Don't Miss!
- News நாடு முழுக்க மாறுகிறது சம்பளம்.. வருகிறது புதிய ஊதிய திட்டம்.. பணியாளர்களுக்கு அடிக்கும் ஜாக்பாட்
- Education குரூப்-1 வேலைக்கான நேர்முகத் தேர்வு முடிவுகள் ரிலீஸ்...குஷியில் தேர்வர்கள்...!
- Technology ரூட்டு எடுத்த BSNL.. ரூ.699 போதும்.. 5 மாதங்கள் வேலிடிட்டி.. அன்லிமிடெட் வாய்ஸ் கால்கள்.. டேட்டா!
- Sports தோனி இனி பேட்டிங் ஆடவே மாட்டார்? சிஎஸ்கே எடுத்த முடிவு.. பெரும் ஏமாற்றம்.. காரணம் இதுதான்
- Travel தமிழ்நாட்டுக்குள் இருக்கிற தாஜ்மஹாலுக்கு நீங்க போய் இருக்கீங்களா – தாய்க்காக தாஜ்மஹால் கட்டிய மகன்!
- Lifestyle இந்தியாவிலிருந்து ஆங்கிலேயர்கள் திருடிட்டு போன விலைமதிப்பில்லாத பொக்கிஷங்கள்... இதோட மதிப்பு என்ன தெரியுமா?
- Automobiles காருக்கு இன்சூரன்ஸ் எடுக்கும் போது இதெல்லாம் செக் பண்ணலேன்னா காசெல்லாம் வீணா போயிடும்!
- Finance தேர்தலில் போட்டியிட பணமில்லாத நிர்மலா சீதாராமன் சொத்து மதிப்பு என்ன தெரியுமா..?
2017 பொங்கலுக்கு ‘பொங்க’ வருகிறது ரஜினியின் 2.0!
சென்னை: ஷங்கர் இயக்கத்தில் ரஜினி நடித்து வரும் '2.0' படம் அடுத்தாண்டு பொங்கலுக்கு ரிலீசாகும் என தகவல்கள் தெரிவிக்கின்றன.
கடந்த 2010ம் ஆண்டு ரஜினி நடிப்பில் ஷங்கர் இயக்கிய படம் எந்திரன். இப்படத்தில் ரஜினியின் ஜோடியாக ஐஸ்வர்யா ராய் நடித்திருந்தார். ஏ.ஆர்.ரகுமான் இசையமைப்பில் வெளியான இப்படம் உலகம் முழுவதும் வசூல் சாதனை நிகழ்த்தியது.
இந்நிலையில் தற்போது இப்படத்தின் இரண்டாம் பாகத்தை 2.0 என்ற பெயரில் ஷங்கர் இயக்கி வருகிறார்.
எமி ஜாக்சன்...
இப்படத்தில் ரஜினியின் நாயகியாக எமி ஜாக்சனும், வில்லனாக பாலிவுட் நடிகர் அக்ஷய்குமாரும் நடிக்கின்றனர்.
லைக்கா...
நீரவ் ஷா ஒளிப்பதிவு செய்யும் இப்படத்துக்கு ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைக்க இருக்கிறார். லைக்கா நிறுவனம் இப்படத்தை பெரும் பொருட்செலவில் தயாரிக்கிறது.
கபாலி...
ரஜினி தற்போது பா.ரஞ்சித் இயக்கத்தில் கபாலி படத்திலும் நடித்து வருகிறார். இதனால் இரண்டு படங்களிலும் மாற்றி மாற்றி அவர் நடித்து வருகிறார்.
ரோபோ...
இது தவிர முதற்கட்ட படப்பிடிப்பு முடிந்ததும், ரோபோக்களை வைத்து படமாக்க இருக்கும் காட்சிகள் எப்படி வரவேண்டும் என்பதற்கான பணிகளை மேற்கொண்டுள்ளார் ஷங்கர்.
பொங்கல் ரிலீஸ்...
இந்நிலையில், இப்படம் அடுத்தாண்டு பொங்கலுக்கு ரிலீசாகும் என தகவல்கள் தெரிவிக்கின்றன. அக்ஷய்குமார் சமீபத்தில் அளித்த பேட்டி ஒன்றில், ‘இப்படம் ரிலீசாக இன்னும் ஒருவருடம் இருக்கிறது' எனக் கூறியுள்ளது குறிப்பிடத்தக்கது.