Don't Miss!
- Finance ஒரு பங்குக்கு ரூ.240 டிவிடெண்ட் வழங்கும் ஐடி நிறுவனம்.. நீங்களும் அதுல பங்கு வச்சிருக்கீங்களா?
- Automobiles ஆடி கார்களின் விலையை உயர்த்த முடிவு! எவ்வளவு காஸ்ட்லியாக போவுது தெரியுமா?
- Lifestyle சாணக்கிய நீதி படி இந்த குணமுள்ள பெண்கள் உங்களை நரக வாசலுக்கு அழைத்து செல்வார்களாம்..இவங்ககிட்ட விலகியே இருங்க!
- News ராகுல் முதல் டிகே சிவக்குமார் தம்பி வரை.. 2ம் கட்ட தேர்தலில் விஐபி வேட்பாளர்கள் இவர்கள் தான்!
- Technology இனி Signal Weak சிக்கலே இருக்காது.. மொபைல் Settings-ல இதை பண்ணா போதும்.. இன்டர்நெட் ஸ்பீட் சும்மா பிச்சிக்கும்
- Sports வாழ்க்கைன்னா ஒரு சில அடிகள் விழத்தான் செய்யும்.. எல்லா போட்டியிலும் வெல்ல முடியாது.. பாட் கம்மின்ஸ்
- Travel இந்தியாவில் உள்ள புனிதமான காடுகள் – வாழ்வில் ஒரு முறையேனும் இந்த காடுகளுக்கு செல்ல வேண்டும்!
- Education சென்னை ஏர்போர்ட்டில் பணிபுரிய ஆசையா...!
லாலேட்டன் பாட்டுக்கு ஆஸ்கர் கிடைக்குமா..? - ரசிகர்களின் கடைசி நம்பிக்கை!
Recommended Video
ஆஸ்கர் விருது 2018-ம் ஆண்டுக்கான போட்டியில், மோகன்லால் நடிப்பில் கடந்த வருடம் வெளியான 'புலி முருகன்' படத்தில் இருந்து, ஜேசுதாஸ் - சித்ரா பாடிய 'காலனையும் கால்சிலம்பே' மற்றும் வாணி ஜெயராம் பாடிய 'மானத்தே மாடக்குரும்பே' ஆகிய இரண்டு பாடல்கள் இடம் பிடித்துள்ளன.
ஆஸ்கர் விருதுக்கான போட்டியில் பாடல்கள் பிரிவில் கலந்துகொள்ள இந்தியாவில் இருந்து தேர்வாகியிருக்கும் ஒரே படம் 'புலி முருகன்' மட்டும் தான். இந்தப்படத்தின் வெற்றியில் இசையமைப்பாளர் கோபிசுந்தரின் அதிரவைக்கும் பின்னணி இசையும் பாடல்களும் முக்கிய பங்கு வகித்தன.
இந்தப்படத்திற்கான பாடல்களையும், பின்னணி இசையையும் கோபிசுந்தரும், 'புலி முருகன்' இயக்குனர் வைசாக்கும் சுமார் ஒருமாத காலம் சென்னையில் தங்கி உருவாக்கினார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
படங்கள் பிரிவில் இந்தியா சார்பில் அனுப்பப்பட்ட பாலிவுட் படமான 'நியூட்டன்' இறுதிச் சுற்றுக்கு தேர்வாகாமல் வெளியேறியது குறிப்பிடத்தக்கது. பாடல்கள் பிரிவிலாவது இந்தியா சார்பில் ஆஸ்கர் விருதைத் தட்டிவிட வேண்டும் என்பதுதான் ரசிகர்களின் வேண்டுதலாக இருக்கிறது.