Don't Miss!
- Technology iPhone-க்கு நெத்தி அடி.. வயர்லெஸ் MagCharge உடன் வந்த முதல் ஆண்ட்ராய்டு போன்.. Samsung இல்லை OnePlus இல்லை..
- News "டெல்லியில் ஜனாதிபதி ஆட்சி?" கவர்னர் சொன்ன அந்த ஒரு வார்த்தை! ஆம் ஆத்மி பதிலடி.. சட்டம் சொல்வது என்ன
- Sports ஆர்சிபி வேண்டாம் என ஒதுக்கிய 3 வீரர்கள்.. ஐபிஎல் 2024 சீசனில் பட்டையை கிளப்பும் அதிசயம்
- Finance தொழில்நுட்ப துறையில் தொடரும் பணிநீக்கம்.. பெரு நிறுவனங்களின் அதிரடி முடிவுக்கு காரணம் என்ன?..
- Lifestyle 1000 ஆண்டுகளுக்கு முன் ஒரே இரவில் சர்ஜிக்கல் தாக்குதல் நடத்தி ஒரு நாட்டையே வென்ற தமிழ் அரசர்... யார் தெரியுமா?
- Automobiles அடி மாட்டு விலைக்கு எலெக்ட்ரிக் காரை களமிறக்கும் மாருதி! பெட்டி கடைல வெத்தல, பாக்கு விக்கற மாதிரி விக்க போகுது
- Travel 2050 வருஷம் வருறதுக்குள்ள உலகத்துல உள்ள இந்த அழகான இடங்கள் எல்லாம் கடலுக்குள்ள போயிடுமாம்!
- Education ஆஸ்திரேலியாவில் உயர்கல்வி பயில இந்திய மாணவர்கள் விரும்புவது ஏன்?
போபாலை சேர்ந்தவர்களுக்கு எதிரான கமெண்ட்... தி காஷ்மீர் ஃபைல்ஸ் இயக்குநர் மீது வழக்குப்பதிவு
மும்பை : கடந்த 11ம் தேதி வெளியான தி காஷ்மீர் ஃபைல்ஸ் படம் சிறப்பான வரவேற்பையும் விமர்சனங்களையும் மற்றும் வசூலையும் பெற்று வருகிறது. விவேக் அக்னிஹோத்ரி இயக்கத்தில் உருவாகியுள்ள இந்தப் படம் கடந்த 80களில் காஷ்மீரி பண்டிதர்கள் காஷ்மீர் பள்ளத்தாக்கிலிருந்து வெளியேறியதை மையமாக கொண்டு எடுக்கப்பட்டுள்ளது.
தி காஷ்மீர் ஃபைல்ஸ் படம்
காஷ்மீரில் கடந்த 1990களில் இந்து மதத்தினரை குறிவைத்து பயங்கரவாத தாக்குதல்கள் நடத்தப்பட்டன. இந்து மதத்தை சேர்ந்த பண்டிதர்கள் காஷ்மீரை விட்டு வெளியேற வேண்டும் என பயங்கரவாதிகள் பகிரங்கமாக எச்சரிக்கை கொடுத்தனர். அதேபோல், காஷ்மீரில் இஸ்லாமிய மத வழிபாட்டு தளத்தில் அமைக்கப்பட்டிருந்த ஒலிப்பெருக்கி மூலமாகவும் இந்த எச்சரிக்கை கொடுக்கப்பட்டது.
காஷ்மீர் பண்டிதர்கள் குறித்த கதைக்களம்
இதையடுத்து காஷ்மீரில் இருந்து லட்சக்கணக்கான பண்டிதர்கள் காஷ்மீரில் தங்களது வாழ்விடங்களை விட்டுவிட்டு வெளியேறி நாட்டின் பல பகுதிகளுக்கு சென்றனர். அவர்களுக்கு எதிரான தாக்குதல்கள் மற்றும் அவர்களின் வெளியேற்றத்தை மையமாக வைத்து பாலிவுட்டில் தற்போது தி காஷ்மீர் ஃபைல்ஸ் என்ற படம் எடுக்கப்பட்டுள்ளது.
விவேக் அக்னிஹோத்ரி இயக்கம்
விவேக் அக்னிஹோத்ரி இயக்கத்தில் இந்தப் படம் உருவாகியுள்ளது. படத்தில் அனுபம் கெர், பல்லவி ஜோஷ், பாஷா சும்ப்லி, தர்ஷன் குமார் உள்ளிட்டோர் நடித்துள்ளனர். கடந்த 11ம் தேதி ரிலீசான இந்தப் படம் சிறப்பான வரவேற்பை பெற்றுள்ளது. பிரதமர் மோடியின் பாராட்டிற்கும் உள்ளாகியுள்ளது.
விவேக் அக்னிஹோத்ரி பேட்டி
படத்தில் பல மாநிலங்களில் வரிச்சலுகை கொடுக்கப்பட்டுள்ளது. படத்திற்கு அச்சுறுத்தலும் காணப்பட்ட நிலையில் இயக்குநர் விவேக் அக்னிஹோத்ரிக்கு ஒய் பிரிவு பாதுகாப்பு வழங்கப்பட்டது. இந்நிலையில் போபால் பகுதியினர் குறித்த விவேக்கின் பேட்டி தற்போது அவருக்கு எதிராக கிளம்பியுள்ளது.
போபாலை சேர்ந்தவர்கள் குறித்த கமெண்ட்
சமீபத்திய பேட்டியில் போபாலை சேர்ந்தவர்கள் அவர்களின் நவாமி விருப்பங்களையடுத்து எப்போதும் ஓரினச்சேர்க்கையாளர்களாக கருதப்படுவதாக அவர் தெரிவித்திருந்தார். இதையடுத்து அவர்மீது மும்பை வெர்சோவா காவல்நிலையத்தில் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
விவேக்கிற்கு எதிராக வழக்குப்பதிவு
அவரது இந்தப் பேட்டியின் வீடியோ சமூக வலைதளங்களில் வைரலானதையடுத்து அவர்மீது மும்பையை சேர்ந்த ரோஹித் பாண்டே இந்த வழக்கை பதிவு செய்துள்ளார். இந்தப் பேட்டியில் தான் போபாலை சேர்ந்தவன் என்றாலும் தான் அதை வெளிப்படுத்திக் கொள்ள எப்போதுமே விரும்பியதில்லை என்றும் விவேக் தெரிவித்திருந்தார்.