Don't Miss!
- News நேரு பேரனா ராகுல் காந்தி? எனக்கு சந்தேகம் இருக்கு.. டிஎன்ஏ டெஸ்ட் செய்யணும்.. கேரள எம்எல்ஏ சர்ச்சை
- Sports ஆட்டம் எங்கள் கையில் தான் இருந்தது.. ஸ்டோனிஸ் பிண்ணிட்டாரு.. சிஎஸ்கே கேப்டன் ருதுராஜ் கருத்து
- Automobiles இந்த ஒரு காருக்கு மட்டும் எப்படி இவ்வளவு சேல்ஸ் குவியுது? நிஸான் இப்போதைக்கு இந்தியாவை விட்டு போகாது!!
- Lifestyle வக்ர நிவர்த்தி அடையும் புதன்: ஏப்ரல் 25 முதல் இந்த 3 ராசிக்கு சூப்பரா இருக்கப்போகுது...
- Finance இந்தியா சிமெண்ட்ஸ் தொழிற்சாலையை வாங்கிய அல்ட்ராடெக் சிமெண்ட்.. அதானி உடன் போட்டி..!!
- Technology வெறும் 2000 ரூபாயில்.. புது Xiaomi கையடக்க கார்மெண்ட் Steamer.. பழைய ஐயன் பாக்ஸை தூக்கி போடுங்க..என்ன ஸ்பெஷல்?
- Education புதுச்சேரியில் பிஎஸ்சி நர்சிங் படிப்பதற்கு நுழைவுத் தேர்வு...!
- Travel இந்துக்களுக்கும் கூட தெரியாத ரகசியங்கள் இவை தான் – உங்களுக்கு இவற்றில் எந்த உண்மை தெரியும்?
ஜோக் நீர்வீழ்ச்சியில் ரஜினியின் லிங்கா இறுதிக்கட்ட படப்பிடிப்பு.. ரசிகர்கள் படையெடுப்பு
ஷிமோகாவில் உள்ள ஜோக் நீர்வீழ்ச்சிப் பகுதியில் ரஜினிகாந்தின் லிங்கா படப்பிடிப்பு இன்று தொடங்கியது.
கேஎஸ் ரவிக்குமார் இயக்கும் லிங்காவின் முதல் கட்ட படப்பிடிப்பை மைசூரில் முடித்தனர். இரண்டாம் கட்ட படப்பிடிப்பு ஹைதராபாத்தில் நடந்தது.
தற்போது இறுதி கட்ட படப்பிடிப்பை கர்நாடகா மாநிலத்தில் ஷிமோகா பகுதியில் உள்ள ஜோக் நீர்வீழ்ச்சியில் நடத்துகின்றனர்.
க்ளைமாக்ஸ்
படத்தின் க்ளைமாக்ஸ் காட்சியும் இங்கேயே படமாகிறது. துணை நடிகர், நடிகைகள், தொழில்நுட்பக் கலைஞர்கள் உள்பட 3 ஆயிரம் பேர் படப்பிடிப்பில் பணியாற்றுகின்றனர்.
பெரும் கூட்டம்
இதனால் அருவி பகுதியில் பெரும் கூட்டத்தை காண முடிகிறது. அவர்களுக்கு உணவு சமைத்து கொடுக்க 100 பேர் பணியமர்த்தப்பட்டுள்ளனர். தற்காலிக சமையல் கூடங்களில் உணவு தயாரிப்பு நடக்கிறது.
ரசிகர்கள்
நடிகர், நடிகைகள், தொழில் நுட்ப கலைஞர்கள் தங்க அருவி கரையோரம் சிறு சிறு குடில்கள் உருவாக்கப்பட்டுள்ளன. படப்பிடிப்பை காண தினமும் ஆயிரக்கணக்கான ரசிகர்களும் அப்பகுதியில் திரள்கிறார்கள்.
போலீஸ் பாதுகாப்பு
ரசிகர்களைக் கட்டுப்படுத்தவும், படக்குழுவுக்கு பாதுகாப்பு வழங்கவும் கர்நாடக அரசு 100 போலீசாரை நியமித்துள்ளது. இன்று காலை ஆரம்பித்த படப்பிடிப்பில் ரஜினி பங்கேற்றார். அவருடன் சோனாக்ஷி, அனுஷ்காவும் பங்கேற்றனர்.