Don't Miss!
- Sports IPL Classics - 2010 சீசன் அரையிறுதியில் CSK வென்றது எப்படி? பலம் வாய்ந்த டெக்கான் அணியுடம் மோதிய கதை
- News வேகும் வெயிலிலும்.. "வெறுப்புக்கு" ஓட்டு போடாதீர்கள் பதாகையுடன்.. தெரு தெருவாக சுற்றும் முதியவர்
- Technology BSNL தான்யா டாப்பு.. Jio-வுக்கும் Airtel-லுக்கும் ஆப்பு.. 200 ரூபாய்க்குள் 70 நாள் வேலிடிட்டி.. எந்த திட்டம்?
- Lifestyle கால்களில் இந்த அறிகுறிகள் தெரியுதா? அப்ப சிறுநீரக நோய் இருக்கு-ன்னு அர்த்தம்.. உஷார்...
- Finance 6 மாதங்களில் 73% வளர்ச்சி.. ஜியோ ஃபைனான்சியல் சர்வீசஸ் பங்குகள் அள்ளிக் கொடுத்த லாபம்..!
- Travel இந்தியாவில் உள்ள புனிதமான காடுகள் – வாழ்வில் ஒரு முறையேனும் இந்த காடுகளுக்கு செல்ல வேண்டும்!
- Education சென்னை ஏர்போர்ட்டில் பணிபுரிய ஆசையா...!
- Automobiles அரபு நாடுகளுக்கு ஆப்பு வைக்கும் இந்தியா... அவங்க பொழப்புல மொத்தமா மண்ணை அள்ளி போட்டுட்டாங்க...
அடித்து உதைத்து மருத்துவமனையில் சேர்த்துவிட்டு ஓடிய மகன்: பிரபல நடிகை கண்ணீர்
மும்பை: பாலிவுட் நடிகை கீதா கபூரை அவரது மகன் ராஜா அடித்து கொடுமைப்படுத்தியதுடன் மருத்துவமனையில் சேர்த்துவிட்டு எஸ்கேப் ஆகிவிட்டார்.
பகீஜா படப் புகழ் பாலிவுட் நடிகை கீதா கபூர் பெற்ற பிள்ளைகளால் கைவிடப்பட்டுள்ளார். அவருக்கு ராஜா என்ற மகனும், பூஜா என்ற மகளும் உள்ளனர்.
இந்நிலையில் கீதா கபூரின் உடல்நலம் பாதிக்கப்பட்டது.
மருத்துவமனை
ராஜா தனது தாய் கீதா கபூரை மும்பையில் உள்ள மருத்துவமனையில் அனுமதித்துவிட்டு ஏடிஎம்மில் பணம் எடுத்து வருவதாகக் கூறி சென்றவர் வரவே இல்லை. அவரது செல்போனுக்கு கால் செய்தும் பலனில்லை.
மகள்
கீதா கபூரின் மகள் பூஜாவுக்கு தொடர்ந்து போன் செய்தும் அவரும் எடுக்கவில்லை. இதையடுத்து மருத்துவமனை கீதா கபூருக்கு சிகிச்சையை துவங்கியது.
ரூ. 1. 5 லட்சம்
கீதாவுக்கு சிகிச்சை அளித்த பில் ரூ. 1. 5 லட்சம் வந்தது. இந்த செலவை சென்சார் போர்டு உறுப்பினர் அசோக் பண்டிட் மற்றும் தயாரிப்பாளர் ரமேஷ் தாராணி ஆகியோர் ஏற்றுக் கொண்டுள்ளனர். கீதா தனது பிள்ளைகளால் கைவிடப்பட்டது பாலிவுட்காரர்களை அதிர்ச்சி அடைய வைத்துள்ளது.
முதியோர் இல்லம்
ராஜா தனது தாய் கீதாவை முதியோர் இல்லத்திற்கு செல்லுமாறு கூற அவர் மறுத்துள்ளார். இதையடுத்து ராஜா கீதாவை அடித்து உதைத்து, நான்கு நாட்களுக்கு ஒரு முறை உணவு அளித்து, அறையில் பூட்டி வைத்து கொடுமைப்படுத்தியுள்ளார். இதில் கீதாவுக்கு உடல்நலம் பாதிக்கப்பட்டவுடன் மருத்துவமனையில் சேர்த்துவிட்டு ராஜா ஓடிவிட்டார்.