Don't Miss!
- News அரசு புறம்போக்கு நிலம் என கைவிரித்த அதிகாரிகள்.. பட்டா வழங்க மறுப்பு.. ஹைகோர்ட் அதிரடி உத்தரவு
- Sports IPL 2024: ஏமாந்து போன ப்ரித்வி ஷா.. அது அவுட்டே இல்லை.. கொந்தளித்த டெல்லி ரசிகர்கள்.. என்ன நடந்தது?
- Lifestyle 18 ஆண்டுகளுக்கு பின் உருவான அங்காரக யோகம்: ஜூன் வரை இந்த 3 ராசிக்காரங்க கவனமா இருக்கணும்...
- Technology சீனாவிற்கு செக் வச்ச கேப்புல.. ரஷ்யாவிற்கும் ஒரு ஆப்பு பார்சல் பண்ண இந்தியா.. சாதித்தது DRDO புதிய ஏவுகணை!
- Automobiles பஜாஜ் நிறுவனத்தை உலகமே திரும்பி பாக்க போகுது! இப்படி ஒரு டூவீலரை இதுக்கு முன்னாடி யாருமே கொண்டு வந்தது இல்ல!
- Finance சிங்கம் போல் களமிறங்குகிறது BSNL.. டிசிஎஸ் உடன் மாஸ் திட்டம்..!
- Education ஜூன் 16-ல் யுஜிசி நெட் தேர்வு...ஏற்பாடுகள் தயார்...!!
- Travel இந்தியாவில் உள்ள இந்த மினு மினுக்குற காட்டுக்கு போய் இருக்கீங்களா – ஒரு முறை போய் பாருங்க!
'உங்கள வெரட்டி வெளுக்கத்தான் இந்தப் போராட்டம்..' - வைரலாகும் பா.விஜய் வீடியோ!
Recommended Video
சென்னை : காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வலியுறுத்தி தமிழகம் முழுக்க தொடர்ந்து போராட்டங்கள் நடைபெற்று வருகின்றன. விவசாயிகளுக்காக அனைவரும் கைகோர்த்து போராட்டங்களை நடத்தி வருகிறார்கள்.
காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வலியுறுத்தும் போராட்டத்தில் திரையுலகினரும் இணைந்துள்ளனர். நேற்று முன் தினம் சென்னை சேப்பாக்கத்தில் நடைபெற்ற ஐபிஎல் கிரிக்கெட் போட்டிகளுக்கு எதிர்ப்புத் தெரிவித்து போராட்டம் செய்த நடிகர்கள், இயக்குநர்கள் பலர் கைது செய்யப்பட்டனர்.
இந்நிலையில், நடிகரும், பாடலாசிரியருமான பா.விஜய் இந்த விவகாரம் பற்றி தனது ஸ்டைலில் கவிதை ஒன்றை எழுதி, தானே அதைப் பாடி ட்விட்டர் பக்கத்தில் வீடியோவாகப் பதிவிட்டுள்ளார்.
காவிரி விவகாரம் தொடர்பாக, பாடலாசிரியர் பா.விஜய் எழுதிய கவிதை வருமாறு...
"தறிகெட்டுப்போன நாட்டுக்கு எதுக்குடா கிரிக்கெட்டு..
மொதல்ல தரங்கெட்டுப்போன அதிகார வர்க்கத்த சரிகட்டு..!
சே..சேன்னு கூட்டம் மெதப்புல மெதக்கலாம் சேப்பாக்கம்..
அத செங்கல் செங்கலா எங்க கூட்டாம் தூள் தூளாக்கும்..!
கடற்கரை ஓரத்தை பூட்டி வச்சுப்புட்டியே காவலாளி..
புயல் காத்துக்கு பூட்டு போட்டவன் எவண்டா புத்திசாலி..!
ஆட்டம் நடக்கட்டும் மட்டைய தூக்கி அடிப்பாய்ங்க..
எங்க பசங்க ஒரு நாள் பாராளுமன்றத்தையே புடிப்பாய்ங்க..!
விளம்பரத்துல தன்னையே வித்தவனை எல்லாம் வீரன்ற..
தேச எல்லையில செத்த எத்தன பேருக்கு இது தேவன்ற..?
ஒரே இந்தியா ஒரே ரத்தமுனு கூவுறியே..
அட காவிரிக்கு மட்டும் கட்டத்த மாத்தி தாவுறியே..!
ஆவட்டும் சாரே, ஆனவரைக்கும் ஊரை ஏமாத்து..
எங்க பச்சத்தமிழனுக்கு புரிஞ்சுபோச்சு ஒம் பம்மாத்து..!
காவிரி எங்க கரிகாலனால தாண்டா ஆறாச்சு..
எங்க தொண்டைய மெறிச்சு தொண்டுனு சொல்லுற வாய் சேறாச்சு..!
காவிரில பல பேர் கால் கழுவ மட்டும்தான், கால் வச்சான்..
அப்படி வீணான தண்ணியில விவசாயத் தமிழன்தான் நெல் வச்சான்..!
பால் குடிச்ச சிசுவோட கழுத்த நெறிச்ச பேய்க்கூட்டம்..
உங்கள வெரட்டி அடிச்சு, வெளுக்கத்தாண்டா இந்தப் போராட்டம்..!
தறிகெட்டுப்போன நாட்டுக்கு எதுக்குடா கிரிக்கெட்டு..
மொதல்ல தரங்கெட்டுப்போன அதிகார வர்க்கத்த சரிகட்டு..!"
இவ்வாறு எழுதிப் பாடியிருக்கிறார் பா.விஜய். இந்த வீடியோ சமூக வலைதளங்களில் தற்போது வைரலாகி வருகிறது.
— PA.VIJAY (@poetpaavijay1) April 11, 2018