twitter
    For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    என்ன நடந்தாலும் நீங்கதான் பொறுப்பு! - தயாரிப்பாளர்களுக்கு போலீஸ் எச்சரிக்கை

    By Shankar
    |

    சென்னை: "திரைப்பட தயாரிப்பாளர் சங்க பொதுக்குழுவில் அசம்பாவிதங்கள் நடந்தால், நீங்களே பொறுப்பு'' என்று பட அதிபர்கள் சங்க தலைவருக்கும், செயலாளருக்கும் சென்னை ஆயிரம் விளக்கு போலீஸ் இன்ஸ்பெக்டர் எச்சரிக்கை நோட்டீஸ் அனுப்பியுள்ளார்.

    தமிழ் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்கத்தின் பொதுக்குழு கூட்டம், நாளை (ஞாயிற்றுக்கிழமை) சென்னை பிலிம்சேம்பர் தியேட்டரில் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டது. ஆனால் அந்த தியேட்டரில் 200 பேர் மட்டுமே அமரக்கூடிய வசதி இருப்பதாகவும், ஆனால் 1900 பேருக்கு அழைப்பிதழ் அனுப்பப்பட்டிருப்பதாகவும் கூறப்படுகிறது.

    எனவே அந்த தியேட்டரில் பொதுக்குழு கூட்டம் நடத்த முடியாது என்றும், மீறி நடத்தினால், அதனால் ஏற்படும் விபரீதங்களுக்கு நீங்களே பொறுப்பு ஏற்க வேண்டும் என்றும் தமிழ் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்க தலைவர், செயலாளர் ஆகிய இருவருக்கும் ஆயிரம் விளக்கு போலீஸ் இன்ஸ்பெக்டர் நோட்டீஸ் அனுப்பியுள்ளார்.

    இந்தக் கூட்டத்தில் பிரச்சினை எழுப்பும் நோக்கத்தில் இரு குழுக்கள் முயன்று வருவதாக போலீசாருக்கு திரைப்படத் தயாரிப்பாளர்கள் சிலர் தகவல் அளித்திருப்பதால், இந்த எச்சரிக்கையை போலீசார் விடுத்துள்ளனர்.

    இதனால் நாளைய கூட்டத்தில் ரசாபாசமான நிகழ்வுகள் அரங்கேறக் கூடும் என்று எதிர்ப்பார்க்கப்படுகிறது.

    English summary
    The City police warned Tamil Film Producers Council office bearers to convene the General body meeting peacefully and take the full responsibility to the happenings in the meeting.
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X
    X