Don't Miss!
- News தமிழ்நாட்டில் ஐஏஎஸ், ஐபிஎஸ் அதிகாரிகளுக்கு சம்பளம் எவ்வளவு.. இவ்வளவு சலுகைகளா? ஆச்சர்யமான தகவல்கள்
- Technology iPhone-க்கு நெத்தி அடி.. வயர்லெஸ் MagCharge உடன் வந்த முதல் ஆண்ட்ராய்டு போன்.. Samsung இல்லை OnePlus இல்லை..
- Sports ஆர்சிபி வேண்டாம் என ஒதுக்கிய 3 வீரர்கள்.. ஐபிஎல் 2024 சீசனில் பட்டையை கிளப்பும் அதிசயம்
- Finance தொழில்நுட்ப துறையில் தொடரும் பணிநீக்கம்.. பெரு நிறுவனங்களின் அதிரடி முடிவுக்கு காரணம் என்ன?..
- Lifestyle 1000 ஆண்டுகளுக்கு முன் ஒரே இரவில் சர்ஜிக்கல் தாக்குதல் நடத்தி ஒரு நாட்டையே வென்ற தமிழ் அரசர்... யார் தெரியுமா?
- Automobiles அடி மாட்டு விலைக்கு எலெக்ட்ரிக் காரை களமிறக்கும் மாருதி! பெட்டி கடைல வெத்தல, பாக்கு விக்கற மாதிரி விக்க போகுது
- Travel 2050 வருஷம் வருறதுக்குள்ள உலகத்துல உள்ள இந்த அழகான இடங்கள் எல்லாம் கடலுக்குள்ள போயிடுமாம்!
- Education ஆஸ்திரேலியாவில் உயர்கல்வி பயில இந்திய மாணவர்கள் விரும்புவது ஏன்?
திரையுலகில் எனது 'கோடிட்ட இடங்களை' நிரப்பியர் குரு பாக்யராஜ்! - பார்த்திபன்
திரையுலகில் எனது கோடிட்ட இடங்களை நிரப்பியவர் குரு பாக்யராஜ்தான் என்று கூறினார் இயக்குநர் பார்த்திபன்.
தனது படத்தின் தலைப்புகளை மிக வித்தியாசமாக வைப்பதில் ஏகத்துக்கும் மெனக்கெடுபவர் பார்த்திபன். 'கதை திரைக்கதை வசனம் இயக்கம்' படத்துக்குப் பிறகு அவர் இப்போது இயக்கி வரும் படத்துக்கு கோடிட்ட இடங்களை நிரப்புக என்று தலைப்பிட்டுள்ளார்.
இந்தப் படத்தை ரீல் எஸ்டேட் கம்பெனி எல் எல் பி' மற்றும் 'பையாஸ்க்கோப் பிலிம் பிரேமர்ஸ்' இணைந்து தயாரிக்கின்றன.
சாந்தனு, பார்வதி நாயர், தம்பி ராமையா, சிங்கம்புலி நடிக்கும் இந்தப் படத்துக்கு சத்யா இசையமைக்க, அர்ஜுன் ஜனா ஒளிப்பதிவு செய்துள்ளார். இந்தப் படத்துக்கு பிரபு தேவா நடனம் அமைத்துள்ளது குறிப்பிடத்தக்கது.
இந்தப் படம் குறித்து பார்த்திபன் பேசுகையில், "பிழைகளைக் கொண்டு உருவாக்கப்பட்டிருப்பதுதான் எங்களின் 'கோடிட்ட இடங்களை நிரப்புக...' அந்தப் பிழை ஒரு காதலாக இருக்கலாம், அல்லது வாழ்க்கையாக இருக்கலாம் அல்லது அதற்கும் மேலான ஒன்றாகவும் இருக்கலாம். அது என்ன என்பதை ரசிகர்கள் தான் இந்த கோடிட்ட இடங்களில் நிரப்ப வேண்டும்...
நான் திரையுலகில் காலடி எடுத்து வைத்த போது என்னுடைய வாழ்க்கை கோடிட்ட இடங்களாகத்தான் இருந்தது.... அந்த காலியான இடங்களை நிரப்பியவர் என்னுடைய குருநாதர் பாக்கியராஜ் சார்.... அவருக்குச் சமர்ப்பிக்கும் வகையில் நான் உருவாக்கிய திரைப்படம்தான் இந்த 'கோடிட்ட இடங்களை நிரப்புக'.
மேலும் இந்த திரைப்படத்தில் அவருடைய மகன் சாந்தனு கதாநாயகனாக நடித்திருப்பது எனக்கு எல்லையற்ற மகிழ்ச்சி. அவருடைய திரையுலக வாழ்க்கையில் விடுபட்டிருக்கும் இடங்களை நிரப்பும் திரைப்படமாக எங்களின் 'கோடிட்ட இடங்களை நிரப்புக' இருக்கும்," என்றார் நம்பிக்கையுடன்.