Don't Miss!
- News மாமியாரை ஒரே எத்து.. அலேக்கா "தூக்கி" குப்பை தொட்டியில் போட்டாச்சு.. அந்த மகராசியின் பெயர் "லட்சுமி"
- Finance தங்கம் விலை ஓரே நாளில் 1400 ரூபாய் உயர்வு.. முதல் முறையாக ரூ.51000 தொட என்ன காரணம்..?
- Lifestyle ஆப்பிள் சீடர் வினிகருடன் இந்த ஒரு பொருளை கலந்து குடிச்சா மாரடைப்பும் வராது.. இதய அடைப்பும் சரியாகும் தெரியுமா?
- Education சென்னையின் பெருமைமிகு கல்லூரிகளில் ஒன்றாகத் திகழும் டி.ஜி.வைஷ்ணவ் கல்லூரி...!!
- Technology அம்மா வாங்க.. ஐயா வாங்க! கிட்டத்தட்ட பாதி விலை டிஸ்கவுண்ட்.. Amazon-ல் கூவிக்கூவி விற்கப்படும் ஐந்து 4K TVகள்!
- Automobiles பைக் வாங்கும்போது நம்ம பசங்க தப்பு பண்றது இதில்தான்!! கேடிஎம் பைக்கின் விலையில் கிடைக்கும் 6 பவர்ஃபுல் பைக்ஸ்!
- Sports முட்டாள்தனம்.. என்னையா டீமை விட்டு விரட்டி விட்டீங்க.. ஐபிஎல் அணியை கதற விட்ட ஆவேஷ் கான்
- Travel டைட்டானிக் கப்பல் மூழ்கி இருக்கலாம் – ஆனால் அதைப் பற்றிய சுவாரஸ்யமான உண்மைகள் மறையாது!
விஜய் அண்ட் விஜய்யுடன் கை கைகோர்க்கிறார் பிரபு தேவா!!
போக்கிரி, வில்லு படங்களுக்குப் பிறகு மீண்டும் கைகோர்க்கிறார்கள் பிரபு தேவாவும் விஜய்யும்.
விஜய்யின் கேரியரில் மிகப் பெரிய வெற்றிப் படமாக அமைந்தது போக்கிரி. இந்த வெற்றியை அவருக்குத் தந்தவர் பிரபுதேவா. இந்த அளவுக்கு வில்லு போகவில்லை என்றாலும், பிரபு தேவா - விஜய் கூட்டணி மீது பெரும் எதிர்ப்பார்ப்பு உருவாகிவிட்டது.
பிரபு தேவாவும் அடிக்கடி, விஜய்யை மீண்டும் இயக்க ஆசை என்று கூறி வந்தார்.
இப்போது அவருக்கு அதற்கான வாய்ப்பு வந்திருக்கிறது.
சமீபத்தில் விஜய்யைச் சந்தித்த பிரபு தேவா, ஒரு அதிரடி ஆக்ஷன் - காமெடி கதையை அவருக்குச் சொல்லி இருக்கிறார். கதை பிடித்ததால் உடனே சில மணி நேரம் அது பற்றி விவாதித்துமிருக்கிறார்கள்.
இன்னொரு பக்கம் இயக்குநர் விஜய்யுடன் இணைந்து ஒரு படம் பண்ணவும் முடிவு செய்துள்ளாராம் பிரபு தேவா. இதில் அவர் ஹீரோ மட்டுமே. இதுகுறித்தும் பேசிவிட்டார்களாம். விரைவில் அறிவிப்பு வரவிருக்கிறதாம்.
நான்கு ஆண்டுகளுக்கு முன்பு தங்கர் பச்சான் இயக்கத்தில் பிரபு தேவா நாயகனாக நடித்த களவாடிய பொழுதுகள் இன்னும் வெளிவராமல் உள்ளது குறிப்பிடத்தக்கது.