Don't Miss!
- News இத்தனை நாளா எங்க போனீங்க? ஓட்டுக்கேட்க போன ஜோதிமணிக்கு கரூரில் எதிர்ப்பு! சமாளித்த திமுக
- Travel டைட்டானிக் கப்பல் மூழ்கி இருக்கலாம் – ஆனால் அதைப் பற்றிய சுவாரஸ்யமான உண்மைகள் மறையாது!
- Lifestyle முட்டை வாங்க போறீங்களா? இப்படி பார்த்து வாங்குங்க... இல்லனா பல ஆபத்துக்களை சந்திக்க வேண்டியிருக்கும்...!
- Technology குறைஞ்சது 4 -5 நாள் ஆகும்.. கடைசி நேரத்துல அலையாதீங்க.. Voter ID-க்கான முக்கிய வேலை.. உடனே செஞ்சிடுங்க!
- Automobiles தேர்தல் வர நேரத்துல பிரம்மாஸ்திரத்தை கையில எடுத்துட்டாங்க! சுங்கசாவடிகளை தூக்க முடிவு பண்ணிட்டாங்க!
- Sports ஆர்சிபி வேண்டாம் என ஒதுக்கிய 3 வீரர்கள்.. ஐபிஎல் 2024 சீசனில் பட்டையை கிளப்பும் அதிசயம்
- Finance தொழில்நுட்ப துறையில் தொடரும் பணிநீக்கம்.. பெரு நிறுவனங்களின் அதிரடி முடிவுக்கு காரணம் என்ன?..
- Education ஆஸ்திரேலியாவில் உயர்கல்வி பயில இந்திய மாணவர்கள் விரும்புவது ஏன்?
திரைத் துளி
டெல்லி:
நடிகை பிரதியுஷா மர்மச் சாவு குறித்து சி.பி.ஐ. நேற்று முறைப்படி வழக்குப் பதிவு செய்தது. இதையடுத்து இந்தச்சாவு குறித்த விசாரணையை சி.பி.ஐ. அதிகாரப்பூர்வமாக தொடங்கியுள்ளது.
தமிழில் முன்னுக்கு வந்து கொண்டிருந்த பிரதியூஷா தனது ஹைதராபாத்தில் தனது காதலர் சித்தார்த் ரெட்டியுடன்தற்கொலை செய்து கொண்டதாக அம் மாநில போலீசார் தெரிவித்தனர்.
ஆனால், அவர் பல பேரால் கற்பழிக்கப்பட்டு கொல்லப்பட்டுள்ளதாகவும் இதில் சித்தார்த் ரெட்டிக்கும்தொடர்பிருப்பதாக பிரதியூஷாவின் தாயார் குற்றம் சாட்டினார்.
அவரது உடலில் நகக் கீறல்களும், கற்பழிக்கப்பட்டதான அடையாளங்களும் இருந்ததாக அவரது உடலை பிரேதப்பரிசோதைனை செய்த டாக்டர் கூறினார். ஆனால், வேறு டாக்டர்களைக் கொண்டு மீண்டும் பிரேதப் பரிசோதனைநடத்த அரசு உத்தரவிட்டது. இரண்டாவது பரிசோதனையில் அவர் கற்பழிக்கப்படவில்லை என்றும், தற்கொலைதான் செய்து கொண்டார் என்றும் அறிக்கை தரப்பட்டது.
இதனால், இந்த கொலையில் சில அரசியல் பிரமுகர்களைக் காப்பாற்ற முதல்வர் சந்திரபாபு நாயுடு முதல்வதாககுற்றதச்சாட்டு எழுந்தது. இதையடுத்து இந்த விவகாரத்தில் சி.பி.ஐ. விசாரணை நடத்த நாயுடு ஒப்புக் கொண்டார்.
இதையடுத்து இந்த வழக்கு சி.பி.ஐக்கு மாற்றப்பட்டது. நேற்று தான் இந்த வழக்கை சி.பி.ஐ. பதிவு செய்தது.
சித்தார்த் ரெட்டி, அவரது குடும்பத்தினர், பிரதியுஷாவின் குடும்பத்தினரிடம் சி.பி.ஐ. விசாரணை நடத்தும்.பிரதியுஷாவின் உடலைப் பரிசோதனை செய்த டாக்டர் குழுவினரும் விசாரிக்கப்படுவார்கள்.