அப்படி என்னங்கப்பா இது உலக மகா கதை....!
மும்பை: மராத்தி மொழியில் எடுக்கப்படவுள்ள "கண்டிப்பாக வயது வந்தோருக்கான" படம் ஒன்றில் சன்னி லியோன் நடிக்கப் போவதாக தகவல்கள் பரவியுள்ளன. ஆனால் இதுவரை சன்னி லியோன் தரப்பிலிருந்து எந்தத் தகவலும் இல்லை.
இந்தப் படத்தை ஷாலா என்ற தேசிய விருது பெற்ற படத்தை இயக்கியவரான சுஜய் தஹாக்கே இயக்குகிறார். இப்படத்தின் கதையை ரெடி செய்தபோதே அதில் சன்னி லியோனைத்தான் நடிக்க வைப்பது என்று முடிவு செய்து விட்டாராம் சுஜய்.
கடந்த ஒரு வருடமாக இவர் படம் எதையும் இயக்காமல் இந்தப் படத்தின் கதையை தயாரித்து வந்தாராம். தற்போது களத்தில் குதிக்க முடிவு செய்து விட்டார். தனது படத்தில் நடிக்க வேண்டும் என்று கோரி சன்னி லியோனை அணுகியுள்ளாராம் சுஜய்.

வல்கர் ஆக்டிவிட்டிஸ் இன்கார்ப் என்பதுதான் படத்தின் தலைப்பு. செக்ஸ், ஆபாசம் மற்றும் ஆபாச வக்கிரம் ஆகியவைதான் இந்தப் படத்தின் கதைக் கரு. இதைச் சுற்றித்தான் இந்தப் படத்தின் கதையை வடிவமைத்துள்ளாராம் சுஜய்.
சன்னி நடிப்பது குறித்து சுஜய் கூறுகையில், சன்னி லியோனின் கணவர் டேணியல் வெப்பர் மூலமாக சன்னியுடன் பேசி வருகிறேன். படம், கதை குறித்து அவருக்கு மெயில் அனுப்பியுள்ளேன். இந்தப் படத்தை ஆங்கிலம் அல்லது இந்தி அல்லது ஹிங்கிலிஷ் என எந்த மொழியிலும் இயக்கத் தயாராக இருக்கிறேன். முதலில் மராத்தியில் இது தயாராகும். இந்தப் படத்தின் கதை சர்வதேச பொருள். எனவே எந்த மொழியில் வேண்டுமானாலும் இதை உருவாக்க முடியும்.
இன்னும் 15 நாளில் பதில் சொல்வதாக வெப்பர் பதில் அனுப்பியுள்ளார். தற்போது சன்னி தம்பதியினர் விடுமுறையில் உள்ளனர். திரும்பி வந்ததும் பதிலளிப்பார்கள் என்று நம்புகிறேன்.
இந்தக் கதையை சன்னியை வைத்துத்தான் நான் உருவாக்கியுள்ளேன். ஒரு வேளை சன்னி மறுத்து விட்டால் இந்தப் படத்தை இயக்குவதா, இல்லையா என்பது குறித்து நான் இன்னும் யோசிக்கவில்லை என்றார் சுஜய்.
அப்படி என்னங்கய்யா உலக மகா கதை....!


Click it and Unblock the Notifications











