Don't Miss!
- News
1.32 கோடி இளைஞர்கள்.. தமிழ்நாட்டில் வேலையில்லாமல் தவிக்கிறார்கள்.. அன்புமணி ராமதாஸ் விமர்சனம்!
- Automobiles
இந்த அளவுக்கு புக்கிங் வரும்னு மாருதியே நெனச்சிருக்காது! 2 புதிய கார்களை வாங்க எல்லாரும் போட்டி போட்றாங்க!
- Sports
உடைந்த கைகளால் பேட்டிங்.. அணிக்காக ஒற்றை கையில் போராடிய ஹனுமா விஹாரி.. எதிரணி வீரர்களே பாராட்டு!
- Lifestyle
பளபளப்பான ஜொலிக்கும் சருமத்தை பெற... நீங்க ஏன் இயற்கை பொருட்களை மட்டும் பயன்படுத்தனும் தெரியுமா?
- Finance
எத்தியோப்பியா, கென்யாவோட ஜிடிபி-க்கு சமமான வீழ்ச்சி.. அதானி குழுமத்திற்கு அடிக்கு மேல் அடி!
- Technology
36 லட்ச WhatsApp பயனர்களுக்கு ஆப்பு.! உப்பு தின்னா தண்ணி குடிக்கனும்., தப்பு செஞ்சா?
- Travel
தாம்பரத்தில் தாஜ்மஹாலா – ஆம்! ஒரு அற்புதமான கண்காட்சி நடைபெற்றுக் கொண்டிருக்கிறது – மிஸ் பண்ணிடாதீங்க!
- Education
GRSE Recruitment Notification 2023:கப்பல் கட்டும் தளத்தில் ரூ.1.8 லட்சத்தில் வேலை...!
மண்டையில் இருந்த கொண்டையை மறந்துட்டேனே..ஒரே கண்ணாடி..ரசிகர்களிடம் சிக்கிய ராஷ்மிகா!
சென்னை : நடிகை ராஷ்மிகாவும் விஜய் தேவரகொண்டாவும் மாலத்தீவுக்கு சென்றிருப்பதாக தகவல் பரவிவரும் நிலையில், விஜய் தேவரகொண்டாவின் கண்ணாடியை ராஷ்மிகாவும் போட்டு ரசிகர்களிடம் கொத்தாக மாட்டிக்கொண்டார்.
நடிகர் விஜய் தேவரகொண்டாவும், குஷி என்கிற தெலுங்கு படத்தில் நடித்து வருகிறார். இப்படத்தின் ஷூட்டிங் கடந்த சில மாதங்களாக இடைவிடாமல் நடைபெற்று வந்த நிலையில், அதிலிருந்து சற்று ஓய்வெடுப்பதற்காக விஜய் தேவரகொண்டாவும் மாலத்தீவுக்கு சென்றுள்ளார்.
அதேபோல குட்பை,வாரிசு படங்களில் பஸியாக நடித்து வந்த ராஷ்மிகாவும் மாலத்தீவுக்கு ஓய்வெடுக்க சென்றுள்ளார்.
இன்னும்
இரு
தினங்களில்
ஓடிடியில்
வெளியாகும்
சிம்பு
படம்..
படத்தோட
டெலிடட்
காட்சிகள்
இதோ!

கீதா கோவிந்தம்
கீதா கோவிந்தம் படத்தில் க்யூட்டாக நடித்து அனைவர் மனதிலும் பஜக்கென்று ஒட்டிக்கொண்டார் ராஷ்மிகா மந்தானா. அந்த படத்தில் விஜய்தேவர கொண்டாவுடன் காதல், ரொமான்ஸ் என அனைத்தும் பக்காவாக இருக்கும். இந்த படத்தை அடுத்து டியர் காம்ரேட் படத்தில் இருவரும் ஜோடி போட்டு நடித்தனர். ரியல் காதலர்கள் போல இருவரும் செம பொருத்தமாக இருந்ததால் இந்த ஜோடியை அனைவருக்கும் பிடித்து விட்டது.

காதல் கிசுகிசு
இரண்டு படங்களுக்கு பிறகு இருவரும் இணைந்து நடிக்கவில்லை என்றாலும் இருவரும் டேட்டிங் செல்வது, ஊர் சுற்றுவதுமாக இருந்ததால், மீடியாக்களின் கண்களில் சிக்கினர். இதையடுத்து இருவரும் காதலிப்பதாக கிசுகிசுக்கப்பட்டது. ஆனால், நாங்கள் இருவரும் நண்பர்கள் தான், காதலர்கள் இல்லை என கூறி வருகின்றனர்.

மாலத்தீவில்
இந்த ஜோடி தற்போது மாலத்தீவில் விடுமுறையை கொண்டாட சென்றுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. என்னத்தான் தனித்தனி காரில் வந்தாலும், மாலத்தீவு செல்லும் விமானத்தில் ஒன்றாகத்தான் ஏறியதால் கேமிராவில் வசமாக சிக்கிக்கொண்டனர். இதனால், இவர்களைப் பற்றிய காதல் விவகாரம் மீண்டும் பேசுபொருளாகி உள்ளது.

வசமாக சிக்கிய ராஷ்மிகா
இந்நிலையில் விஜய் தேவரகொண்டாவின் கூலர் கண்ணாடியை, ராஷ்மிகா மந்தனா போட்டுக்கொண்டு இருக்கும் போட்டோவை இன்ஸ்டாவில் ஷேர் செய்திருந்தார். இதைப்பார்த்த, ரசிகர்கள் மும்பை விமானநிலையத்திற்கு விஜய்தேவரகொண்டா கூலர் போட்டு வரும் போட்டோவையும்,ராஷ்மிகா கூலர் போட்டு இருக்கும் போட்டோவையும் ஷேர் செய்து கண்ணாடி விஜய்க்கு சொந்தமானது என்பதை கண்டுபிடித்துவிட்டனர். மண்டையில் இருந்த கொண்டைய மறந்துடீங்களே என இருவரையும் கிண்டலடித்து வருகின்றனர்.