Don't Miss!
- Sports SRH vs RCB: இந்த தங்கத்த தூக்குங்க.. ஆர்சிபியை அலறவிட்ட தமிழக வீரர்.. நடராஜனால் மிரண்ட கம்மின்ஸ்!
- News தமிழகத்தில் உச்சம் தொடும் கோடை வெப்பம்.. திடீரென முதல்வர் ஸ்டாலின் வெளியிட்ட அறிக்கை.. என்ன மேட்டர்
- Lifestyle இந்த பட்டனை அழுத்தினால் கார் உடனடியாக கூலிங் ஆகிடும்... இது பலருக்கும் தெரியாத விஷயம்..!
- Automobiles 5 வருஷத்துக்கு எந்தவொரு பிரச்சனையும் இல்லாமல் ஓட்டலாம்!! வாரண்டியை வாரி வழங்கும் இவி நிறுவனம்!
- Technology BSNL தான்யா டாப்பு.. Jio-வுக்கும் Airtel-லுக்கும் ஆப்பு.. 200 ரூபாய்க்குள் 70 நாள் வேலிடிட்டி.. எந்த திட்டம்?
- Finance 6 மாதங்களில் 73% வளர்ச்சி.. ஜியோ ஃபைனான்சியல் சர்வீசஸ் பங்குகள் அள்ளிக் கொடுத்த லாபம்..!
- Travel இந்தியாவில் உள்ள புனிதமான காடுகள் – வாழ்வில் ஒரு முறையேனும் இந்த காடுகளுக்கு செல்ல வேண்டும்!
- Education சென்னை ஏர்போர்ட்டில் பணிபுரிய ஆசையா...!
துபாயில் திரையிடப்பட்ட ‘சி 3' சிறப்புக் காட்சி - சூர்யா பங்கேற்பு!
சூர்யா நடிப்பில், ஹரி இயக்கத்தில் உருவாகியுள்ள படம் 'சி 3' (சிங்கம் 3) உலகம் முழுவதும் சமீபத்தில் வெளியாகி ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றுள்ள இப்படத்தின், முதல் சிறப்புக் காட்சி துபாயில் திரையிடப்பட்டது. இந்த நிகழ்வில் நடிகர் சூர்யா பங்கேற்று, ரசிகர்களுடன் சேர்ந்து படம் பார்த்து குதூகலப்படுத்தினார்.
ஹயாட் ரீஜென்சியில் உள்ள ஸ்டார் கலேரியா சினிமாஸ் அரங்கில் நடைபெற்ற இந்த முதல் காட்சி திரையிடல் நிகழ்ச்சியை எஃப்டிபி அட்வர்டைசிங் மற்றும் யெஸ் ஈவண்ட்ஸ் நிறுவனங்கள் ஏற்பாடு செய்திருந்தன.
இந்த நிகழ்வில் பங்கேற்ற ஏராளமான ரசிகர்கள் மற்றும் பொது மக்கள் முன்னிலையில் படம் குறித்துப் பேசியதோடு, அவர்களின் கேள்விகளுக்கும் பதில் சொன்ன சூர்யா, அவர்களுடன் சேர்ந்து படத்தையும் பார்த்து ரசிகர்களை மகிழ்ச்சி கடலில் தள்ளியது.
கடந்த 2013 ஆம் ஆண்டில் வெளியான சிங்கம் 2 படத்தின் தொடர்ச்சியாகவும் சிங்கம் என்ற பெயரில் தொடர்ந்து வெளிவரும் வரிசையில் 3 வது திரைப்படமாகவும் சி 3 வெளிவந்திருக்கிறது. அதிரடி காவல்துறை அதிகாரியாக சூர்யா நடித்து மிக அதிகமாக எதிர்பார்க்கப்படுகின்ற இந்த திரைப்படமானது, கடந்த 9 ஆம் தேதியன்று ஐக்கிய அரபு அமீரகத்தில் முதல் காட்சியாக திரையிடப்பட்டது. இது ஹரி - சூர்யா கூட்டணியில் உருவாகியுள்ள 5 வது படம்.