Don't Miss!
- News வெளியானது டிஎன்பிஎஸ்சி குரூப் 1 ரிசல்ட்.. தேர்வு முடிவை எப்படி பார்க்கலாம் தெரியுமா?
- Automobiles உலகமே எதிர்பார்த்த சியோமி மின்சார கார் விற்பனைக்கு வந்தாச்சு! அதோட செல்போன்களை போலவே இதோட விலையும் ரொம்ப கம்மி
- Sports சின்னவனை மீண்டும் சேர்க்காத டெல்லி.. குட்டி சச்சினுக்கு என்ன ஆச்சு? அதிர்ச்சி கொடுத்த ரிஷப் பண்ட்!
- Education யுபிஎஸ்சி ஐஎஃப்எஸ் தேர்வு நேர்காணல் தேதி அறிவிப்பு
- Travel டைட்டானிக் கப்பல் மூழ்கி இருக்கலாம் – ஆனால் அதைப் பற்றிய சுவாரஸ்யமான உண்மைகள் மறையாது!
- Lifestyle முட்டை வாங்க போறீங்களா? இப்படி பார்த்து வாங்குங்க... இல்லனா பல ஆபத்துக்களை சந்திக்க வேண்டியிருக்கும்...!
- Technology குறைஞ்சது 4 -5 நாள் ஆகும்.. கடைசி நேரத்துல அலையாதீங்க.. Voter ID-க்கான முக்கிய வேலை.. உடனே செஞ்சிடுங்க!
- Finance தொழில்நுட்ப துறையில் தொடரும் பணிநீக்கம்.. பெரு நிறுவனங்களின் அதிரடி முடிவுக்கு காரணம் என்ன?..
ஏடிஎம்மிலேயே சரியாக பணம் இல்லாதபோது சிறையில் வேந்தர் மூவிஸ் மதனிடம் ரூ.15,000 பறிமுதல்
சென்னை: மோசடி வழக்கில் புழல் சிறையில் இருக்கும் வேந்தர் மூவிஸ் மதனிடம் இருந்து ரூ.15 ஆயிரம் ரொக்கம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.
கருப்பு பணத்தை ஒழிக்கிறேன் என்ற பெயரில் பிரதமர் மோடி கடந்த நவம்பர் மாதம் 500 மற்றும் 1000 ரூபாய் நோட்டுகள் செல்லாது என்று அறிவித்தார். அதன் பிறகு ஏற்பட்ட பணத் தட்டுப்பாடு இன்னும் தீரவில்லை.
இந்நிலையில் மோசடி வழக்கில் சென்னை புழல் சிறையில் அடைக்கப்பட்டுள்ள தயாரிப்பாளரான வேந்தர் மூவிஸ் மதனிடம் இருந்து போலீசார் ரூ.15 ஆயிரம் ரொக்கத்தை பறிமுதல் செய்துள்ளனர்.
எஸ்.ஆர்.எம். கல்லூரியில் மருத்துவ படிப்புக்கான சீட் வாங்கித் தருவதாகக் கூறி ரூ.85 மோசடி செய்து தலைமறைவாக இருந்தவர் மதன். வட நாட்டில் சுற்றிய அவர் திருப்பூர் வந்து பதுங்கியிருந்தபோது போலீசாரிடம் சிக்கினார்.
கடந்த ஆண்டு நவம்பர் மாதம் 21ம் தேதி அவர் கைது செய்யப்பட்டார். சிறையில் உள்ள ஒருவரிடம் இவ்வளவு பணம் எப்படி வந்தது என்று பலரும் வியப்பில் ஆழ்ந்துள்ளனர்.