Don't Miss!
- Technology ஒரு டிவிக்கு 2 டிவி ஆர்டர்.. 36 சதவீதம் டிஸ்கவுண்ட்.. ரூ.10,999-க்கு QLED டிவி.. டால்பி ஆடியோ.. எங்கு விற்பனை?
- News கார்த்தி சிதம்பரத்துக்கு குட்நியூஸ்.. பாஸ்போர்ட்டை 10 ஆண்டு புதுப்பித்து வழங்க ஹைகோர்ட் உத்தரவு
- Sports அரசியலில் குதிக்க போகும் சானியா மிர்சா.. மக்களுக்கு சேவை செய்ய திட்டம்.. எந்த கட்சி தெரியுமா?
- Lifestyle பழங்கால போட்டோக்களில் யாராவது சிரிச்சு நீங்க பாத்திருக்கீங்களா? பார்த்திருக்க வாய்ப்பேயில்லை... ஏன் தெரியுமா?
- Finance சென்செக்ஸ்: வருடத்தின் கடைசி நாள் ரூ.128.8 லட்சம் கோடி லாபம்.. பண மழையில் முதலீட்டாளர்கள்..!!
- Travel 2050 வருஷம் வருறதுக்குள்ள உலகத்துல உள்ள இந்த அழகான இடங்கள் எல்லாம் கடலுக்குள்ள போயிடுமாம்!
- Automobiles மாருதியின் இந்த கார்களின் டேங்கை ஃபுல் பண்ணா 1,200கிமீ போகலாமா.. இதுக்காக பிரச்சாரம் செய்யவே தொடங்கிட்டாங்க!
- Education ஆஸ்திரேலியாவில் உயர்கல்வி பயில இந்திய மாணவர்கள் விரும்புவது ஏன்?
ஆமிர் கான், ஷீனா விவகாரத்தைவிட சென்னை வெள்ளம் முக்கியம்! - தேசிய ஊடகங்களைச் சாடும் சித்தார்த்!
தேசிய ஊடகங்களே, தமிழ்நாடும் இந்தியாவின் ஒரு பகுதிதானே? - சித்தார்த் அதிரடி
சென்னை: ஆமிர் கான், ஷீனா போரா விவகாரங்களை விட, தமிழகத் தலைநகரான சென்னை வெள்ளத்தில் மூழ்கியிருப்பது முக்கியச் செய்தி. அதற்கு முக்கியத்துவம் அளிக்காதது ஏன்? என்று நடிகர் சித்தார்த் தேசிய ஊடகங்களைச் சாடியுள்ளார்.
கடந்த சில நாட்களாக சென்னையில் கடும் மழை பெய்து வருகிறது. இதனால் சென்னையில் உள்ள பல பகுதிகளில் வெள்ளம் சூழ்ந்து, இயல்பு வாழ்க்கை மிகவும் பாதிக்கப்பட்டு இருக்கிறது.
சென்னை கிட்டத்தட்ட மழை வெள்ளத்தில் மிதக்கிறது என்றால் மிகையல்ல. வரலாறு காணாத இந்த மழை வெள்ளம் குறித்து, மாநில அளவில் உள்ள ஊடகங்கள்தான் அதிக செய்திகள் வெளியிடுகின்றன. மக்களை எச்சரிக்கின்றன.
ஆனால் தேசிய ஊடகங்கள் இதனை ஒரு பொருட்டாகவே கருதவில்லை.
இதனைக் கண்டித்துள்ள நடிகர் சித்தார்த் தனது ட்விட்டர் பக்கத்தில் குறிப்பிடும்போது, "தேசிய ஊடங்களே.. தமிழக தலைநகர் சென்னை வெள்ளத்தில் மிதக்கிறது. சென்னையும் இந்தியாவைச் சேர்ந்தது தான்.
அமீர்கான், ஷீனா போரா விஷயங்களை விட இது முக்கியம். எங்களையும் பாருங்கள், எங்களைப் பற்றியும் பேசுங்கள், இப்போதாவது!" என்று கண்டித்துள்ளார்.
சித்தார்த்தின் இந்தக் கருத்துக்கு ஏக ஆதரவு குவிந்துள்ளது. லைக்குகளும் ரீட்வீட்களும் அதிகரித்து வருகின்றன.