Don't Miss!
- Sports PBKS vs MI : என்னா அடி.. பீதியை கொடுத்திட்ட தம்பி.. அஷுதோஷ் சர்மாவை நேரடியாக பாராட்டிய அம்பானி மகன்!
- News ஜனநாயக கடமை ஆற்ற முதல் ஆளாக வந்த நடிகர் அஜித்.. 30 நிமிடம் முன்பே வந்து காத்திருந்து ஓட்டு போட்டார்!
- Technology யாரு சாமி நீ.. UPI.. யூடியூப்.. சிங்கிள் சார்ஜில் 6 நாட்கள் பேட்டரி.. புதிய 4ஜி போன் அறிமுகம்.. எந்த மாடல்?
- Automobiles உலகம் முழுவதும் ராயல் என்ஃபீல்டு பைக்கை வாடகைக்கு எடுக்கலாம்! எப்படி தெரியுமா?
- Lifestyle Today Rasi Palan 19 April 2024: இன்று இந்த ராசிக்காரர்கள் நிலுவையிலுள்ள பணிகளை முடிக்க முயற்சிப்பது நல்லது...
- Finance ரோஜா பூவும், பிரியாணியும் மணக்குதே.. செலவும் பிச்சுக்குதே..!!
- Travel பாவனி ஆற்றின் நடுவே 700 ஆண்டுகளாக மூழ்கியிருக்கும் கோட்டை – இன்னும் 2 மாதங்களுக்கு பொதுமக்கள் செல்லலாம்!
- Education பிளஸ்-2 படித்திருந்தால் போதும்...மத்தியஅரசு வேலை தயார்..!!
சிரஞ்சீவியின் ஓய்வு: ட்விட்டரில் அசிங்கமாக திட்டிய ராம் கோபால் வர்மா
நடிகர் சிரஞ்சீவி சினிமாவில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்தது அவரது ரசிகர்கள் மனதில் இடிபோல் விழுந்துள்ளது. இதில் சிரஞ்சீவியின் தீவிர ரசிகரான இயக்குனர் ராம் கோபால் வர்மாவும் இதில் அடக்கம். என்ன... மற்ற ரசிகர்கள் 'என்ன தலைவா இப்படி சொல்லிட்டியே?' என்று வருத்தப்படுகின்றனர். ஆனால் ராம் கோபால் வர்மாவோஅசிங்கமாக தி்ட்டியுள்ளார்.
இது குறித்து ராம் கோபால் வர்மா ட்விட்டரில் கூறியுள்ளதாவது:
நான் ஆந்திர மக்கள் சிரஞ்சீவியின் படத்தை பார்க்க டிக்கெட் வாங்க வரிசையில் நிற்பதைத்தான் பார்க்க விரும்புகிறேன். மாறாக அவர் மக்களிடம் (கெட்ட வார்த்தை) ஓட்டு கேட்டு நிற்பதை பார்க்க விரும்பவில்லை.
நான் சிரஞ்சீவியை அசிங்கமான வார்த்தையால் திட்டினேன். ஒப்புக் கொள்கிறேன். ஏனென்றால் நான் ஆந்திர மக்களை விட அவரை அதிகம் நேசிக்கிறேன். ஆந்திர மக்கள் சிரஞ்சீவியை முதல்வராக்காதது அவர்களது துரதிர்ஷ்டம். அத்தகைய மக்கள் ஓட்டுபோடவில்லை என்றால் அது அவரது அதிர்ஷ்டம், என்று கூறியுள்ளார்.
ராம் கோபால் வர்மா அசிங்கமான வார்த்தைகளை டுவிட்டரில் பயன்படுத்துவது இது முதல் முறையன்று. ஏற்கனவே புத்தா படத்தில் அமிதாபின் நடிப்பை பாராட்டவும் அவர் கெட்ட வார்த்தையைத் தான் பயன்படுத்தினார்.
சர்ச்சையின் மறுபெயர் தான் ராம் கோபால் வர்மாவோ!