"பாயும் புலி" விவகாரத்தில் திடீர் திருப்பம்... விஷாலுக்கு சரத்குமார் ஆதரவு

By Manjula

சென்னை: பாயும் புலி படத்திற்கு தயாரிப்பாளர் சங்கம் விதித்த தடை திரையுலகினர் மத்தியில் அதிருப்தியை ஏற்படுத்தி இருந்த நிலையில், நடிகர் சரத்குமார் தனது ஆதரவை விஷாலுக்கு தெரிவித்திருக்கிறார்.

நடிகர் சங்க விவகாரத்தில் சரத்குமாரும், விஷாலும் மோதிக் கொள்ளும் விஷயம் ஊரறிந்த ஒன்று. எனினும் விஷாலின் படத்திற்கு ஏற்பட்ட இந்தத் தடையை நீக்க நடிகர் சங்கம் சார்பாக பேச்சுவார்த்தை நடத்தி அதில் சரத்குமாரும் கலந்து கொண்டிருக்கிறார்.

Paayum Puli Issue: Sarathkumar Joint Hands With Vishal

மேலும் விஷால் படத்தை நிறுத்தக்கூடாது திட்டமிட்டபடி படம் வெளியாகவேண்டும் என்று பேச்சுவார்த்தையின் போது சொல்லியிருக்கிறார் சரத்குமார்.

நடிகர் சங்க விவகாரத்தில் இருவரும் எதிரும் புதிருமாக இருக்கும் சூழ்நிலையில் பாயும் புலிக்கு ஏற்பட்ட தடையை நீக்க நடிகர்சங்கம் சார்பாக படம் சம்பந்தப்பட்ட பேச்சு வார்த்தைகளில் சரத்குமார் பங்கேற்றிருக்கிறார்.

மேலும் திட்டமிட்டபடி படம் வெளியாகியே தீரவேண்டும் என்றும் பேச்சு வார்த்தையில் சரத்குமார் சொல்லியிருப்பது திரையுலகினர் மத்தியில் ஆச்சரியம் கலந்த அதிர்ச்சி அலைகளை ஏற்படுத்தி இருக்கிறது.

பாயும்புலி விவகாரத்தில் சற்று முன்பு கிடைத்த தகவல்படி தயாரிப்பாளர்கள் சங்கம் தாங்கள் விதித்த தடையை நீக்கியிருப்பது குறிப்பிடத்தக்கது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X