Don't Miss!
- Lifestyle உங்க பிறந்த தேதியை சொல்லுங்க.. வருகிற ஏப்ரல் மாசம் எப்படி இருக்கும்-ன்னு சொல்றோம்...
- Automobiles சுஸுகி வி-ஸ்டார்ம் 800டிஇ பைக் இந்தியாவில் அறிமுகம்! இந்த பைக்க வாங்குற காசுல 2 மாருதி ஆல்டோ காரை வாங்கிடலாம்!
- News மீண்டும் மீண்டுமா! அரவிந்த் கெஜ்ரிவாலை பதவி நீக்கம் செய்யக்கோரி டெல்லி ஹைகோர்ட்டில் மனுத்தாக்கல்
- Finance TATA Sons நிறுவனத்தில் ஒரேயொரு பங்கு வைத்திருக்கும் மர்ம நபர்? யார் இவர்?! JRD டாடா-வுடன் நெருக்கம்!
- Sports 4,4,6.. உங்க ஸ்பின்னெல்லாம் என்னிடம் எடுபடாது.. கேகேஆர் அணியின் அஸ்திவாரத்தை ஆட்டிய கேமரூன் க்ரீன்!
- Technology கஸ்டமர்களுக்கு வந்த திடீர் மெசேஜ்! சத்தமின்றி BSNL சேவையில் புதிய மாற்றம்.. ஆப்பிற்குள் காத்திருந்த அதிர்ச்சி!
- Travel தமிழ்நாட்டிலேயே பாதுகாப்பான சுற்றுலாத் தலங்கள் இவை தான் – பெண்களாக, குடும்பங்களாக செல்ல ஏற்ற இடங்கள்!
- Education நெட் தேர்வு மதிப்பெண் அடிப்படையில் பிஎச்.டி. படிப்பில் சேரலாம்: யுஜிசியின் புதிய அறிவுறுத்தல
படப்பிடிப்பை பாதியில் நிறுத்திவிட்டு தீபிகாவுடன் 2 மணிநேரம் பேசிய சல்மான்
மும்பை: சல்மான் கான் நடிகை தீபிகா படுகோனேவை சந்தித்து பேசியதால் விளம்பர படத்தின் படப்பிடிப்பு இரண்டு மணிநேரம் தாமதமானதாம்.
பாலிவுட் நடிகர் சல்மான் கானும், தீபிகா படுகோனேவும் இதுவரை சேர்ந்து நடிக்கவில்லை. ஆனால் இருவரும் பொது இடங்களில் பார்த்தால் நண்பர்களை போன்று சிரித்துப் பேசி பழகுவார்கள்.
சல்மான் கானின் படத்தில் நடிக்க வாய்ப்பு வந்தால் மட்டும் அதை தீபிகா ஏற்பது இல்லை.
சல்மான் கான்
சல்மானின் புதுப்படம் துவங்கும் போது எல்லாம் தீபிகாவிடம் கேட்பார்கள் அவரும் முடியாது என்பார். கேட்டால் கதை சரியில்லை, கதாபாத்திரம் சரியில்லை என்று தொடர்ந்து ஏதாவது காரணம் கூறி வருகிறார்.
விளம்பரப் படம்
சல்மான் கான் மற்றும் ஜாக்குலின் பெர்ணான்டஸ் ஆகியோரை வைத்து விளம்பரப் படம் ஒன்றை படமாக்கியுள்ளனர். அப்போது யாரோ தீபிகா படுகோனேவும் இதே ஸ்டுடியோவில் தான் நடித்துக் கொண்டிருக்கிறார் என்று கூறியுள்ளார்.
தீபிகா
தீபிகா அதே ஸ்டுடியோவில் இருப்பது குறித்து அறிந்த சல்மான் கான் படப்பிடிப்பை நிறுத்திவிட்டு அவரை பார்க்க சென்றுவிட்டார். இருவரும் ஜாலியாக இரண்டு மணிநேரம் பேசியுள்ளனர்.
தாமதம்
சல்மான் கானும், தீபிகாவும் சந்தித்து பேசியதால் விளம்பரப் படத்தின் படப்பிடிப்பு 2 மணிநேரம் தாமதமாகியுள்ளது. சம்பந்தப்பட்டவர்கள் சொல்வது தெரியாமல் அமைதியாக காத்திருந்துள்ளனர்.