Don't Miss!
- News இளையராஜாவுக்கு சான்ஸ் கொடுத்த நாகூர் ஹனீபா.. எம்எல்ஏ ஹாஸ்டலில் "தென்றல் காற்றே" உருவான கதை!
- Technology கைக்கு 2 ஆர்டர்.. அவ்ளோ கம்மி.. AMOLED டிஸ்பிளே.. ப்ளூடூத் காலிங்.. ஹெல்த் டிராக்கர்கள்.. எந்த மாடல்?
- Sports இதுதான் ரியல் ட்விஸ்ட்.. ஓய்வுக்கு பின் சிஎஸ்கே அணியின் முக்கிய பதவிக்கு வரப்போகும் தல தோனி?
- Finance ஜப்பானுக்கு இந்தியா தான் உதயசூரியன்.. கலரே மாறுதே.. சீனாவுக்கு பெரும் இழப்பு..!!
- Automobiles தண்ணீரை சேமிக்க இப்படி ஒரு வழியா? இனி ரயில்களில் 1லிக்கு பதிலாக 500 மிலி தண்ணீர் மட்டும் வழங்க முடிவு!
- Lifestyle கோடை காலத்தில் முட்டை சாப்பிடலாமா? கூடாதா? நிபுணர்கள் சொல்லுவது என்ன?
- Education ஜூன் 16-ல் யுஜிசி நெட் தேர்வு...ஏற்பாடுகள் தயார்...!!
- Travel இந்தியாவில் உள்ள இந்த மினு மினுக்குற காட்டுக்கு போய் இருக்கீங்களா – ஒரு முறை போய் பாருங்க!
உதட்டில் சிறு புன்னகை.. கையில் கத்தி... என்னைக் கொல்கிறார் திரிஷா... நெகிழ்கிறார் ராஜமெளலி!
சென்னை: பாகுபலி படம் மூலம் பிரம்மாண்ட இயக்குநர்கள் வரிசையில் இணைந்துள்ள ராஜமௌலி, நடிகைகளான அனுஷ்கா மற்றும் திரிஷாவைக் கண்டு வியப்பதாகத் தெரிவித்துள்ளார்.
சமீபத்தில் ராஜமௌலி இயக்கத்தில் பிரபாஸ், ராணா, அனுஷ்கா, தமன்னா நடிப்பில் வெளியான பாகுபலி வசூலில் சாதனை படைத்து வருகிறது. இப்படத்தின் பிரம்மாண்டத்தைப் பார்த்து இந்தியாவே வியப்பில் ஆழ்ந்து கிடக்கிறது. பாகுபலியின் இரண்டாம் பாகத்தை எதிர்பார்த்து ரசிகர்கள் தவம் கிடக்கிறார்கள் என்றே சொல்லலாம்.
இந்நிலையில், ராஜமௌலியை இரண்டு நாயகிகள் பெரிதும் வியக்க வைத்துள்ளனர். அவர்கள் வேறுயாருமல்ல, அனுஷ்காவும், திரிஷாவும் தான்.
இஞ்சி இடுப்பழகி...
சமீபத்தில் அனுஷ்காவின் ‘இஞ்சி இடுப்பழகி', திரிஷாவின் ‘நாயகி' ஆகிய படங்களின் போஸ்டர்கள் வெளியானது. அவற்றைப் பார்த்து தான் ராஜமௌலி வியந்துள்ளார்.
அழகு...
இது தொடர்பாக அவர் கூறுகையில், "சமீபத்தில் வெளிவந்த இரண்டு படங்களின் போஸ்டர்கள் எனக்கு மிகப்பெரிய ஆர்வத்தை கொடுத்திருக்கின்றன. ஒன்று, அனுஷ்கா நடித்துள்ள ‘இஞ்சி இடுப்பழகி' பட போஸ்டர். இது பார்க்க அழகாகவும், ஆச்சரியமாகவும் இருந்தது.
திரிஷா போஸ்டர்...
மற்றொன்று திரிஷா நடித்துள்ள ‘நாயகி' படத்தின் போஸ்டர். இதில், திரிஷா உதட்டில் சிறு புன்னகையுடன், கையில் கத்தியுடனும் பார்க்கும்போது என்னை கொல்கிறது" எனத் தெரிவித்துள்ளார்.
பாகுபலி...
ராஜமௌலி தற்போது ‘பாகுபலி' படத்தின் இரண்டாம் பாக பணிகளில் தீவிரமாக ஈடுபட்டுள்ளார். இதன் படப்பிடிப்பை செப்டம்பர் இரண்டாவது வாரத்தில் தொடங்கவிருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.