ஒத்த காலில் நின்று வாரிசு நடிகையின் காதலை அத்துவிட்ட அம்மா?
மும்பை: பாலிவுட் நடிகர் சயிப் அலி கானின் மகள் சாரா தனது காதலரை பிரிந்துவிட்டாராம்.
பாலிவுட் நடிகர் சயிப் அலி கானின் மகள் சாரா கேதர்நாத் படம் மூலம் பாலிவுட்டில் அறிமுகமாகிறார். கேதர்நாத்தில் அவர் சுஷாந்த் சிங் ராஜ்புட்டின் ஜோடியாக நடிக்கிறார்.
இந்நிலையில் அவரது காதல் முறிந்துள்ளது.

சாரா
நடிகர் அனில் கபூரின் மகனும் நடிகருமான ஹர்ஷ்வர்தன் கபூரும், சாரா அலி கானும் காதலித்து வந்தனர். இருவரும் ஜோடி போட்டு ஊர் சுற்றினார்கள்.

பிரிவு
சாரா ஹர்ஷ்வர்தனை காதலிப்பது அவரது அம்மா அம்ரிதாவுக்கு சுத்தமாக பிடிக்கவில்லை. ஹர்ஷ்வர்தன் பெண்கள் விஷயத்தில் வீக் என்பதாலேயே அவருக்கு பிடிக்கவில்லை.

காதல்
சாராவும், ஹர்ஷ்வர்தனும் பிரிந்துவிட்டார்களாம். அவர்கள் பிரிந்ததற்கான காரணம் இன்னும் தெரியவில்லை. ஆனால் அம்ரிதா எதிர்த்த நிலையில் பிரிந்துள்ளனர்.

கோபம்
சாராவும், ஹர்ஷ்வர்தனும் அடிக்கடி சந்தித்து பேச அனுமதித்த சயிப் அலி கான் மீது அம்ரிதா கோபத்தில் இருந்தார். ஹர்ஷ்வர்தனை ஒதுங்கிக் கொள்ளுமாறு சொல்ல வேண்டும் என்று அவரின் தந்தையிடம் தெரிவித்தார் அம்ரிதா என்பது குறிப்பிடத்தக்கது.


Click it and Unblock the Notifications











