Don't Miss!
- News நேரு பேரனா ராகுல் காந்தி? எனக்கு சந்தேகம் இருக்கு.. டிஎன்ஏ டெஸ்ட் செய்யணும்.. கேரள எம்எல்ஏ சர்ச்சை
- Sports ஆட்டம் எங்கள் கையில் தான் இருந்தது.. ஸ்டோனிஸ் பிண்ணிட்டாரு.. சிஎஸ்கே கேப்டன் ருதுராஜ் கருத்து
- Automobiles இந்த ஒரு காருக்கு மட்டும் எப்படி இவ்வளவு சேல்ஸ் குவியுது? நிஸான் இப்போதைக்கு இந்தியாவை விட்டு போகாது!!
- Lifestyle வக்ர நிவர்த்தி அடையும் புதன்: ஏப்ரல் 25 முதல் இந்த 3 ராசிக்கு சூப்பரா இருக்கப்போகுது...
- Finance இந்தியா சிமெண்ட்ஸ் தொழிற்சாலையை வாங்கிய அல்ட்ராடெக் சிமெண்ட்.. அதானி உடன் போட்டி..!!
- Technology வெறும் 2000 ரூபாயில்.. புது Xiaomi கையடக்க கார்மெண்ட் Steamer.. பழைய ஐயன் பாக்ஸை தூக்கி போடுங்க..என்ன ஸ்பெஷல்?
- Education புதுச்சேரியில் பிஎஸ்சி நர்சிங் படிப்பதற்கு நுழைவுத் தேர்வு...!
- Travel இந்துக்களுக்கும் கூட தெரியாத ரகசியங்கள் இவை தான் – உங்களுக்கு இவற்றில் எந்த உண்மை தெரியும்?
அறைஞ்சுருவேன்.. அவன் பின்னாடி சுத்தி ஆயா வேலை செய்யவா வந்த.. ஷிவானியை வெளுத்து வாங்கிய அம்மா!
சென்னை: பிக்பாஸ் வீட்டிற்கு வந்த ஷிவானியின் அம்மா அடிக்காத குறையாக அவரை திட்டி தீர்த்தது பார்வையாளர்களை பீதியடையச் செய்தது.
Recommended Video
பிக்பாஸ் நிகழ்ச்சி இறுதிக்கட்டத்தை எட்டியுள்ள நிலையில் இன்று முதல் ஃபிரீஸ் டாஸ்க் தொடங்கியுள்ளது.
இதனை முன்னிட்டு கடந்த சீசன்களை போல ஹவுஸ்மேட்ஸின் குடும்பத்தினர் பிக்பாஸ் வீட்டுக்கு வரத் தொடங்கியுள்ளனர்.
விளையாடிய பாலாஜி
அதன்படி முதல் நபராய் ஷிவானியின் அம்மா அகிலா பிக்பாஸ் வீட்டிற்குள் வந்தார். அப்போது ஷிவானி பாத்ரூமில் இருந்தார். அவருக்கு பிக்பாஸ் ஃபிரீஸ் சொல்ல, அவரது மூக்கையில் மையை வைத்து விளையாடினார் பாலாஜி.
கட்டியணைத்து கதறல்
அப்போத சிறுத்தை படத்தில் இடம்பெற்ற ஆராரோ ஆரிராரோ பாடல் ஒலித்தது. பாடலை கேட்டு அழுது கொண்டே நின்றார் ஷிவானி. அதனை தொடர்ந்து அழகாய் என்ட்ரி கொடுத்தார் ஷிவானியின் அம்மா அகிலா. அம்மாவை பார்த்ததும் ஓடி வந்து கட்டியணைத்து கதறினார் ஷிவானி.
எதுக்கு வந்த?
எல்லோருக்கும் ஹாய் சொன்ன அகிலா, ஷிவானியிடம் நான் உன்கூட பேசணும் எங்க உட்காந்து பேசலாம் என்று கேட்டார். பின்னர் கார்டன் ஏரியாவில் உள்ள சோஃபாவில் அமர்ந்து தனது மகளுடன் பேசத் தொடங்கிய அவர் எதுக்குடி இங்க வந்த? என்ன பண்ணிட்டு இருக்க? நீ என்ன பண்றனு யாருக்கும் தெரியாதுன்னு நினைச்சுட்டு இருக்கியா?
அறைஞ்சுடுவேன்
எல்லாரும் எதுக்கு வந்திருக்காங்க? நீ எதுக்கு வந்திருக்க?
ஒருத்தன் பின்னாடி சுத்தவா வந்திருக்க என்று கேட்டு வெளுத்து விட்டார். என்ன அம்மா இப்படி பேசுறீங்க என்று கதறியப்படியே ஷிவானி கேட்க.. மீண்டும் கொதித்த அவரது அம்மா, வாயை மூடு.. வர கோபத்திற்கு அறைஞ்சுடுவேன் என்றார்.
எதுக்குடி வந்த இங்க?
நானாதான் இருக்கேன்னு சொல்லாத.. அவன் பின்னாடி சுத்துறதுதான் நீயா.. நான் பேசுறதாலதான் எல்லாருக்கும் தெரியும்னு நினைக்கிறீயா? எல்லாருக்கும் இங்க நடக்குறது தெரியுதுடி. அவன் சொல்றதுக்கெல்லாம் வழி மொழியிற.. ஏன் உனக்கு ஒரு பாயிண்டு பேச முடியாதா? பேச தெரியாதா? எதுக்குடி வந்த இங்க?
ஆரி என்ன பேக்கேஜ் வச்சுருக்காரு?
கிறிஸ்துமஸ் கிஃப்ட எதுக்குடி அவனுக்கு கொடுத்த.. இந்த வீட்டுல கேர்ள்ஸே இல்லையா? ஒவ்வொரு முறையும் ஆரி புரோதான் சொல்றாருல்ல.. உன் கேம்ம விளையாடுன்னு.. அவரு என்னடி உன்கிட்ட பேக்கேஜ் வச்சுருக்காரு.. அவரு பேக்கேஜ் வச்சுருக்காருன்னு சொல்லி நாமினேட் பண்ற.. அவரு சொன்னா மாதிரி நீ உனக்கு விளையாட வரல.
என்னத்த கிழிச்சுருக்க?
அவனுக்கு ஆயா வேலை செஞ்சு கப்பு வாங்கிக்கொடுக்க வந்திருக்க.. இந்த பிளாட்ஃபாமுக்கு எதுக்கு நீ வந்த? நீ பண்றதுக்கு அடிக்காம விட்டேனே சந்தோஷப்படு. என்ன பண்ணியிருக்க? 85 நாள் என்னத்த நீ இங்க கிழிச்சுருக்க? ஏதாவது பண்ணியிருந்தா தானே என்ன பண்ணியிருக்கன்னு சொல்ல முடியும். யாருக்குமே சொல்ல தெரியலன்னு சொல்லாத, நீ ஏன் சொல்லல?
அம்மாவ பத்தி கேட்டீயா?
நீ அழுதா உடனே உனக்கு ஓட்டு போட்டு காப்பாத்திடுவாங்களா? நீ பண்றதுக்கெல்லாம் நான் பண்றது கம்மி. ஒரு நாளாவது, அம்மா எப்படி இருப்பாங்கன்னு பிக்பாஸ்க்கிட்ட கேட்டிருப்பியாடீ? உன் மேல அவ்வளவு வெறுப்பு இருந்தும் அம்மா பாட்டு போட்டதும் அழுதேன்.
மூஞ்ச பார்த்தா காண்டாகுது?
இது என்ன ஜோடி நம்பர் ஒன்னுன்னு நினைச்சீயா? நான் கேட்குறதுக்கு பதில் சொல்லு வீட்ல அப்பா என்ன நினைப்பாங்க? ஊர்ல நம்ம சொந்தக்காரங்கலாம் என்ன நினைப்பாங்கன்னு தோனுச்சா உனக்கு. நீ பேசு இல்லாட்டி நான் உள்ளே போய் பேசுவேன். உன் மூஞ்ச பார்த்தா இன்னும் காண்டாகுது. ஃபேக்கா அழுது நடிக்காத.. என்று கூறியப்படி உள்ளே எழுந்து சென்றார்.
-
என்னது விக்ரம் நடித்த மெகா ஹிட் படத்தில் நடிக்க வேண்டியது அந்த நடிகரா?.. செமயா இருந்திருக்குமே
-
என்னை அரசியலுக்கு வரவிடாதீங்க.. நீங்க நல்லது செய்யுங்க.. நான் நடிச்சுட்டு போய்டுவேன்.. விஷால் பேட்டி!
-
நான் பிச்சை எடுத்தாலும் மக்களுக்கான சேவை தொடர்ந்து செய்வேன்! நடிகர் பாலா உருக்கமான பேட்டி!