Don't Miss!
- Automobiles இனிமே விமானத்தில் பறக்கும்போது போரடிக்காது.. புதிய சேவையை பயன்பாட்டுக்கு கொண்டு வரும் இன்டிகோ!
- Lifestyle Today Rasi Palan 25 April 2024: இன்று இந்த ராசிக்காரர்களுக்கு புதிய நபர்களுடன் பழகும் போது கவனம் தேவை...
- News அரசு புறம்போக்கு நிலம் என கைவிரித்த அதிகாரிகள்.. பட்டா வழங்க மறுப்பு.. ஹைகோர்ட் அதிரடி உத்தரவு
- Sports IPL 2024: ஏமாந்து போன ப்ரித்வி ஷா.. அது அவுட்டே இல்லை.. கொந்தளித்த டெல்லி ரசிகர்கள்.. என்ன நடந்தது?
- Technology சீனாவிற்கு செக் வச்ச கேப்புல.. ரஷ்யாவிற்கும் ஒரு ஆப்பு பார்சல் பண்ண இந்தியா.. சாதித்தது DRDO புதிய ஏவுகணை!
- Finance சிங்கம் போல் களமிறங்குகிறது BSNL.. டிசிஎஸ் உடன் மாஸ் திட்டம்..!
- Education ஜூன் 16-ல் யுஜிசி நெட் தேர்வு...ஏற்பாடுகள் தயார்...!!
- Travel இந்தியாவில் உள்ள இந்த மினு மினுக்குற காட்டுக்கு போய் இருக்கீங்களா – ஒரு முறை போய் பாருங்க!
எஸ்பிபிக்கு இளையராஜா காப்பிரைட் நோட்டீஸ் அனுப்புவதா.. கங்கை அமரன் கோபம்!
சென்னை: காப்புரிமை பிரச்சனையை எழுப்பியுள்ள இசைஞானி இளையராஜாவுக்கு இசையமைப்பாளர் கங்கை அமரன் கண்டனம் தெரிவித்துள்ளார்.
தான் இசையமைத்த பாடல்களை தனது அனுமதி இல்லாமல் எங்கும் பாடக் கூடாது என்று இசைஞானி இளையராஜா பாடகர் எஸ்.பி. பாலசுப்பிரமணியனுக்கு நோட்டீஸ் அனுப்பினார்.
இந்நிலையில் இது குறித்து இளையராஜாவின் சகோதரரும், இசையமைப்பாளருமான கங்கை அமரன் கூறியிருப்பதாவது,
இளையராஜா
எஸ்.பி. பாலசுப்பிரமணியத்திற்கு இளையராஜா நோட்டீஸ் அனுப்பியிருக்கக் கூடாது. இது முட்டாள்தனமானது. இளையராஜாவுக்கு நான் தான் என்ற அகங்காரம் இருக்கக் கூடாது.
மழை
இளையராஜாவின் இசை மழை போன்றது. அதை யார் வேண்டுமானாலும் அனுபவிக்கலாம், ரசிக்கலாம். பாடல்களுக்கு காப்புரிமை கேட்பது சரியல்ல.
கட்டுப்பாடு
ராயல்டி கொடுத்த பிறகு தான் மக்கள் என் பாடல்களை கேட்க வேண்டும் என்று இளையராஜாவால் நிபந்தனை விதிக்க முடியுமா? அவரின் பாடல்களை முணுமுணுக்கக் கூட ராயல்டி கேட்பாரா?
ராயல்டி
பாடகர்களிடம் ராயல்டி கேட்கிறாரே அவர் தியாகராஜ கீர்த்தனைகளை பாட ராயல்டி கொடுத்தாரா என்று கங்கை அமரன் கேள்வி எழுப்பியுள்ளார்.