Don't Miss!
- News விவசாயிகளுக்கு நல்ல சேதி.. பயிர்க்கடன் தேவை? "அடங்கல்" இருக்கா? கூட்டுறவு வங்கிகளில் சூப்பர் மாற்றம்
- Finance தங்கம் விலை உயர்வை சமாளிக்க, நகை கடைகள் புதிய ஐடியா.. உஷாரா இருங்க மக்களே..!
- Sports "பிரேக் அப் பண்ணப் போறாங்க" அழகான பெண்ணை பார்த்து வாயை பிளந்த சுப்மன் கில்.. வெளியான வீடியோ
- Lifestyle கர்ப்ப காலத்தில் பதட்டப்படும் பெண்களுக்கான டிப்ஸ்..!
- Technology பொளந்து கட்டுது சேல்.. ரூ.20499 பட்ஜெட்ல 108MP கேமரா.. 3D டிஸ்பிளே.. 5800mAh பேட்டரி.. எந்த மாடல்?
- Automobiles போன தடவ சிவப்பு நிற சைக்கிள்.. இந்த முறை இன்னோவா கார்.. இந்த கார் வாயிலாக அவர் என்ன சொல்லியிருக்கார்?
- Travel சென்னையிலிருந்து சம்மர் ஸ்பெஷல் வந்தே பாரத் ரயில்கள் – திருச்சி, மதுரை, நாகர்கோவில்!
- Education பிளஸ்-2 படித்திருந்தால் போதும்...மத்தியஅரசு வேலை தயார்..!!
தமிழ், தெலுங்கைத் தொடர்ந்து கன்னடத்திற்கு செல்லும் 'பிச்சைக்காரன்'
பெங்களூர்: தமிழில் ஹிட் தெலுங்கில் மெகா ஹிட்டடித்த 'பிச்சைக்காரன்' அடுத்ததாக கன்னடத்தில் ரீமேக்காக உள்ளது.
விஜய் ஆண்டனி- சாதனா டைட்டஸ் நடிப்பில் வெளியான 'பிச்சைக்காரன்' தமிழில் 15 கோடிகள் வரை வசூல் செய்தது. தமிழைத் தொடர்ந்து தெலுங்கில் இப்படத்தை 'பிச்சக்காடு' என்ற பெயரில் டப் செய்து வெளியிட்டனர்.
வெறும் 50 லட்சங்களுக்கு விலை போன இப்படம் அங்கு 25 கோடிகள் வரை வசூலித்து மிகப்பெரிய சாதனை செய்துள்ளது. இந்நிலையில் கன்னடத்தில் இப்படத்தை ரீமேக் செய்யப் போவதாக கூறுகின்றனர்.
இப்படத்தின் கன்னட உரிமையை யோகேஷ் துவாரகேஷ் என்பவர் கைப்பற்றியிருக்கிறார். இதில் நாயகனாக கிருஷ்ணா அஜய் ராவ் நடிக்கிறார். இதுகுறித்து அஜய் '' சமீபத்தில் இப்படத்தை பார்த்தேன்.
இதை கன்னடத்தில் ரீமேக் செய்ய ஆசைப்பட்டு சம்பந்தப்பட்டவர்களைத் தொடர்பு கொண்டேன். ஆனால் ஏற்கனவே இப்படத்தின் கன்னட உரிமையை யோகேஷ் துவாரகேஷ் கைப்பற்றியிருந்தார்.
இப்படத்தில் நான் நடிக்கிறேன் என்று அவரிடம் கூறியபோது சுதீப்பிடம் இதற்காக பேச்சுவார்த்தை நடத்தி வருவதாகக் கூறினார். ஆனால் அதிர்ஷ்டம் என் பக்கமிருந்தது.
யோகேஷ் என்னைத் தொடர்பு கொண்டு இப்படத்தில் நடிக்கிறீர்களா? என்று கேட்டார். நான் உடனடியாக ஒப்புக் கொண்டேன். விரைவில் படப்பிடிப்பு துவங்கவுள்ளது'' என்று தெரிவித்திருக்கிறார்.
தெலுங்கைத் தொடர்ந்து கன்னடத்திலும் இப்படம் ரீமேக் ஆவதால் விஜய் ஆண்டனி நடித்து வரும் படங்களின் மதிப்பு, தங்கவிலை போல நாளுக்குநாள் அதிகரித்துக்கொண்டே செல்கிறது.