Don't Miss!
- News ஏத்துக்கவே முடியாது..புண்படுத்தீட்டீங்க! ஒன்று கூடிய தமிழக கட்சிகள்..மோடி மீது டைரக்ட் அட்டாக்..!
- Lifestyle இந்த பழங்களை சாப்பிட்ட பிறகு தண்ணீர் குடிக்கக் கூடாதாம்... ஏன் தெரியுமா?
- Finance முகேஷ் அம்பானி ஸ்ட்ரிக்ட் ஆர்டர்..!! 'இங்க' தான் ஆனந்த் அம்பானி - ராதிகா திருமணம்..!
- Automobiles இவ்வளவு கம்மி விலையா? பஜாஜ் பல்சர் 400 பைக்கின் அறிமுக தேதி உறுதியானது!
- Technology பிளிப்கார்ட் பிச்சிக்குது.. வெறும் ரூ.13,999 போதும்.. OIS கேமரா.. 6000mAh பேட்டரி.. 1TB மெமரி.. எந்த மாடல்?
- Sports சிஎஸ்கே அணிக்கு சிக்கல்.. பிளே-ஆஃப் வாய்ப்புக்கு ஆப்பு வைத்த 2 அணிகள்.. இனி என்ன செய்ய வேண்டும்?
- Education மாணவர்களுக்கோர் ஓர் நற்செய்தி.. நான்கு ஆண்டு இளங்கலை பட்டப்படிப்பு படித்தவர்கள் பிஎச்.டி.யில் சேர
- Travel இந்துக்களுக்கும் கூட தெரியாத ரகசியங்கள் இவை தான் – உங்களுக்கு இவற்றில் எந்த உண்மை தெரியும்?
பாகுபலிக்காக பந்த் வேணுமாம்: கிளம்பிட்டாருய்யா வாட்டாளு நாகராஜ்
பெங்களூர்: கர்நாடகாவில் பாகுபலி 2 படத்தை திரையிட தடை விதிக்க வேண்டும் என்று கூறி படம் வெளியாகும் நாள் அன்று மாநிலம் தழுவிய முழு அடைப்பு போராட்டத்திற்கு கன்னட அமைப்புகள் அழைப்பு விடுத்துள்ளன.
ராஜமவுலியின் பாகுபலி 2 படம் வரும் 28ம் தேதி ரிலீஸாகிறது. கட்டப்பாவாக நடித்துள்ள சத்யராஜ் காவிரி நீர் பிரச்சனையின்போது கன்னடர்களை அவதூறாக பேசியதாகக் கூறி ஒரு வீடியோ வைரலானது.
கன்னடர்களை தவறாக பேசியதற்கு சத்யராஜ் மன்னிப்பு கேட்க வேண்டும் இல்லை என்றால் பாகுபலி 2 படத்தை கர்நாடகாவில் வெளியிட விட மாட்டோம் என்று கன்னட அமைப்புகள் தொடர்ந்து கூறி வருகின்றன.
இந்நிலையில் பாகுபலி 2 படத்தை கர்நாடகாவில் தடை செய்ய வேண்டும் என கன்னட ஆர்வலர் வாட்டாள் நாகராஜ் தெரிவித்துள்ளார். மேலும் படம் ரிலீஸாகும் அன்று மாநிலம் தழுவிய முழு அடைப்பு போராட்டத்திற்கு கன்னட அமைப்புகள் அழைப்பு விடுத்துள்ளன.
இந்த முழு அடைப்பு போராட்டத்திற்கு 2 ஆயிரம் கன்னட அமைப்புகள் ஆதரவு தெரிவிள்ளதாக நாகராஜ் கூறியுள்ளார்.
நாகராஜ் மேலும் கூறுகையில்,
சத்யராஜ் மன்னிப்பு கேட்க வேண்டும். பாகுபலி 2 படத்தை திரையிட வேண்டாம் என தியேட்டர் உரிமையாளர்களை கேட்டுக் கொள்கிறோம். படத்தை கர்நாடகாவுக்கு கொண்டு வர வேண்டாம் என வினியோகஸ்தர்களை கேட்டுள்ளோம். நாங்கள் படத்திற்கு எதிராக இல்லை. இந்த விஷயத்தில் மாநில அரசு தலையிட்டு படத்தை திரையிட விடாமல் செய்ய வேண்டும் என்றார்.