Don't Miss!
- Finance தொழில்நுட்ப துறையில் தொடரும் பணிநீக்கம்.. பெரு நிறுவனங்களின் அதிரடி முடிவுக்கு காரணம் என்ன?..
- Lifestyle 1000 ஆண்டுகளுக்கு முன் ஒரே இரவில் சர்ஜிக்கல் தாக்குதல் நடத்தி ஒரு நாட்டையே வென்ற தமிழ் அரசர்... யார் தெரியுமா?
- News "மகளிர் உரிமை தொகை வரல.." அமைச்சரை பேச விடாமல் நிறுத்திய பெண்.. மேடையில் அடுத்து நடந்த பரபர சம்பவம்
- Automobiles அடி மாட்டு விலைக்கு எலெக்ட்ரிக் காரை களமிறக்கும் மாருதி! பெட்டி கடைல வெத்தல, பாக்கு விக்கற மாதிரி விக்க போகுது
- Sports ரோகித்.. ரோகித் என கத்திய ரசிகர்கள்.. ஓங்கி ஒரு அடி விட்ட ஹர்திக் பாண்டியா - வீடியோ
- Technology குசும்பன்யா இந்த Samsung.. மாஸ் 5G போனை ரூ.10,000 விலையில் விற்பனை.. எந்த மாடல்? எப்போ வாங்கலாம்?
- Travel 2050 வருஷம் வருறதுக்குள்ள உலகத்துல உள்ள இந்த அழகான இடங்கள் எல்லாம் கடலுக்குள்ள போயிடுமாம்!
- Education ஆஸ்திரேலியாவில் உயர்கல்வி பயில இந்திய மாணவர்கள் விரும்புவது ஏன்?
என்ன நடந்தாலும் நீங்கதான் பொறுப்பு! - தயாரிப்பாளர்களுக்கு போலீஸ் எச்சரிக்கை
சென்னை: "திரைப்பட தயாரிப்பாளர் சங்க பொதுக்குழுவில் அசம்பாவிதங்கள் நடந்தால், நீங்களே பொறுப்பு'' என்று பட அதிபர்கள் சங்க தலைவருக்கும், செயலாளருக்கும் சென்னை ஆயிரம் விளக்கு போலீஸ் இன்ஸ்பெக்டர் எச்சரிக்கை நோட்டீஸ் அனுப்பியுள்ளார்.
தமிழ் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்கத்தின் பொதுக்குழு கூட்டம், நாளை (ஞாயிற்றுக்கிழமை) சென்னை பிலிம்சேம்பர் தியேட்டரில் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டது. ஆனால் அந்த தியேட்டரில் 200 பேர் மட்டுமே அமரக்கூடிய வசதி இருப்பதாகவும், ஆனால் 1900 பேருக்கு அழைப்பிதழ் அனுப்பப்பட்டிருப்பதாகவும் கூறப்படுகிறது.
எனவே அந்த தியேட்டரில் பொதுக்குழு கூட்டம் நடத்த முடியாது என்றும், மீறி நடத்தினால், அதனால் ஏற்படும் விபரீதங்களுக்கு நீங்களே பொறுப்பு ஏற்க வேண்டும் என்றும் தமிழ் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்க தலைவர், செயலாளர் ஆகிய இருவருக்கும் ஆயிரம் விளக்கு போலீஸ் இன்ஸ்பெக்டர் நோட்டீஸ் அனுப்பியுள்ளார்.
இந்தக் கூட்டத்தில் பிரச்சினை எழுப்பும் நோக்கத்தில் இரு குழுக்கள் முயன்று வருவதாக போலீசாருக்கு திரைப்படத் தயாரிப்பாளர்கள் சிலர் தகவல் அளித்திருப்பதால், இந்த எச்சரிக்கையை போலீசார் விடுத்துள்ளனர்.
இதனால் நாளைய கூட்டத்தில் ரசாபாசமான நிகழ்வுகள் அரங்கேறக் கூடும் என்று எதிர்ப்பார்க்கப்படுகிறது.