Don't Miss!
- Sports பும்ராவுக்கே அதிர்ச்சி கொடுத்த அஷுதோஷ் சர்மா.. போட்டியை வென்ற மும்பை.. ரசிகர்களை வென்ற பஞ்சாப்!
- Lifestyle 12 ஆண்டுகளுக்கு பின் மேஷத்தில் உருவாகும் கஜலட்சுமி ராஜயோகம்: இந்த 3 ராசிக்கு பண மழை பொழியும்..
- News ஆம்ஆத்மிக்கு அடுத்த ஷாக்.. கெஜ்ரிவாலை தொடர்ந்து டெல்லி எம்எல்ஏ அமலாக்கத்துறையால் கைது
- Finance ரோஜா பூவும், பிரியாணியும் மணக்குதே.. செலவும் பிச்சுக்குதே..!!
- Technology வெயிட்டிங் ஓவர்.. Sony கேமரா.. 256ஜிபி மெமரி.. வருகிறது புதிய Vivo 5ஜி போன்.. எந்த மாடல்?
- Automobiles படகு மாதிரி மிதந்து சென்ற ரூ2.44 கோடி கார்! இவ்வளவு வெள்ளத்துலயும் சின்ன டேமேஜ் கூட ஆகலயே!
- Travel பாவனி ஆற்றின் நடுவே 700 ஆண்டுகளாக மூழ்கியிருக்கும் கோட்டை – இன்னும் 2 மாதங்களுக்கு பொதுமக்கள் செல்லலாம்!
- Education பிளஸ்-2 படித்திருந்தால் போதும்...மத்தியஅரசு வேலை தயார்..!!
பேரறிவாளன், முருகன், சாந்தனை காப்பாற்ற டெல்லிக்கு தந்திகள் பறக்கட்டும்: வைரமுத்து வேண்டுகோள்
இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது,
இந்திய குடியரசுத் தலைவரால் கருணை மனு நிராகரிக்கப்பட்டு, தூக்கு மேடையின் விளிம்பில் நிற்கும் முருகன், சாந்தன், பேரறிவாளன் என்ற மூன்று தமிழர்களுக்காக உணர்வுள்ள உலக தமிழகர்கள் இதயம் உடைந்தும் கண்கலங்கியும் நிற்கிறார்கள்.
உலக தமிழர்களின் மனிதாபிமான தவிப்பையும், குற்றம் சாட்டப்பட்டவர்களின் தண்டனைக்கால அளவையும் கருத்தில் கொண்டால், இந்திய குடியரசுத் தலைவர் இன்று கூட கருணை காட்டலாம்.
அரசியல் என்ற வட்டம் தாண்டி மனிதாபிமானம் என்ற பெருவெளியில் நின்று இதை அணுக வேண்டும் என்று எல்லா இயக்கங்களையும் கேட்டுக்கொள்கிறேன்.
குறிப்பிட்ட இந்த மூன்று தமிழர்களுக்கு மட்டுமல்லாமல், மரண தண்டனை என்ற சட்டக்கொலையையே உலகமெங்கும் நிராகரிக்க வேண்டும்; நீக்கிவிட வேண்டும் என்பதைத்தான் நாகரீக சமுதாயம் விரும்புகிறது.
சட்டரீதியாக இயலாதென்றால் தார்மீக அடிப்படையில் மூவரின் தூக்கு தண்டனையை ரத்து செய்வதற்கு தமிழக அரசு முயல வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன்.
மூவருக்குமான தூக்குத்தண்டனையை ரத்து செய்யக்கோரி இந்திய குடியரசுத் தலைவர், இந்திய பிரதமர், உள்துறை அமைச்சர் ஆகிய மூவருக்கும் மின் செய்திகள் அனுப்புமாறு வெற்றி தமிழர் பேரவையின் தோழர்களை கேட்டுக்கொள்கிறேன்.
இதயமுள்ள தமிழர்கள் அனைவருக்கும் இதே வேண்டுகோளை முன் வைக்கிறேன்.
போராட்ட உணர்வு இன்னும் அற்றுவிடவில்லை; நம்பிக்கையின் கடைசித்துளி இன்னும் வற்றிவிடவில்லை என்று அவர் அதில் தெரிவித்துள்ளார்.
-
மறக்கமுடியுமா சின்னக் கலைவாணரை.. விவேக்கின் 3ம் ஆண்டு நினைவு தினம்.. செடிகளை நடும் செல் முருகன்!
-
நடிகைகள் சகவாசம்.. பாரிலேயே விழுந்து கிடக்கும் ’வி’ எழுத்து நடிகர்.. நடிக்கவே பிடிக்கலைன்னு கண்ணீர்?
-
சூரியன் படத்துல சரத்குமாருக்கு பதில் இவரா?.. கவுண்டமணி சரியான நக்கல் புடிச்ச ஆளு.. பவித்ரன் பேட்டி!