வைதீக முறைப்படி செளந்தர்யா கல்யாணம்-பிரபலங்கள் திரண்டு வந்து வாழ்த்து

By Staff

Rajnini's Daughter's Marriage
சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் மகள் செளந்தர்யா மற்றும் அஸ்வின் திருமணம் இன்று காலை கோலாகலமாக நடந்தேறியது. அரசியல், திரையுலகம் உள்ளிட்ட பல்துறை பிரபலங்கள் திரண்டு வந்து மணமக்களை வாழ்த்தினர்.

ரஜினிகாந்த்தின் இளைய மகள் செளந்தர்யா. அவருக்கும் பிரபல கட்டுமானத் தொழிலதிபர் ராம்குமார்-ஹேமா ராம்குமார் தம்பதியின் மகன் அஸ்வினுக்கும்
திருமணம் நிச்சயிக்கப்பட்டது.

இவர்களின் திருமண நிச்சயதார்த்த சடங்குகள் நேற்று நடைபெற்றன. சென்னை எழும்பூரில் உள்ள ராணி மெய்யம்மை மண்டபத்தில் நேற்று மாலை 6 மணிக்கு தொடங்கியது.

மணமகள் சவுந்தர்யாவும், மணமகன் அஸ்வினும் மாலை 6-30 மணிக்கு திருமண மண்டபத்துக்கு வந்தார்கள். சவுந்தர்யா பச்சை நிறத்தில் பட்டுச்சேலை அணிந்திருந்தார். அஸ்வின், சந்தன நிறத்தில் ஷெர்வானி அணிந்திருந்தார். இருவருக்கும் மங்கள வாத்தியங்கள் மற்றும் செண்டை மேளங்கள் முழங்க வரவேற்பு அளிக்கப்பட்டது.

திருமண நிச்சயதார்த்தம் மற்றும் முகூர்த்த பத்திரிகையை புரோகிதர்கள் படித்தார்கள். அதன்பிறகு ரஜினிகாந்த்-லதா ரஜினிகாந்த் தம்பதிகளும், ராம்குமார்-ஹேமா ராம்குமார் தம்பதிகளும் நிச்சயதார்த்தத்துக்கான தட்டுகளை மாற்றிக்கொண்டார்கள்.

நிகழ்ச்சியில் நடிகை ஐஸ்வர்யா ராய், அவரது கணவர் அபிஷேக் பச்சன், மத்திய அமைச்சர்கள் மு.க.அழகிரி, ஜி.கே.வாசன், முன்னாள் அமைச்சர் ஈவிகேஎஸ் இளங்கோவன், பல்துறைப் பிரமுகர்கள் கலந்து கொண்டனர்.

நடிகை ஸ்ரீதேவி தனது கணவருடனும், வைஜெயந்தி மாலா, மோகன்பாபு உள்ளிட்டோரும் வந்திருந்தனர்.

இன்று காலை திருமணம்:

இன்று காலை ஏழரை மணியளவில் எழும்பூர் ராணி மெய்யம்மை திருமண மண்டபத்தில் திருமணம் நடைபெற்றது. மணமகள் செளந்தர்யா கழுத்தில் அஸ்வின் தாலி கட்டினார்.

வைதீக முறைப்படி திருமணம் நடைபெற்றது. மைசூர் தலைப்பாகை போன்ற தொப்பியை ரஜினி மற்றும் ராம்குமார் குடும்பத்தினர் அணிந்திருந்தனர். ரஜினியின் மூத்த மருமகனான நடிகர் தனுஷுக்கும் தலைப்பாகை அணிவித்திருந்தனர்.

செளந்தர்யா அரக்கு கலரில் பட்டு புடவையும், மணமகன் அஸ்வின் வேட்டி அங்கவஸ்திரம் அணிந்து இருந்தார். மண மேடையில் அக்னி வளர்த்து புரோகிதர்கள் வேதமந்திரங்கள் ஓதினர். அதன் அருகில் உள்ள இருக்கையில் ரஜினி அமர்ந்து இருந்தார்.

பி்ன்னர் முகூர்த்த நேரம் நெருங்கியதும் தனது மடியில் செளந்தர்யாவை உட்கார வைத்து இருந்தார். சரியாக 8 மணிக்கு மணமகள் கழுத்தில் அஸ்வின் தாலி கட்டினார். அப்போது மங்கள வாத்தியங்கள் முழங்கின. திருமணத்துக்கு வந்தவர்கள் அட்சதை தூவினார்கள்.

தாலி கட்டும் நிகழ்ச்சி முடிந்ததும் முகூர்த்த மந்திரம் ஓதப்பட்டது. ரஜினி, லதா காலில் விழுந்து மணமக்கள் ஆசி பெற்றனர். அக்னியை சுற்றியும் வலம் வந்தனர். பின்னர் மணமக்களை ரஜினி மேடையில் இருந்து இறக்கி பார்வையாளர் வரிசைக்கு அழைத்து வந்தார்.

அங்கு உட்கார்ந்திருந்த மத்திய அமைச்சர் ப.சிதம்பரம், எம்.ஜி.ஆர். கழக தலைவர் ஆர்.எம்.வீரப்பன், இயக்குநர் பாலசந்தர், தெலுங்கு இயக்குநர் ராகவேந்திரராவ் ஆகியோர் காலில் விழுந்து ஆசி பெற செய்தார்.

அம்மி மிதித்து அருந்ததி பார்த்தல், மெட்டி அணிவித்தல் நிகழ்ச்சிகளும் நடந்தன.

விழாவில் மத்திய அமைச்சர் ப.சிதம்பரம், மதிமுக பொதுச் செயலாளர் வைகோ, காங்கிரஸ் தலைவர் தங்கபாலு, முன்னாள் அமைச்சர் ஆர்.எம்.வீரப்பன், இயக்குநர்கள் பாலச்சந்தர், மணிரத்தினம், நடிகர் கமல்ஹாசன், நடிகை ஸ்ரீதேவி, கம்யூனிஸ்ட் கட்சித் தலைவர்கள் நல்லகண்ணு, தா.பாண்டியன், புதிய நீதிக்கட்சி தலைவர் ஏ.சி.சண்முகம், பாரதீய ஜனதா தலைவர் இல.கணேசன், தே.மு.தி.க. தலைவர் விஜயகாந்த், விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன், சமத்துவ மக்கள் கட்சி தலைவர் சரத்குமார், கார்த்தி சிதம்பரம், முன்னாள் துணை மேயர் கராத்தே தியாகராஜன், முன்னாள் அமைச்சர் திருநாவுக்கரசர் ஆகியோர் நேரில் வந்து மணமக்களை வாழ்த்தினார்கள்.

நடிகை மீனா தனது கணவருடன் ஜோடியாக வந்திருந்தார்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X