Don't Miss!
- News பொத்தென விழுந்த மேற்கூரை.. 3 பேரை அமுக்கி கொன்ற சென்னை பப் விபத்து பற்றி காவல்துறை விளக்கம்
- Automobiles உலகின் தலை சிறந்த கார் எது தெரியுமா? விருதை தட்டி சென்ற கியா தயாரிப்பு! சும்மா ஒன்னும் இதை தூக்கி கொடுத்திடல..
- Sports ரிஷப் பண்ட்க்கு 2 முறையும் லக் இல்ல.. தொடர்ந்து 2வது வெற்றியை பெற்ற ராஜஸ்தான்.. ரியான்,ஆவேஷ் அபாரம்
- Lifestyle வரப்போகிற சூரிய கிரகணம் இந்த 4 ராசிக்காரங்களுக்கு பெரிய துரதிர்ஷ்டத்தை தரப்போகுதாம்..ரொம்ப ஜாக்கிரதையா இருங்க!
- Education யுபிஎஸ்சி ஐஎஃப்எஸ் தேர்வு நேர்காணல் தேதி அறிவிப்பு
- Travel டைட்டானிக் கப்பல் மூழ்கி இருக்கலாம் – ஆனால் அதைப் பற்றிய சுவாரஸ்யமான உண்மைகள் மறையாது!
- Technology குறைஞ்சது 4 -5 நாள் ஆகும்.. கடைசி நேரத்துல அலையாதீங்க.. Voter ID-க்கான முக்கிய வேலை.. உடனே செஞ்சிடுங்க!
- Finance தொழில்நுட்ப துறையில் தொடரும் பணிநீக்கம்.. பெரு நிறுவனங்களின் அதிரடி முடிவுக்கு காரணம் என்ன?..
இசையமைப்பாளர் சக்ரி விஷம் கொடுத்து கொலை?: தாய், மனைவி ஒருவர் மீது ஒருவர் சரமாரி புகார்
ஹைதராபாத்: பிரபல இசை அமைப்பாளரும், தெலுங்கு பாடகருமான சக்ரி விஷம் கொடுத்துக் கொல்லப்பட்டிருக்கலாம் என சந்தேகிப்பதாக ஹைதராபாத் போலீசில் மனைவி மற்றும் தாயார் தனித்தனியே ஒருவர் மீது மற்றொருவர் புகார் அளித்துள்ளனர்.
தெலுங்குப் பாடகரும், பிரபல இசை அமைப்பாளருமான சக்ரி(40), கடந்த மாதம் திடீரென மரணமடைந்தார். மாரடைப்பு காரணமாக அவர் உயிர் பிரிந்ததாக மருத்துவமனையில் கூறப்பட்டது.
இந்நிலையில், தனது கணவரின் மரணத்தில் சந்தேகம் இருப்பதாக சக்ரியின் மனைவி ஸ்ராவனி ஹைதராபாத் ஜூப்லிஹில்ஸ் போலீசில் புகார் அளித்தார்.
அப்புகார் மனுவில் அவர் கூறியிருப்பதாவது:-
நான் எனது கணவர் மாமியார் வித்யாவதி மற்றும் மைத்துனி குடும்பத்துடன் ஜூப்ளி ஹில்ஸ் ஜர்னலிஸ்ட் காலனியில் குடியிருந்த வந்தேன். எனது 2-வது மைத்துனி கிருஷ்ண பிரியா கணவர் ராஜேஸ்வர ராவுக்கு வியாபாரத்துக்காக எனது கணவர் சக்ரி ரூ.45 லட்சம் கொடுத்தார். கடந்த நவம்பர் 27-ந்தேதி பணத்தை திருப்பி கேட்டார்.
இதனால் எனது மாமியார் கோபம் அடைந்து யூகப் கூடாவில் உள்ள அவரது இன்னொரு மகள் வீட்டுக்கு சென்று விட்டார்.
டிசம்பர் 14-ந்தேதி இரவு எனது மாமியார் அழைத்ததின் பேரில் எனது கணவர் சக்ரி யூகப்கூடா சென்றார். புறப்படும் போது மிகவும் சந்தோஷமாக காணப்பட்டார். ஆனால் இரவு 1.30 மணிக்கு வீடு திரும்பிய போது மிகவும் சோர்வாக இருந்தார். சகோதரி வீட்டிலேயே சாப்பிட்டு விட்டதாக கூறினார். சொத்து விஷயத்தில் அவர்கள் நெருக்கடி கொடுத்ததாகவும் சொந்தத்தை விட அவர்களுக்கு பணம்தான் முக்கியமாக இருக்கிறது என்று வருத்தப்பட்டு கூறி தூங்கச் சென்றார்.
ஆனால் காலையில் எழுந்திருக்கவே இல்லை. அசைவற்று இருந்த அவரை அப்பல்லோ ஆஸ்பத்திரிக்கு அழைத்துச் சென்றோம். ஆனால் அவர் ஏற்கனவே இறந்து விட்டதாக டாக்டர்கள் கூறினார்கள்.
எனது கணவர் மறைவுக்கு பிறகு என்னை எனது மாமியாரும், மைத்துனிகளும் சித்ரவதை செய்தார்கள். வீட்டை விட்டு வெளியேறுமாறு மிரட்டினார்கள்.
இவர்களது செயல்பாடுகளை பார்க்கும் போது எனது கணவர் மரணத்தில் மர்மம் இருப்பதாக சந்தேகிக்கிறேன். அவர் விஷம் வைத்து கொலை செய்யப்பட்டு இருக்கலாம் என்று கருதுகிறேன்.
எங்களுக்கு அரசியல் செல்வாக்கு இருக்கிறது. எங்களை ஒன்றும் செய்ய முடியாது என்று எனது கணவர் குடும்பத்தினர் மிரட்டுகிறார்கள். எனது உயிருக்கு ஆபத்து ஏற்பட்டு உள்ளது எனது உயிருக்கு ஏதாவது நேர்ந்தால் அதற்கு எனது கணவர் குடும்பத்தினர் தான் காரணமாக இருக்கும். எனது உயிருக்கு பாதுகாப்பு அளிப்பதுடன் எனது கணவரின் மர்ம மரணம் குறித்து விசாரணை நடத்த வேண்டும்.
இவ்வாறு அதில் அவர் தெரிவித்துள்ளார்.
இந்த புகாரின் அடிப்படையில் போலீசார், ‘‘ஸ்ராவனியின் மாமியார் வித்யாவதி, மைத்துனர் மகித் என்ற மாதவராஜ், மைத்துனிகள் வானிதேவி, கிருஷ்ண பிரியா இவர்களது கணவர்கள் லட்சுமணராவ், நாகேஸ் வரராவ், உறவினர்கள் ஆதர்ஷினி, காளிகிரி, காளி பிரத்யுக்ஷா ஆகிய 9 பேர் மீது 3 பிரிவின் கீழ் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
ஸ்ராவனியின் புகாரைத் தொடர்ந்து சக்ரியின் தாயார் வித்யாவதியும் போலீசில் புகார் ஒன்றை அளித்துள்ளார். அதில் அவர், தனது மகனின் மரணத்தில் சந்தேகம் இருப்பதாகவும், சக்ரியை அவரது மனைவியும், மனைவியின் பெற்றோரும் சேர்ந்து விஷம் கொடுத்து கொலை செய்திருக்கலாம் என சந்தேகிப்பதாகவும் அவர் தெரிவித்துள்ளார். மேலும், சக்ரியின் உடலை பிரேதபரிசோதனை செய்ய வேண்டாம் என ஸ்ராவனி சம்மதிக்க வைத்ததாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
மனைவி மற்றும் தாயாரின் புகார்களைத் தொடர்ந்து, சக்ரியின் மரணம் குறித்து போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகிறார்கள்.