பேரறிவாளன், முருகன், சாந்தனை காப்பாற்ற டெல்லிக்கு தந்திகள் பறக்கட்டும்: வைரமுத்து வேண்டுகோள்

By Siva

Vairamuthu
பேரறிவாளன், முருகன், சாந்தன் ஆகிய 3 பேரின் தூக்கு தண்டனையை ரத்து செய்யக்கோரி இதயமுள்ள தமிழர்கள் அனைவருக்கு டெல்லிக்கு தந்திகள் அனுப்ப வேண்டும் என்று கவிஞர் வைரமுத்து வேண்டுகோள் விடுத்துள்ளார்.

இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது,

இந்திய குடியரசுத் தலைவரால் கருணை மனு நிராகரிக்கப்பட்டு, தூக்கு மேடையின் விளிம்பில் நிற்கும் முருகன், சாந்தன், பேரறிவாளன் என்ற மூன்று தமிழர்களுக்காக உணர்வுள்ள உலக தமிழகர்கள் இதயம் உடைந்தும் கண்கலங்கியும் நிற்கிறார்கள்.

உலக தமிழர்களின் மனிதாபிமான தவிப்பையும், குற்றம் சாட்டப்பட்டவர்களின் தண்டனைக்கால அளவையும் கருத்தில் கொண்டால், இந்திய குடியரசுத் தலைவர் இன்று கூட கருணை காட்டலாம்.

அரசியல் என்ற வட்டம் தாண்டி மனிதாபிமானம் என்ற பெருவெளியில் நின்று இதை அணுக வேண்டும் என்று எல்லா இயக்கங்களையும் கேட்டுக்கொள்கிறேன்.

குறிப்பிட்ட இந்த மூன்று தமிழர்களுக்கு மட்டுமல்லாமல், மரண தண்டனை என்ற சட்டக்கொலையையே உலகமெங்கும் நிராகரிக்க வேண்டும்; நீக்கிவிட வேண்டும் என்பதைத்தான் நாகரீக சமுதாயம் விரும்புகிறது.

சட்டரீதியாக இயலாதென்றால் தார்மீக அடிப்படையில் மூவரின் தூக்கு தண்டனையை ரத்து செய்வதற்கு தமிழக அரசு முயல வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன்.

மூவருக்குமான தூக்குத்தண்டனையை ரத்து செய்யக்கோரி இந்திய குடியரசுத் தலைவர், இந்திய பிரதமர், உள்துறை அமைச்சர் ஆகிய மூவருக்கும் மின் செய்திகள் அனுப்புமாறு வெற்றி தமிழர் பேரவையின் தோழர்களை கேட்டுக்கொள்கிறேன்.

இதயமுள்ள தமிழர்கள் அனைவருக்கும் இதே வேண்டுகோளை முன் வைக்கிறேன்.

போராட்ட உணர்வு இன்னும் அற்றுவிடவில்லை; நம்பிக்கையின் கடைசித்துளி இன்னும் வற்றிவிடவில்லை என்று அவர் அதில் தெரிவித்துள்ளார்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X