Don't Miss!
- Finance
அடுத்த அதிரடி.. அதானி குழுமம் வாங்கிய கடன் எவ்வளவு? வங்கிகளிடம் கேட்கிறது ஆர்பிஐ..!!
- Lifestyle
இரத்த அழுத்தம் & இதய நோய் ஆபத்தை ஏற்படுத்தும் உங்க இரத்த சர்க்கரை அளவை குறைக்க இந்த உணவுகள் போதுமாம்!
- News
கருணாநிதி மீது நாங்க அளவுகடந்த அன்பு வச்சிருந்தோம்! அதனால் தான் இரவோடு இரவாக அதை செய்தோம் -அன்புமணி
- Automobiles
7 வருசம் கழிச்சு பெட்ரோல்/டீசல் வாகனம் ஓட்டுபவர்களை எல்லாம் பூமர் அங்கிள்னு கூப்டுவாங்க! இப்பவே உஷாராகிடுங்க
- Technology
கம்மி விலையில் இந்தியாவில் அறிமுகமாகும் புதிய Motorola போன்: அறிமுக தேதி இதுதான்.!
- Sports
சுயநலமான கேப்டன்சியா??.. ஹர்திக் பாண்ட்யா மீது எழும் பரபரப்பு குற்றச்சாட்டுகள்.. என்ன நடந்தது?
- Travel
தாம்பரத்தில் தாஜ்மஹாலா – ஆம்! ஒரு அற்புதமான கண்காட்சி நடைபெற்றுக் கொண்டிருக்கிறது – மிஸ் பண்ணிடாதீங்க!
- Education
GRSE Recruitment Notification 2023:கப்பல் கட்டும் தளத்தில் ரூ.1.8 லட்சத்தில் வேலை...!
12 மணி நேரத்தில்..10 ஆயிரம் டிக்கெட்டுகள் விற்று தீர்ந்தன..பொன்னியின் செல்வன் முன்பதிவில் சாதனை!
சென்னை : மணிரத்னத்தின் கனவு திரைப்படமான பொன்னியின் செல்வன் 1 டிக்கெட் விற்பனையில் சாதனை படைத்துள்ளது.
எழுத்தாளர் கல்கி எழுதியை பொன்னியின் செல்வன் நாவலை அடிப்படையாக கொண்டு, அதே பெயரில் இயக்குநர் மணிரத்னம் இயக்கி உள்ளார்.
இதில் நடிகர்கள் விக்ரம், ஜெயம் ரவி, கார்த்தி, ஐஸ்வர்யா ராய், ஐஸ்வர்யா லெக்ஷ்மி, த்ரிஷா, பிரபு, சரத்குமார், பார்த்திபன், விக்ரம் பிரபு, கிஷோர், ஜெயராம், லால், ரஹ்மான், அஸ்வின் ஆகியோர் முக்கிய ரோலில் நடித்துள்ளனர்.
பாவனாவுக்கு என்னதான் ஆச்சு... லேட்டஸ்ட் போட்டோவால் அதிர்ந்த ரசிகர்கள்!

PS1
பொன்னியின் செல்வன் படத்தின் படப்பிடிப்பு 2019ம் ஆண்டு தொடங்கிய நிலையில், படத்தின் படப்பிடிப்பு பாண்டிச்சேரி, விசாகப்பட்டிணம், மத்திய பிரதேசத்தின் கோட்டை நகரான குவாலியர் என பல இடங்களில் நடைபெற்றது. தற்போது படத்தின் அனைத்துப் பணிகளும் முடிவடைந்துள்ள நிலையில் இப்படத்தின் முதல் பாகம் செப்டம்பர் 30ந் தேதி வெளியாக உள்ளது.

வெள்ளிக்கிழமை ரிலீஸ்
ஸ்ரீகர் பிரசாத் எடிட்டிங் பணிகளை மேற்கொண்டுள்ளார். ரவி வர்மன் இப்படத்திற்கான ஒளிப்பதிவை மேற்கொள்ள, தோட்டா தரணி கலை இயக்குனராக பணிபுரிந்துள்ளார். ஜெயமோகன் இப்படத்துக்கு வசனம் எழுதியுள்ளார். லைகா மற்றும் மெட்ராஸ் டாக்கீஸ் நிறுவங்கள் இணைந்து தயாரித்துள்ளது. சமீபத்தில் படத்தின் போஸ்டர்கள், சிங்கிள் பாடல், டீஸர் மற்றும் டிரைலர் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றன.படம் வெளியாக இன்னும் இரு தினங்களே உள்ளதால் ரசிகர்கள் மகிழ்ச்சியில் மூழ்கி உள்ளனர்.

விற்றுத்தீர்ந்த டிக்கெட்
பொன்னியின் செல்வன் படத்தின் டிக்கெட் விற்பனை சனிக்கிழமை தொடங்கிய நிலையில், இதுவரை, 225 திரையரங்குகளில் மட்டும் 2.5 லட்சம் டிக்கெட்டுகள் விற்பனையாகியுள்ளது. இதன் மூலம் ரூ.4.50 கோடி வசூலாகியுள்ளதாகவும், மற்ற தியேட்டர்களில் இன்றும் நாளையும் டிக்கெட் முன்பதிவு தொடங்கும் என கூறப்படுகிறது.

12 மணி நேரத்தில் 10ஆயிரம் டிக்கெட்
இந்நிலையில், சேலத்தில் உள்ள ஆஸ்கார் மல்டிபிளக்ஸ் தியேட்டர் நேற்று டிக்கெட் விற்பனையை தொடங்கியது.விற்பனை தொடங்கிய 12 மணி நேரத்திற்குள் 10 ஆயிரத்திற்கும் அதிகமான டிக்கெட்டுகள் விற்று தீர்ந்து டிக்கெட் விற்பனையில் சாதனை படைத்துள்ளது. மேலும் அக்டோபர் 5ந் தேதி வரை சிறப்புக்காட்சியாக காலை 7 மணிக்கு பொன்னியின் செல்வன் படம் திரையிடப்பட உள்ளது.