Don't Miss!
- News "மகளிர் உரிமை தொகை வரல.." அமைச்சரை பேச விடாமல் நிறுத்திய பெண்.. மேடையில் அடுத்து நடந்த பரபர சம்பவம்
- Automobiles அடி மாட்டு விலைக்கு எலெக்ட்ரிக் காரை களமிறக்கும் மாருதி! பெட்டி கடைல வெத்தல, பாக்கு விக்கற மாதிரி விக்க போகுது
- Sports ரோகித்.. ரோகித் என கத்திய ரசிகர்கள்.. ஓங்கி ஒரு அடி விட்ட ஹர்திக் பாண்டியா - வீடியோ
- Finance ஸ்மால்கேப் முதலீட்டாளர்கள் காட்டில் மழை.. மொத்தம் 26 லட்சம் கோடி லாபமாம்..!!
- Technology குசும்பன்யா இந்த Samsung.. மாஸ் 5G போனை ரூ.10,000 விலையில் விற்பனை.. எந்த மாடல்? எப்போ வாங்கலாம்?
- Lifestyle பழங்கால போட்டோக்களில் யாராவது சிரிச்சு நீங்க பாத்திருக்கீங்களா? பார்த்திருக்க வாய்ப்பேயில்லை... ஏன் தெரியுமா?
- Travel 2050 வருஷம் வருறதுக்குள்ள உலகத்துல உள்ள இந்த அழகான இடங்கள் எல்லாம் கடலுக்குள்ள போயிடுமாம்!
- Education ஆஸ்திரேலியாவில் உயர்கல்வி பயில இந்திய மாணவர்கள் விரும்புவது ஏன்?
நடிகையாக இருப்பதில் ரொம்பவே கஷ்டங்கள் இருக்கு: சிவகார்த்திகேயன் பட நாயகியின் ஓப்பன் ஸ்டேட்மெண்ட்
ஐதராபாத்: கமலுடன் இந்தியன் 2, சிவகார்த்தியனுடன் அயலான் படங்களில் பிசியாக நடித்து வருகிறார் ராகுல் ப்ரீத் சிங்.
முன்னணி நடிகையாக வலம்வரும் ராகுல் ப்ரீத் சிங், சினிமா ரசிகர்களுக்கு வேண்டுகோள் விடுத்துள்ளார்.
சினிமாவில் நடிகையாக இருப்பதன் கஷ்டங்கள் குறித்தும் ராகுல் ப்ரீத் சிங் மனம் திறந்துள்ளார்.
வதந்திகளை பரப்பிய நெட்டிசன்கள்… பொங்கியெழுந்த நடிகை ஷர்மி: பூரி கனெக்ட்ஸ் கன்ஃபார்ம்
ரசிகர்களின் கனவுக் கன்னி
சினிமாவில் அறிமுகமான குறுகிய காலத்தில் முன்னணி நடிகையாக வலம் வருபவர் ராகுல் ப்ரீத் சிங். முதலில் தெலுங்கு சினிமாவில் அடியெடுத்து வைத்த அவர், அதன்பின்னர் தமிழ், இந்தி படங்களிலும் தனது வசீகரமான நடிப்பால் ரசிகர்களை கவனிக்க வைத்தார். தமிழில், அருண் விஜய்யுடன் தடையறத் தாக்க, கார்த்தியுடன் தீரன் அதிகாரம் ஒன்று, தேவ், சூர்யாவுடன் என்ஜிகே என வெரைட்டியான பாத்திரங்களில் நடித்துள்ளார்.
இந்தியன் 2வில் இணைந்த ராகுல் ப்ரீத் சிங்
தமிழில் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பு கிடைத்த ராகுல் ப்ரீத் சிங்குக்கு, தொடர்ந்து சிவகார்த்திகேயனின் 'அயலான்', ஷங்கர் இயக்கத்தில் கமலுடன் 'இந்தியன் 2' படங்களில் நடிக்க வாய்ப்பு கிடைத்தது. அயலானில் நடித்து வரும் ராகுல் ப்ரீத் சிங், இப்போது மீண்டும் தொடங்கப்பட்டுள்ள இந்தியன் 2 படத்திலும் பிஸியாக உள்ளார். இந்த இரண்டு படங்களுமே அவரது கேரியரில் சூப்பர் கம்பேக் கொடுக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
சினிமாவில் நிறைய கஷ்டங்கள் இருக்கு
மேலும், இந்தியில் 3 படங்களில் நடித்து வரும் ராகுல் ப்ரீத் சிங். நடிகையாக இருப்பது குறித்து மனம் திறந்துள்ளார், "சினிமாவில் நடிக்க நான் நிறைய உழைக்கிறேன். அதில் நிறையவே கஷ்டங்களும் இருக்கின்றன. ஆனாலும் தொடர்ந்து நல்ல நடிகையாக வலம்வர முயற்சிக்கிறேன். அதேபோல், கஷ்டப்பட்டு எடுக்கப்படும் படங்கள் தியேட்டரில் ரிலீஸாக வேண்டும் என நான் விரும்புகிறேன். ஹாரர் திரைப்படங்கள் தான் எனக்கு பிடிக்கும். அப்படியான படங்களை ஓடிடி தளங்களில் பார்க்கலாம். ஆனால், நல்ல கதையம்சம் உள்ள படங்களை கண்டிப்பாக தியேட்டரில் தான் பார்ப்பேன்" எனக் கூறியுள்ளார்.
ரசிகர்களுக்கு ராகுல் ப்ரீத் வேண்டுகோள்
மேலும், "வீட்டில் படங்கள் பார்க்கும்போது அதில் தியேட்டர் அனுபவம் கிடைக்காது. சினிமாவிற்காக ஒவ்வொருவரும் எவ்வளவு கஷ்டப்படுகிறார்கள் என நன்றாகவே தெரியும். நடிகர், நடிகைகள் கொஞ்சம் குறைவாக உழைத்தாலும், கேமராமேன், உதவி இயக்குநர்கள், லைட்மேன் போன்றவர்கள் 14 முதல் 15 மணி நேரம் உழைக்கிறார்கள். அவர்களின் கஷ்டத்தை ஒவ்வொருவரும் தெரிந்துகொள்ள வேண்டும். அதனால் இனிமேலாவது ரசிகர்கள் தியேட்டர்களுக்கு சென்று படம் பார்க்க வேண்டும்" என வேண்டுகோள் விடுத்துள்ளார்.