பொள்ளாச்சி குற்றவாளிகளுக்கு என்ன தண்டனை?: படம் போட்டுக் காட்டிய விவேக்
Recommended Video

சென்னை: பொள்ளாச்சி குற்றவாளிகளுக்கு என்ன தண்டனை அளிக்க வேண்டும் என்பதை சொல்லாமல் சொல்லியுள்ளார் பாடலாசிரியர் விவேக்.
பொள்ளாச்சியில் அப்பாவி பெண்களை மிரட்டி பாலியல் பலாத்காரம் செய்த வழக்கில் 5 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். மீதமுள்ள 15 பேர் எப்பொழுது கைது செய்யப்படுவார்கள் என்று மக்கள் கேட்டுக் கொண்டிருக்கிறார்கள்.
இந்நிலையில் பாடலாசிரியர் விவேக் அந்த குற்றவாளிகளுக்கான தண்டனை குறித்து சூசகமாக தெரிவித்துள்ளார்.
விவேக்
தெறி படத்தில் இளம் பெண்ணை பலாத்காரம் செய்தவருக்கு விஜய் அளித்த தண்டனை பற்றிய ஓவியத்தை தனது ட்விட்டர் ப்ரொஃபைல் பிக்சராக வைத்துள்ளார் விவேக். படம் போட்டு தண்டனை பற்றி சொல்லாமல் சொல்லியுள்ளார்.
பெண்கள்
முன்னதாக விவேக் பொள்ளாச்சியில் பாதிக்கப்பட்ட பெண்கள் குறித்து ட்வீட் செய்ததை பார்த்த ஒருவர் அந்த பெண்கள் மீது தான் தவறு என்றார். இதை பார்த்த விவேக் கோபம் அடைந்தார்.
பார்வை
பெண்களின் மீது குறை கூறிய நபருக்கு பதில் அளித்து விவேக் ட்வீட்டியதாவது, 'உன்ன மாதிரி இருக்குறவங்க தான் இதுக்கு காரணமே. உங்க பார்வை எல்லாம் பெண் மேல மட்டும் தான் இருக்கு. அவ வாழ்க்கைய நீங்க ‘காப்பாத்தி' ‘மீட்டெடுத்து' ‘செதுக்கி' கிழிச்ச வரைக்கும் போதும்.
அங்க நீ கவனிக்க விட்டுட்ட ஆண்கள் என்ன மிருகங்களா மாறி இருக்காங்கன்னு கண் வாடகைக்கு வாங்கியாவது பாரு' என்று விளாசினார்.

பணம்
பொள்ளாச்சி சம்பவத்தால் பாதிக்கப்பட்ட பெண்கள் மீது பலரும் குறை கூறுகிறார்கள். சிலரோ ஒருபடி மேலே போய் பணத்திற்காக அந்த பெண்கள் தங்களை அழைத்த இடத்திற்கு சென்றதாக மனசாட்சியே இல்லாமல் பேசுகிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.


Click it and Unblock the Notifications











