் தேர்வு...ஏற்பாடுகள் தயார்...!!
- Travel இந்தியாவில் உள்ள இந்த மினு மினுக்குற காட்டுக்கு போய் இருக்கீங்களா – ஒரு முறை போய் பாருங்க!
இந்த நாள் தமிழ் சினிமா 2018-ல் முக்கியமான நாள்!
Recommended Video
சென்னை : நேற்று (மார்ச் 1)முதல் தென்னிந்திய மொழிகளில் எந்த புதுப்படங்களும் வெளிவராது என தமிழ், மலையாள, தெலுங்கு, கன்னடம் ஆகிய மொழிகளின் திரைப்பட தயாரிப்பாளர் சங்கத்தினர் திட்டவட்டமாக அறிவித்தனர்.
திரையரங்குகளில் திரையிடலுக்கு தேவைப்படும் டிஜிட்டல் தொழிநுட்ப சேவைகளை வழங்கும் நிறுவனங்களான கியூப் மற்றும் யூ.எஃப்.ஓ வசூலிக்கும் அதிகப்படியான தொகையைக் கண்டித்து மார்ச் 1 முதல் தென்னிந்திய மொழிகளான தெலுங்கு, தமிழ், கன்னடம், மலையாளம் ஆகிய மொழிகளில் எந்தப் புது திரைப்படமும் திரையரங்குகளில் வெளியாகாது என ஏற்கெனவே முடிவு செய்திருந்தனர்.
டிஜிட்டல் சேவைகள் வழங்கும் நிறுவனங்களுடன் இதுவரை நடந்த பேச்சுவார்த்தையில் எந்த விதமான சுமூகமான முடிவும் எட்டப்படாததால் அறிவித்தபடி ஸ்ட்ரைக் நடைபெற்றது. சென்னை உட்பட எல்லா நகரங்களிலும் நேற்றும், இன்று புதுப்படம் எங்கும் திரையிடப்படவில்லை.
கடந்த ஆண்டில் ஜி.எஸ்.டி வரிவிதிப்பு, கேளிக்கை வரி உயர்வு போன்ற காரணங்களால் தமிழ் சினிமாவில் இரண்டு வாரம் படங்கள் எதுவும் ரிலீஸ் ஆகவில்லை. அப்படியும் கடந்த ஆண்டு 200 படங்கள் ரிலீஸ் ஆகியிருந்தன.
இந்த ஆண்டு, மூன்றாவது மாதத்திலேயே திரையுலகம் ஸ்ட்ரைக்கை தொடங்கி இருக்கிறது. சினிமாவை மட்டுமே நம்பி வாழும் பலர் இந்த ஸ்ட்ரைக்கால் பாதிக்கப்படுவார்கள். அரசும், டிஜிட்டல் சேவை வழங்கும் நிறுவனங்களும் மனது வைத்தால் தான் தமிழ் சினிமாவிற்கு நல்ல காலம் உருவாகும்.