படப்பிடிப்பில் பிஸியாக இருக்கிறோம்.. 14-ம் தேதி பர்ஸ்ட் லுக் கிடையாது!- புலி படக்குழு
சென்னை: புலி படத்தின் படப்பிடிப்பில் பிஸியாக இருப்பதால், வரும் ஏப்ரல் 14-ம் தேதி படத்தின் முதல் தோற்றம் வெளியாகாது என்று படக் குழு தெரிவித்துள்ளது.
சிம்புதேவன் இயக்கத்தில் விஜய் நடித்து வரும் படம் 'புலி. ஏப்ரல் 14-ம் தேதி இப்படத்தின் பர்ஸ்ட் லுக் வெளியாவதாக முதலில் தகவல்கள் வந்தன.

ஆனால், எப்போது பர்ஸ்ட் லுக் என்பதை படக்குழு இன்னும் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கவில்லை.
இது குறித்து படக்குழுவிடம் விசாரித்த போது, "முதலில் நாங்கள் இன்னும் பர்ஸ்ட் லுக் இப்படித்தான் இருக்க வேண்டும் என்பதையே தீர்மானிக்கவில்லை. தீவிரமாக படப்பிடிப்பில் இருக்கிறோம்.
யாருடைய தேதிகளையும் வீணடிக்காமல் ஷூட்டிங் நடத்துவதுதான் இப்போதைக்கு முதல் வேலை. அதன் பிறகுதான் மற்றவையெல்லாம்," என்றனர்.
புலி படத்தை பிடி செல்வகுமார், தமீன் பிலிம்ஸ் இணைந்து தயாரிக்கின்றனர்.
Comments


Click it and Unblock the Notifications