Don't Miss!
- News பொத்தென விழுந்த மேற்கூரை.. 3 பேரை அமுக்கி கொன்ற சென்னை பப் விபத்து பற்றி காவல்துறை விளக்கம்
- Automobiles உலகின் தலை சிறந்த கார் எது தெரியுமா? விருதை தட்டி சென்ற கியா தயாரிப்பு! சும்மா ஒன்னும் இதை தூக்கி கொடுத்திடல..
- Sports ரிஷப் பண்ட்க்கு 2 முறையும் லக் இல்ல.. தொடர்ந்து 2வது வெற்றியை பெற்ற ராஜஸ்தான்.. ரியான்,ஆவேஷ் அபாரம்
- Lifestyle வரப்போகிற சூரிய கிரகணம் இந்த 4 ராசிக்காரங்களுக்கு பெரிய துரதிர்ஷ்டத்தை தரப்போகுதாம்..ரொம்ப ஜாக்கிரதையா இருங்க!
- Education யுபிஎஸ்சி ஐஎஃப்எஸ் தேர்வு நேர்காணல் தேதி அறிவிப்பு
- Travel டைட்டானிக் கப்பல் மூழ்கி இருக்கலாம் – ஆனால் அதைப் பற்றிய சுவாரஸ்யமான உண்மைகள் மறையாது!
- Technology குறைஞ்சது 4 -5 நாள் ஆகும்.. கடைசி நேரத்துல அலையாதீங்க.. Voter ID-க்கான முக்கிய வேலை.. உடனே செஞ்சிடுங்க!
- Finance தொழில்நுட்ப துறையில் தொடரும் பணிநீக்கம்.. பெரு நிறுவனங்களின் அதிரடி முடிவுக்கு காரணம் என்ன?..
திரைத் துளி
நடிகர் திலகம் சிவாஜி கணேசன் கலையுலகில் நுழைந்து 50 ஆண்டுகள் முடிவடைந்ததையொட்டி ஏவி.எம்.நிறுவனத்தில் அவருக்கு சிலையுடன் கூடிய நினைவுச் சின்னம் அமைக்கப்பட்டுள்ளது.
சிவாஜி கணேசன் நடித்த முதல் படம் "பராசக்தி". ஏவி.எம். நிறுவனம் தயாரித்த இந்தப் படம் எடுக்கப்பட்டு 50ஆண்டுகள் ஆவதையொட்டி அவருடைய சிலையுடன் கூடிய நினைவுச் சின்னம் அமைக்கப்பட்டுள்ளது.
"பராசக்தி" படத்தில் சிவாஜி பேசும் முதல் டயலாக்கான "சக்ஸஸ்" என்ற வசனத்தை ஏவி.எம். ஸ்டூடியோவில் அவர்பேசிய இடத்தில் தான் இந்த நினைவுச் சின்னம் அமைக்கப்பட்டுள்ளது.
நினைவுச் சின்னத்தின் மேல் சிவாஜியின் சிலை அமைக்கப்பட்டுள்ளது. அதற்குக் கீழே "பராசக்தி" படத்தில்பங்காற்றிய அத்தனை கலைஞர்களின் பெயர்களும் இடம் பெற்றுள்ளன.
இந்த நினைவுச் சின்னத்தை நடிகர் கமல்ஹாசன் திறந்து வைத்தார். சிவாஜியின் மகன்கள் நடிகர் பிரபு, ராம்குமார்,ஏவி.எம்.சரவணன் உள்ளிட்டோர் நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர். கமல் கூறுகையில்,
ஏவி.எம். நிறுவனத்தின் மூத்த பிள்ளையான சிவாஜியின் சிலையை இளைய பிள்ளையான நான் திறந்து வைப்பதுபெரும் மகிழ்ச்சியைத் தருகிறது.
நடிகர் திலகத்திற்கு உரிய மரியாதையை ஏவி.எம். நிறுவனம் தக்க சமயத்தில் செய்துள்ளது என்றார் கமல்.