Don't Miss!
- News கெஜ்ரிவால் கைது+காங். வங்கி கணக்கு முடக்கம்.. அமெரிக்கா, ஜெர்மனியை தொடர்ந்து கருத்து தெரிவித்த ஐநா
- Lifestyle ஒரு டைம் காளானை வாங்கி இப்படி ட்ரை பண்ணுங்க.. சும்மா அள்ளும்...
- Finance மக்கள் அதிகம் வாங்குவதாலேயே தங்கம் விலை உயர்கிறதா..? உண்மை என்ன..?!
- Automobiles பெட்ரோல் போடுவதை போல ஹைட்ரஜனை நிரப்பிட்டா 3,000 கிமீ நிற்காம போகும்! உலக சாதனை படைத்த ரயில்!
- Sports மும்பை பாணியில் கம்பீர் எடுத்த முடிவு.. 16 வயது சிறுவனை ஒப்பந்தம் செய்த கேகேஆர்.. யாருப்பா அந்த பையன்?
- Education சென்னையின் பெருமைமிகு கல்லூரிகளில் ஒன்றாகத் திகழும் டி.ஜி.வைஷ்ணவ் கல்லூரி...!!
- Technology அம்மா வாங்க.. ஐயா வாங்க! கிட்டத்தட்ட பாதி விலை டிஸ்கவுண்ட்.. Amazon-ல் கூவிக்கூவி விற்கப்படும் ஐந்து 4K TVகள்!
- Travel டைட்டானிக் கப்பல் மூழ்கி இருக்கலாம் – ஆனால் அதைப் பற்றிய சுவாரஸ்யமான உண்மைகள் மறையாது!
பலே வெள்ளையத் தேவா... இது சசிகுமாரின் அடுத்த படம்!
புதிய இயக்குநர்களை நம்பி தைரியமாக தன் படங்களைக் கொடுத்து வரும் சசிகுமார், அடுத்தும் தேர்வு செய்திருப்பது ஒரு அறிமுக இயக்குநரைத்தான்.
அவர் பிரகாஷ். சசிகுமார் நாயகனாக நடிக்க, அவரது கம்பெனி புரொடக்ஷன்ஸ் தயாரிக்கும் புதிய படத்தை பிரகாஷ்தான் இயக்குகிறார். படத்துக்கு பலே வெள்ளையத் தேவா என தலைப்பிட்டுள்ளனர்.
இந்தப் படத்தை சத்தமின்றி கடந்த செப்டம்பர் மாதமே தொடங்கிவிட்ட சசிகுமார், இப்போதுதான் தலைப்பை அறிவித்துள்ளார். நாயகி மற்றும் முக்கிய டெக்னீஷியன்கள் விபரங்களை இன்னும் வெளியிடவில்லை.
இதுகுறித்து சசிகுமார் தனது ட்விட்டர் பக்கத்தில், "பலே வெள்ளையத்தேவா' எங்களது கம்பெனி புரொடக்ஷன்ஸ் நிறுவனம் 9-வதாக தயாரிக்கும் படத்தின் தலைப்பு," என்று மட்டும் தெரிவித்திருக்கிறார்.
கிடாரி படம் எதிர்ப்பார்த்த அளவுக்கு வெற்றியடையாததால், இந்தப் படத்தை எந்த பரபரப்பும் இல்லாமல் தயாரித்து வருகிறார் சசிகுமார். ஆனால் தலைப்பைப் பார்த்தால் ஒரு சின்ன கலகம் இல்லாமல் வெளியாகாது போலிருக்கிறது.