'தலைவரை' யாரும் கொல்லமுடியாது!
கட்டப்பா முடிவை விட கபாலில் ரஜினியின் முடிவுதான் இப்போது எல்லோருடைய கேள்வியும்.
ரஞ்சித்தே கபாலி சுடப்படவில்லை என்று அடுத்த பாகத்துக்கு ஹிண்ட் கொடுக்கிறார். இந்த க்ளைமாக்ஸில் நமக்கு ஏற்பட்ட அனுபவம் இது...

தஞ்சாவூரில் படம் பார்க்கச் சென்றிருந்தோம். முடிந்து வரும்போது ஒரு தம்பதியின் உரையாடல்...
மனைவி: 'என்னங்க இது கபாலியை கொன்னுட்டாங்களே...'
கணவன்: 'அவரை யாருடி கொல்ல முடியும்? அப்படியே சுட்டு தலைவர் மேல குண்டு பாய்ஞ்சிருந்தாலும் ஒண்ணும் ஆகியிருக்காது. இண்டெர்வெல்லுல எத்தனை குண்டு பட்டிச்சு. தலைவருக்கு ஏதாவது ஆனிச்சா? தலைவருக்கு ஒண்ணும் ஆகியிருக்காது!'
அட... இதுதான் ரஜினியின் ரசிகர்கள்!


Click it and Unblock the Notifications











