Provoke Art Festival 2025: இந்திய பாரம்பரிய கலை விழாவால் மீண்டும் உயிர் பெறுகிறது சென்னை!
சென்னை: சென்னையில் நவம்பர் 1 மற்றும் 2ந் தேதிகளில் ராயப்பேட்டையில் உள்ள தி மியூசிக் அகாடமியில் PROVOKE LIFESTYLE வழங்கும் PROVOKE ART FESTIVAL 2025 மூன்றாவது ஆண்டாக நடைபெறவுள்ளது. இந்த சீசனில் சென்னை தனது கலாசார இதயத்துடிப்பை மேலும் உற்சாகமாக்கவுள்ளது.
PROVOKE ART FESTIVAL 2023-ல் துவங்கியதில் இருந்து, பாரதநாட்டியத்தின் உணர்வுமிக்க ஆழத்தையும், கர்நாடக இசையின் காலத்தை வெல்லும் சுவையையும், இந்தியக் கலைகளின் நீங்காத மரபையும் கொண்டாடி வருகிறது. இது இந்தியாவின் வளமான கலை செழுமைக்கு செலுத்தும் மரியாதையாக சமர்ப்பிக்கப்படுகிறது. அதே நேரத்தில் புதுமையான அணுகுமுறைகளையும் அங்கீகரிக்கிறது.

PROVOKE ART FESTIVAL 2025 : இரு நாட்களாக நடைபெறும் இந்த விழாவில் பிரபல கலைஞர்களின் மெய்மறக்கும் நிகழ்ச்சிகள் இடம் பெறவுள்ளன. முதல் நாள் நவம்பர் 1ந் தேதி, ருக்மிணி விஜய்குமார், சுபஸ்ரீ தனிகாசலம் ஹரிச்சரன், சாய் விக்னேஷ், திஷா பிரகாஷ் மற்றும் பலர் கலந்து கொள்ளஉள்ளனர். இரண்டாம் நாள் நவம்பர் 2ந் தேதி ரோஹினி மற்றும் பிரலயன் ராஜேஷ் வைத்யா, ரஹுல் வெல்லால், ஸ்பூர்த்தி ராவ் பங்கேற்பார்கள். இந்த விழா, கலை மற்றும் உணர்வுகளின் சங்கமமாக கலைஞர்கள், கலை ரசிகர்கள் மற்றும் கலாசார வல்லுநர்களை ஒன்றிணைக்கும் ஒரு ஆழமான அனுபவமாக அமையவுள்ளது. ஒவ்வொரு நிகழ்ச்சியும் பாரம்பரியத்திற்கும் படைப்பாற்றலுக்கும் இடையிலான ஒரு உரையாடலாக இருக்கும். இது தலைமுறைகளை கடந்தும் எதிரொலிக்கும்.
இலவச டிக்கெட்: இந்திய மரபுக் கலை வடிவங்களை முன்னிறுத்துவதன் மூலம், PROVOKE ART FESTIVAL - 2025 இந்திய மரபுக் கலை வடிவங்களை முன்னிறுத்துவதன் மூலம், தென்னிந்தியாவின் கலாசாரத் தலைநகராக சென்னை மீண்டும் உறுதி செய்யவுள்ளது. இந்த நிகழ்வில் மேலும் ஒரு சிறப்பம்சமாக கலை, இசை, நடனம் மற்றும் நாடகத் துறைகளில் சிறப்பாக செயல்பட்ட கலைஞர்கள் மற்றும் புகழ்பெற்ற விருந்தினர்களுக்கு மரியாதையும் செய்யப்படவுள்ளது. இவ்விழா தி மியூசிக் அகாடமி, ராயப்பேட்டையில் நடைபெற உள்ளது. இதற்கு எந்தவிதமான கட்டணமும் இல்லை, இலவச நுழைவு டிக்கெட்டுகளை பெற 9841433211 மற்றும் 98849 46548 எண்ணை தொடர் கொண்டு பெற்றுக்கொள்ளலாம்.


Click it and Unblock the Notifications











