Don't Miss!
- News படுக்கையறையில் ஷோபா.. அந்த கோலத்தை கண்டு கதறிய மகள்.. மீண்டும் மீண்டும் டார்ச்சர்.. கொடுமையை பாருங்க
- Automobiles குடும்பத்தோட போகலாம்னு சொல்றாங்களே இந்த கார் பாதுகாப்பானதா இருக்குமா? மோதல் ஆய்வுல வச்சு செஞ்சிருக்காங்க!
- Technology Aadhaar Update Cost: இனி ஆதார் அட்டையில் பெயர், முகவரி, போட்டோ மாற்ற கட்டணம்.. எவ்வளவு தெரியுமா?
- Sports LSG v CSK-சிஎஸ்கேக்கு பாதகமாக விழுந்த டாஸ்..பிளேயிங் லெவனில் அதிரடி மாற்றம்..பேட்டிங்கிலும் சர்பரைஸ்
- Finance நீங்க கிரெடிட் கார்டு வச்சிருக்கீங்களா.. ஆன்லைன் மோசடியில் இருந்து தப்பிக்க நச்சுனு 4 டிப்ஸ்!
- Lifestyle உங்களுக்கு இந்த அறிகுறிகள் அதிகம் தெரியுதா? அப்ப உடம்புல தண்ணீர் ரொம்ப கம்மியா இருக்கு-ன்னு அர்த்தம்... உஷார்.
- Education புதுச்சேரியில் பிஎஸ்சி நர்சிங் படிப்பதற்கு நுழைவுத் தேர்வு...!
- Travel இந்துக்களுக்கும் கூட தெரியாத ரகசியங்கள் இவை தான் – உங்களுக்கு இவற்றில் எந்த உண்மை தெரியும்?
ராஜுவுக்கு தான் அதிக ரோஜாக்கள்.. மக்கள் மனதை கவர்ந்தவர் என பாராட்டிய ரஞ்சித்.. பிரியங்கா எங்கே?
சென்னை: பிக் பாஸ் தமிழ் சீசன் 5 நிகழ்ச்சியின் 102வது நாள் புரமோ 3 தற்போது வெளியாகி உள்ளது.
பிரியங்கா இல்லாத புரமோவே இந்த சீசனில் அதிகம் பார்க்காத நிலையில், தற்போது வெளியாகி உள்ள புரமோவில் பிரியங்கா இல்லாதது ரசிகர்களை ஏகப்பட்ட சந்தேகங்களுக்கு ஆளாக்கி உள்ளன.
ராஜுவுக்கு அதிக ரோஜாக்களை போட்டியாளர்கள் கொடுத்து வரும் நிலையில், பிரியங்கா எங்கே? என்கிற கேள்வியும் ரசிகர்கள் மத்தியில் எழுந்துள்ளது.
பிக் பாஸ் வீட்டிற்குள் வந்த முன்னாள் போட்டியாளர்கள்.. வெளியில் என்ன பேசிக்கிறாங்க நைசா கேட்ட அமீர் !
வருண் அக்ஷரா
பிக் பாஸ் வீட்டுக்கு நேற்று நாடியா சங், சுருதி, சிபி மற்றும் அபிநய் மீண்டும் வந்த நிலையில், இன்று தாமரை, அக்ஷரா மற்றும் வருண் உள்ளே வந்துள்ளனர். இமான் அண்ணாச்சி, அபிஷேக் ராஜா, மதுமிதா, ஐக்கி பெர்ரி, இசைவாணி, சின்னப்பொண்ணு எல்லாம் எப்போ வருவாங்க? என்கிற கேள்வி ரசிகர்கள் மத்தியில் எழுந்துள்ளது.
செந்தூரப்பூவே ரஞ்சித்
இரண்டாவது புரமோவிலேயே ஈரமான ரோஜாவே 2 மற்றும் செந்தூரப்பூவே சீரியல் பிரபலங்கள் பிக் பாஸ் வீட்டுக்குள் ஸ்பெஷல் கெஸ்ட்டாக உள்ளே நுழைந்து போட்டியாளர்களை உற்சாகப்படுத்தினர். இந்நிலையில், தற்போது வெளியாகி உள்ள 3வது புரமோவில் நடிகர் ரஞ்சித் ரோஜாக்களை வைத்து ஒரு விளையாட்டு விளையாடி இருப்பது ரசிகர்களை வெகுவாக கவர்ந்துள்ளது.
ராஜுவுக்கு அதிக ரோஜாக்கள்
மக்கள் மனதை கவர்ந்த போட்டியாளர் யார் என தேர்வு செய்து அவருக்கு ரோஜாக்களை தலையில் வைங்க என ரஞ்சித் சொல்ல சிபி, தாமரை, அக்ஷரா, அபிநய் என பல போட்டியாளர்களும் ராஜுவுக்கே அதிக ரோஜாப்பூக்களை கொடுத்துள்ள புரமோ வெளியாகி உள்ளது. நேற்று ரோஜா மாலை போட்ட நிலையில், இன்று ரோஜாப்பூக்களை வைத்து பிக்பாஸ் கேம் ஓடிக் கொண்டிருக்கிறது.
பிரியங்கா எங்கே
கடந்த இரண்டாவது புரமோ மற்றும் தற்போது வெளியாகி உள்ள 3வது புரமோவில் பிரியங்காவை ஆளே காணுமே என ரசிகர்கள் ஒவ்வொரு ஃபிரேமாக பாஸ் செய்து பார்த்து ஷாக் ஆகி உள்ளனர். பிரியங்காவுக்கு உடல் நலம் சரியில்லை என்றும் அவர் பிக் பாஸ் நிகழ்ச்சியில் இருந்து வெளியேறி உள்ளார் என்றும் தகவல்கள் பரவ தொடங்கி உள்ளன. அதிகாரப்பூர்வ அறிவிப்புக்காக பிரியங்கா ஆர்மியினர் கலக்கத்துடன் காத்திருக்கின்றனர்.
Recommended Video
கடைசி நேர சதியா
உடல் நிலை சரியில்லை என நமீதா மாரிமுத்துவை அதிரடியாக வெளியேற்றியது போல கடைசி நேரத்தில் பாவனி அல்லது நிரூப்பை ஃபினாலே ஸ்டேஜில் மேடை ஏற்ற வேண்டும் என்பதற்காக பிரியங்காவுக்கு உடல் நிலை சரியில்லை என வெளியேற்றி விட்டனரா? என்கிற சந்தேகமும் ரசிகர்கள் மத்தியில் எழுந்துள்ளது. பிரியங்காவுக்கு ஒன்றும் ஆகியிருக்காது நிச்சயம் அவர் ஃபினாலேவில் இடம்பெறுவார் என்றும் ரசிகர்கள் நம்பிக்கை தெரிவித்து வருகின்றனர்.
-
Coolie movie: ஒரு மணிநேரத்தில் 1 மில்லியன் வியூஸ்.. கெத்து காட்டும் ரஜினியின் கூலி பட டைட்டில் டீசர்
-
Rajinikanth: அப்பாவும் தாத்தாவும் வந்தார்கள் போனார்கள்.. வைரலாகும் ரஜினி பட பாடல் வரிகள்!
-
என்னை அரசியலுக்கு வரவிடாதீங்க.. நீங்க நல்லது செய்யுங்க.. நான் நடிச்சுட்டு போய்டுவேன்.. விஷால் பேட்டி!