Don't Miss!
- News பொத்தென விழுந்த மேற்கூரை.. 3 பேரை அமுக்கி கொன்ற சென்னை பப் விபத்து பற்றி காவல்துறை விளக்கம்
- Automobiles உலகின் தலை சிறந்த கார் எது தெரியுமா? விருதை தட்டி சென்ற கியா தயாரிப்பு! சும்மா ஒன்னும் இதை தூக்கி கொடுத்திடல..
- Sports ரிஷப் பண்ட்க்கு 2 முறையும் லக் இல்ல.. தொடர்ந்து 2வது வெற்றியை பெற்ற ராஜஸ்தான்.. ரியான்,ஆவேஷ் அபாரம்
- Lifestyle வரப்போகிற சூரிய கிரகணம் இந்த 4 ராசிக்காரங்களுக்கு பெரிய துரதிர்ஷ்டத்தை தரப்போகுதாம்..ரொம்ப ஜாக்கிரதையா இருங்க!
- Education யுபிஎஸ்சி ஐஎஃப்எஸ் தேர்வு நேர்காணல் தேதி அறிவிப்பு
- Travel டைட்டானிக் கப்பல் மூழ்கி இருக்கலாம் – ஆனால் அதைப் பற்றிய சுவாரஸ்யமான உண்மைகள் மறையாது!
- Technology குறைஞ்சது 4 -5 நாள் ஆகும்.. கடைசி நேரத்துல அலையாதீங்க.. Voter ID-க்கான முக்கிய வேலை.. உடனே செஞ்சிடுங்க!
- Finance தொழில்நுட்ப துறையில் தொடரும் பணிநீக்கம்.. பெரு நிறுவனங்களின் அதிரடி முடிவுக்கு காரணம் என்ன?..
ரஜினி, ரஜினி.. ஒரே பில்டப்பா இருக்கே.. மக்களுக்கான கேள்விகளை கேளுங்கள்.. கடுப்பான சரத்குமார்!
சென்னை: ரஜினி அரசியல் நிலை குறித்த கேள்விக்கு சரத்குமார் கோபமாக பதிலளித்தார்.
சரத்குமார் கடந்த 1994ல் இருந்து அரசியலில் தன் பங்கை செலுத்தி வருகிறார். சரத்குமார் 2007ல் தனது அனைத்திந்திய சமத்துவ மக்கள் கட்சியை தொடங்கினார். அப்போதிலிருந்து அரசியல் சார்ந்த பல விஷயங்களையும் அரசியல் சார்ந்த பல கருத்துக்களையும் தொடர்ந்து பொதுவெளியில் பகிர்ந்து வருகிறார்.
தற்போது ரஜினியின் அரசியல் நிலை குறித்து ஒரு திருமண விழாவில் கலந்து கொள்ள சென்ற சரத்குமாரிடம் கேட்கபட்டது. இதற்கு பதிலளித்துள்ள சரத்குமார், ரஜினியை பற்றிய கேள்விகளையே தொடர்ந்து கேட்டு கேட்டு பில்ட்அப் கொடுத்து வருகிறீர்கள் என்று குற்றம் சாட்டினார்.
மேலும் பேசிய சரத்குமார் மக்களுக்கான கேள்விகளை என்னிடம் கேளுங்கள் அதற்கு பதில் கூற இந்த சரத்குமார் காத்திருக்கிறான். சம்மந்தமில்லாத கேள்விகளை என்னிடம் கேட்பதை தயவு செய்து தவிருங்கள் என கூறினார்.
ஆல் இஸ் வெல் அமீர்கான்.. அவர் குறித்து தெரியாத 7 சுவாரஸ்ய தகவல்கள்.. பிறந்த நாள் ஸ்பெஷல்!
குடியுரிமை சட்டதிருத்தத்தை பற்றிய கருத்தை தெரிவித்த சரத்குமார் இது இஸ்லாமிய சகோதரர்களுக்கு எதிரான சட்டம் இல்லை. இது இஸ்லாமிய சகோதரர்களை எந்த விதத்திலும் பாதிக்காது என்று கூறியுள்ளார். குடியுரிமை சட்டத்தை அனைவரும் முழுமையாக படிக்க வேண்டும் என்று அந்த சட்டத்தை பற்றி படித்து புரிந்து கொள்ள வேண்டும் என்றார்.
தற்போது கொரோனா நாடு முழுவதும் பரவி வருவதால் பொது இடங்களில் கூட்டம் போட கூட்டம் கூட அரசு கொஞ்சம் கொஞ்சமாக தடை விதித்து வருகிறது. தற்போது மார்ச் இறுதியில் நடக்கவிருந்த ஐபிஎல் போட்டிகளை கொரோனா காரணமாக தள்ளி வைத்திருக்கிறது இந்திய அரசு. இது பற்றிய கருத்தை பகிர்ந்த சரத்குமார், ஆமாம் கட்டாயம் இதை கடைப்பிடிக்க வேண்டும் சுத்தமாக இருக்க வேண்டும் யாருக்கும் கை கொடுக்க வேண்டாம் என்று கேட்டுக்கொண்டார்.
-
Vijay - புஸ்ஸி ஆனந்த்துடன் விஜய் சகவாசம்.. ஒரு அரசியல்வாதியும் இப்படி செய்யல.. கிழித்து தொங்கவிட்ட எஸ்.ஏ.சி
-
என்னது சிவகார்த்திகேயன் - ஏ.ஆர்.முருகதாஸ் படத்துக்கு இத்தனை கோடி பட்ஜெட்டா?.. பிரமாண்டம் தயாரோ
-
ஒரே தேதியில் இரண்டு இழப்புகள்.. சந்தானத்துக்கு உச்சக்கட்ட வேதனை.. ரசிகர்கள் ஆறுதல்