ரஜினி அரசியலுக்கு எப்போது வருவார்? பார்த்திபன் சொன்ன பதில்!
தமிழ்நாட்டில் இப்போதைய ஹாட் டாபிக் ரஜினியின் அரசியல் பிரவேசம்தான். ஒரு மாதமாக பற்றி எரிந்துகொண்டிருந்தாலும் நாள் ஆக நாள் ஆக நீர்த்துப்போகாமல் பரவிக்கொண்டே இருக்கிறது.

காரைக்குடியில் ஒரு பள்ளி ஆண்டு விழாவில் கலந்துகொண்ட நடிகர் பார்த்திபன் பேசும்போது, "நான் ரஜினிகாந்துடன் புதுக்கவிதை என்ற படத்தில் ஒரு காட்சியில் நடித்தேன். ஆனால் படம் வெளியான பின்னர் பார்த்தால் அந்தக் காட்சியே படத்தில் இல்லை. தமிழகத்தில் இருக்கும் அரசியல்வாதிகள் நாட்டின் முக்கியம் பற்றி கவலைப்படுவதில்லை. முடிந்த அளவுக்கு சுரண்டி சேர்ப்பதில் தான் கவனம் செலுத்துகிறார்கள்," என்று காரசாரமாக பேசினார்.
பார்த்திபனிடம் 'ரஜினி அரசியலுக்கு வருவாரா?' என்று கேட்டதற்கு 'அது ஆண்டவன் நினைத்தால்தான் நடக்கும்' என்று சொன்னார்.
Comments


Click it and Unblock the Notifications